முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ என்னை மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா

 Image result for neruda
நீ அறிந்திருக்க வேண்டும்
ஒன்றை.

உனக்குத் தான் தெரியுமே:
படிக நிலவை நான் பார்த்தேன் எனில்,
என் ஜன்னல் வழி, சன்னமாய் நகரும் இலையுதிர் காலத்தின்
சிவப்புக் கிளையை நான் பார்த்தேன் எனில்
தீயின் அருகாமையில் தொடவே முடியாத
அந்த சாம்பலை தீண்டினேன் எனில்
அல்லது மரக்கட்டையின் நெளிசருமத்தை தொட்டேன் எனில்,
எல்லாமே என்னை அள்ளிச் சென்று சேர்க்கும் உன்னிடம்,
ஏதோ இங்குள்ள ஒவ்வொன்றுமே,
வாசனைகள், ஒளி, உலோகங்கள்,
எனக்காய் காத்திருக்கும் உனது சிறிய தீவுகளுக்கு
செல்லும் சின்னஞ்சிறு படகுகள் என்பது போல்.


ஆனால் இப்போது
கொஞ்ச கொஞ்சமாய் நீ என்னை காதலிப்பதை நிறுத்துவாய் எனில்
நானும் நிறுத்துவேன் உன்னை காதலிப்பதை கொஞ்ச கொஞ்சமாய்.

திடீரென
 நீ என்னை மறந்தாய் எனில்
என்னைத் தேடாதே,
ஏனெனில் நான் உன்னை ஏற்கனவே மறந்து போயிருப்பேன்.

நீ இதைப் பற்றி சாவகாசமாய் யோசித்தாய் எனில்
என் வாழ்வின் ஊடாய் கடந்து போகும் புயலின் போர்ப் பதாகைகளை கருத்திற் கொண்டாய் எனில்
அதோடு நீ என்னை என் வேர்கள் ஓடும்
இதயத்தின் கரையில் கைவிட
முடிவெடுத்தால் எனில்,
நினைவு கொள்
அந்த நாளில்
அந்த மணிப்பொழுதில்,
நான் என் கைகளை உயர்த்துவேன்
அப்போது என் வேர்கள் நீந்தித் தேடிச் செல்லும்
ஒரு புது நிலத்தை.

ஆனால்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிநேரமும்,
நீ எனக்கே ஆனவள்
என நீங்காத இனிமையுடன் உணர்ந்தாய் எனில்,
ஒவ்வொரு நாளும்
ஒரு மலர் என்னைத் தேடி
உன் உதட்டை நோக்கி ஏறும் எனில்,
என் காதலே, எனக்கே எனக்கானவளே,
எனக்குள் அந்த நெருப்பு மீண்டும் கிளர்ந்தெழும்,
எனக்குள் எதுவுமோ அணையவில்லை அல்லது மறக்கப்படவில்லை,
என் பிரியம் உன் நேசத்தில் முலைகுடிக்கிறதடி, அன்பே,
நீ வாழும் வரை அது உன் கரங்களில் தவழும்
என்னை தனித்து விடாமல்.

(தமிழில் ஆர். அபிலாஷ்)








                    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...