முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்


Image result for hope paintings

என் கல்லூரியில் ஒரு வயதான பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ஓய்வுக்கான வயது வந்து விட்டது. அதனால் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர் மிகவும் உடைந்து போய் விட்டார். இன்னும் சில வருடங்கள் கூடுதலாய் வேலை செய்ய முடியாதா என ஏங்குகிறார். அந்த ஏக்கத்தில் இன்னும் சில வருடங்கள் மும்முரமாய் வாழ வேண்டும் எனும் ஆர்வமும் இருக்கிறது.

 எனக்கு இச்சேதியை கேள்விப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமை ஏற்படும். அவருக்கு பாதி வயதே இருக்கும் எனக்கு இப்போதே எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாம் என தோன்றுகிறது. இனிமேல் வாழ்ந்து பார்க்க என்ன இருக்கிறது, இனிமேல் எல்லாமே துன்பம் தானே என கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவருக்கோ வாழ்க்கை மீது அப்படி ஒரு பிடிப்பு இப்போதும் உள்ளது.
என் பாட்டி 89 வயதில் சமீபத்தில் இறந்தார். சரியான கவனிப்பு இருந்திருந்தால் அவர் 120 வயது வரை வாழ்ந்திருப்பார். அவர் வாழ்வில் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை. தன் சொத்துக்களை விற்றழித்து விட்டு குழந்தைகளை அண்டி அதிக கௌரவமில்லாமல் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வந்தார். அதாவது ஒரு ஆயிரம் முறை தற்கொலை செய்திருக்க வேண்டிய வாழ்க்கை அவருடையது. ஆனால் அது குறித்த கசப்பு அவரது அன்றாட மகிழ்ச்சியை குலைத்ததில்லை. தினமும் நல்ல சாப்பாடு, உறக்கம், அடுத்த நாள் குறித்தான எதிர்பார்ப்புகள், சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றும் கனவுகள் என வாழ்ந்திருக்கிறார். இன்றைய பதின்வயதுப் பெண்ணுக்குக் கூட இப்படியான ஒரு நிறைவு இருக்காது.
 இது அந்த பேராசிரியர் மற்றும் என் பாட்டியின் தலைமுறையினருக்கே உரித்தான ஒரு அபூர்வ சுபாவம். 110 வயது ஆனாலும் அதே ஆர்வத்துடன் வாழத் தலைப்படுவார்கள். மகிழ்ச்சியான அடித்தளங்கள், சமூக கட்டுமானங்கள் அவர்கள் வாழ்வில் நிலைக்கின்றன. அவர்கள் முழுக்க கைவிடப்படுவதில்லை. அவர்களே விரும்பாவிட்டாலும் அவர்கள் தனித்து விடப்படுவதில்லை. அவர்களுக்கு வீடு திரும்பினால் யாரோ இருக்கிறார்கள்; வாழ்வில் அவர்களை எதிர்பார்த்து, அவர்களால் அர்த்தம் பெறும் யாரோ காத்திருக்கிறார்கள். இது அத்தலைமுறையினரின் பெரிய அதிர்ஷ்டம்.
எனக்கு அப்பேராசிரியரைப் போல் ஒரு ஏமாற்றம் வாய்த்திருந்தால் இது தான் சாக்கு என எட்டாவது மாடியில் இருந்து குதித்திருப்பேன். ஏனெனில் நான் வாழ்க்கை முடிந்த பின் அதை வாழ முயலும் தலைமுறை. அவரோ வாழ்க்கை முடிந்தாலும் இறுதி மூச்சு வரை அது முடியவில்லை என நம்பி முன்னேகும் ஒரு தலைமுறை. அசோகமித்திரனின், சு.ராவின் தலைமுறை.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Same Blood...I too got Jealous on them....
But, I am happy that We atleast belong to a generation who are eye-witnessing and living with them....
In our generation and future....we will be telling our future about the extinct generation....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...