பலரும் அனிதாவின் மரணத்தை உள்ளார விரும்புவதை நான் கவனிக்கிறேன். நமக்கு அரசியல் பதாகையாக மனித உயிர்கள் தேவைப்படுகின்றன. அதை உயிர்க்கொடை என்கிறோம். ஏன் தலைவர்கள் எப்போதும் உயிர்க்கொடை செய்வதில்லை என யோசித்திருக்கிறோமா? இங்கு உயிர்க்கொடை பற்றி பேசுபவர்களில் எத்தனை பேர் இந்த நொடி நீட்டுக்காக உயிர் விட தயாராக இருக்கிறீர்கள்? இன்னொருவர் அதை செய்ய வேண்டும் என ஏன் கோருகிறீர்கள்?
அரசியலுக்காக உயிர் விடுவதை கொண்டாடும் நமக்கும் கெடா வெட்டி சாமி கும்பிடும் எளிய மக்களுக்கும் என்ன வித்தியாசம்? அங்கே கடவுள் என்றால் இங்கே லட்சியம். அவ்வளவு தானே?
நீங்கள் இதை கொண்டாட கொண்டாட, இதை உயிர்த்தியாகம் என மகத்துவப் படுத்த படுத்த, மேலும் பல அனிதாக்கள் எதிர்காலத்தில் உயிர்விட தூண்டப்படுவார்கள். ஒரு நாகரிக சமூகம் இதை ஒரு போதும் செய்யாது!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்