முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ என்னை மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா

 Image result for neruda
நீ அறிந்திருக்க வேண்டும்
ஒன்றை.

உனக்குத் தான் தெரியுமே:
படிக நிலவை நான் பார்த்தேன் எனில்,
என் ஜன்னல் வழி, சன்னமாய் நகரும் இலையுதிர் காலத்தின்
சிவப்புக் கிளையை நான் பார்த்தேன் எனில்
தீயின் அருகாமையில் தொடவே முடியாத
அந்த சாம்பலை தீண்டினேன் எனில்
அல்லது மரக்கட்டையின் நெளிசருமத்தை தொட்டேன் எனில்,
எல்லாமே என்னை அள்ளிச் சென்று சேர்க்கும் உன்னிடம்,
ஏதோ இங்குள்ள ஒவ்வொன்றுமே,
வாசனைகள், ஒளி, உலோகங்கள்,
எனக்காய் காத்திருக்கும் உனது சிறிய தீவுகளுக்கு
செல்லும் சின்னஞ்சிறு படகுகள் என்பது போல்.


ஆனால் இப்போது
கொஞ்ச கொஞ்சமாய் நீ என்னை காதலிப்பதை நிறுத்துவாய் எனில்
நானும் நிறுத்துவேன் உன்னை காதலிப்பதை கொஞ்ச கொஞ்சமாய்.

திடீரென
 நீ என்னை மறந்தாய் எனில்
என்னைத் தேடாதே,
ஏனெனில் நான் உன்னை ஏற்கனவே மறந்து போயிருப்பேன்.

நீ இதைப் பற்றி சாவகாசமாய் யோசித்தாய் எனில்
என் வாழ்வின் ஊடாய் கடந்து போகும் புயலின் போர்ப் பதாகைகளை கருத்திற் கொண்டாய் எனில்
அதோடு நீ என்னை என் வேர்கள் ஓடும்
இதயத்தின் கரையில் கைவிட
முடிவெடுத்தால் எனில்,
நினைவு கொள்
அந்த நாளில்
அந்த மணிப்பொழுதில்,
நான் என் கைகளை உயர்த்துவேன்
அப்போது என் வேர்கள் நீந்தித் தேடிச் செல்லும்
ஒரு புது நிலத்தை.

ஆனால்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிநேரமும்,
நீ எனக்கே ஆனவள்
என நீங்காத இனிமையுடன் உணர்ந்தாய் எனில்,
ஒவ்வொரு நாளும்
ஒரு மலர் என்னைத் தேடி
உன் உதட்டை நோக்கி ஏறும் எனில்,
என் காதலே, எனக்கே எனக்கானவளே,
எனக்குள் அந்த நெருப்பு மீண்டும் கிளர்ந்தெழும்,
எனக்குள் எதுவுமோ அணையவில்லை அல்லது மறக்கப்படவில்லை,
என் பிரியம் உன் நேசத்தில் முலைகுடிக்கிறதடி, அன்பே,
நீ வாழும் வரை அது உன் கரங்களில் தவழும்
என்னை தனித்து விடாமல்.

(தமிழில் ஆர். அபிலாஷ்)








                    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...