முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்


Image result for hope paintings

என் கல்லூரியில் ஒரு வயதான பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ஓய்வுக்கான வயது வந்து விட்டது. அதனால் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர் மிகவும் உடைந்து போய் விட்டார். இன்னும் சில வருடங்கள் கூடுதலாய் வேலை செய்ய முடியாதா என ஏங்குகிறார். அந்த ஏக்கத்தில் இன்னும் சில வருடங்கள் மும்முரமாய் வாழ வேண்டும் எனும் ஆர்வமும் இருக்கிறது.

 எனக்கு இச்சேதியை கேள்விப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமை ஏற்படும். அவருக்கு பாதி வயதே இருக்கும் எனக்கு இப்போதே எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாம் என தோன்றுகிறது. இனிமேல் வாழ்ந்து பார்க்க என்ன இருக்கிறது, இனிமேல் எல்லாமே துன்பம் தானே என கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவருக்கோ வாழ்க்கை மீது அப்படி ஒரு பிடிப்பு இப்போதும் உள்ளது.
என் பாட்டி 89 வயதில் சமீபத்தில் இறந்தார். சரியான கவனிப்பு இருந்திருந்தால் அவர் 120 வயது வரை வாழ்ந்திருப்பார். அவர் வாழ்வில் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை. தன் சொத்துக்களை விற்றழித்து விட்டு குழந்தைகளை அண்டி அதிக கௌரவமில்லாமல் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வந்தார். அதாவது ஒரு ஆயிரம் முறை தற்கொலை செய்திருக்க வேண்டிய வாழ்க்கை அவருடையது. ஆனால் அது குறித்த கசப்பு அவரது அன்றாட மகிழ்ச்சியை குலைத்ததில்லை. தினமும் நல்ல சாப்பாடு, உறக்கம், அடுத்த நாள் குறித்தான எதிர்பார்ப்புகள், சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றும் கனவுகள் என வாழ்ந்திருக்கிறார். இன்றைய பதின்வயதுப் பெண்ணுக்குக் கூட இப்படியான ஒரு நிறைவு இருக்காது.
 இது அந்த பேராசிரியர் மற்றும் என் பாட்டியின் தலைமுறையினருக்கே உரித்தான ஒரு அபூர்வ சுபாவம். 110 வயது ஆனாலும் அதே ஆர்வத்துடன் வாழத் தலைப்படுவார்கள். மகிழ்ச்சியான அடித்தளங்கள், சமூக கட்டுமானங்கள் அவர்கள் வாழ்வில் நிலைக்கின்றன. அவர்கள் முழுக்க கைவிடப்படுவதில்லை. அவர்களே விரும்பாவிட்டாலும் அவர்கள் தனித்து விடப்படுவதில்லை. அவர்களுக்கு வீடு திரும்பினால் யாரோ இருக்கிறார்கள்; வாழ்வில் அவர்களை எதிர்பார்த்து, அவர்களால் அர்த்தம் பெறும் யாரோ காத்திருக்கிறார்கள். இது அத்தலைமுறையினரின் பெரிய அதிர்ஷ்டம்.
எனக்கு அப்பேராசிரியரைப் போல் ஒரு ஏமாற்றம் வாய்த்திருந்தால் இது தான் சாக்கு என எட்டாவது மாடியில் இருந்து குதித்திருப்பேன். ஏனெனில் நான் வாழ்க்கை முடிந்த பின் அதை வாழ முயலும் தலைமுறை. அவரோ வாழ்க்கை முடிந்தாலும் இறுதி மூச்சு வரை அது முடியவில்லை என நம்பி முன்னேகும் ஒரு தலைமுறை. அசோகமித்திரனின், சு.ராவின் தலைமுறை.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Same Blood...I too got Jealous on them....
But, I am happy that We atleast belong to a generation who are eye-witnessing and living with them....
In our generation and future....we will be telling our future about the extinct generation....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...