பலரும் அனிதாவின் மரணத்தை உள்ளார விரும்புவதை நான் கவனிக்கிறேன். நமக்கு அரசியல் பதாகையாக மனித உயிர்கள் தேவைப்படுகின்றன. அதை உயிர்க்கொடை என்கிறோம். ஏன் தலைவர்கள் எப்போதும் உயிர்க்கொடை செய்வதில்லை என யோசித்திருக்கிறோமா? இங்கு உயிர்க்கொடை பற்றி பேசுபவர்களில் எத்தனை பேர் இந்த நொடி நீட்டுக்காக உயிர் விட தயாராக இருக்கிறீர்கள்? இன்னொருவர் அதை செய்ய வேண்டும் என ஏன் கோருகிறீர்கள்?
அரசியலுக்காக உயிர் விடுவதை கொண்டாடும் நமக்கும் கெடா வெட்டி சாமி கும்பிடும் எளிய மக்களுக்கும் என்ன வித்தியாசம்? அங்கே கடவுள் என்றால் இங்கே லட்சியம். அவ்வளவு தானே?
நீங்கள் இதை கொண்டாட கொண்டாட, இதை உயிர்த்தியாகம் என மகத்துவப் படுத்த படுத்த, மேலும் பல அனிதாக்கள் எதிர்காலத்தில் உயிர்விட தூண்டப்படுவார்கள். ஒரு நாகரிக சமூகம் இதை ஒரு போதும் செய்யாது!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments