ரஜினி என்னும் நடிகனைப் பற்றிய கட்டுரைகள் மிகக் குறைவு. சிலகம்மா செப்பிந்தி காலத்திலேயே நிறைய எழுதப்பட்டிருக்க வேண்டும். ரஜினியின் ஆப் ஸ்கிரீன் இமேஜ், அரசியல் பற்றிய ஆயிரக்கணக்கான கவர் ஸ்டோரிகளுக்கு நடுவே ரஜினி என்னும் நடிப்பு வசீகரனைப் பற்றி யாரும் எழுத நினைத்ததில்லை. சுஜாதா, பாலகுமாரன், விசிட்டர் ஆனந்த் போன்றோர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் லேட்டாக இணைந்திருக்கிறார் அபிலாஷ். குமுதத்தில் வெளியாகியிருககும் கட்டுரை, இன்னொரு மாஸ்டர் பீஸ்! ரஜினியின் சினிமா பற்றி இன்னும் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் அபிலாஷ். பாராட்டை விட முதலில் நெஞ்சார்ந்த நன்றிகளை் சொல்லிவிடவேண்டும். Abilash Chandran மிக்க நன்றி!
இப்படிக்கு
ராம்கி. கெ
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்