Skip to main content

Posts

Showing posts from June, 2018

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பர்வீனின் கிழங்கும் ரதியின் தொடுகையும்

“ரசிகன்” நாவலுக்கு வந்துள்ள ஒரு எதிர்வினை: வணக்கம் எழுத்தாளரே .. நலம்.   நலம் வேண்டுகிறேன். ஐந்து நாட்களாக சாதிக்குடன் பயணித்துக்கொண்டிருந்தேன் ( என் பெயர்தான் கதைசொல்லிக்கும்! ). தீவிர இலக்கியத்தில் நான் வாசித்து முடித்த இரண்டாவது நாவல் " ரசிகன் " .   பல வகைகளிலும் என்னைப் பாதித்த கதாப்பாத்திரங்கள் நாவல் முழுவதுமே இருக்கிறார்கள்.  

டென்னிஸ் (5)

விடுமுறை முடிந்த பிறகு நான் அந்த டென்னிஸ் ஆடுகளத்துக்கு செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தேன் . அவனை எங்கும் காணவில்லை . அந்த எண்ணில் அழைத்தால் பயன்பாட்டில் இல்லை . அவன் நண்பர்களும் இப்போது பயிற்சிக்கு வருவதில்லை . அவனைப் பற்றி விசாரிப்பதோ அவனைத் தேடுவதோ அர்த்தமற்றது என நினைத்தேன் . ஒருவேளை நானாக தேடிச் சென்று பின் தொடர்ந்து உறவை ஏற்படுத்தினது தான் தவறோ ? நான் இனி இயல்பாக எல்லாரையும் போல் இருக்க வேண்டுமோ ? இந்த எண்ணம் என்னை தொடர்ந்து அலைகழித்தது .

டென்னிஸ் (4)

நான் அவனது வகுப்பறை , அவன் வந்து போகும் வேளைகள் , அவன் பயிற்சிக்கு வந்து புறப்படும் நேரம் என ஒவ்வொன்றையும் அறிந்தேன் . எப்போதுமே சற்று தொலைவில் காற்தடங்கள் போல் அவனை தொடர்ந்தேன் . ஒரு மாலையில் நான் தேநீர்க் கடையில் சுவரில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் . முதல் நாளில் போன்றே அவன் அடித்த பந்து நான் அமர்ந்திருந்த வெற்று சிமிண்ட் இருக்கை அருகே உருண்டு போய் தேடி விட்டு பரிதவித்து நின்றது . “ நீ திருந்துவதாய் தெரியவில்லை . அந்த இடத்தில் யாரோ உனக்கு சூனியம் வைத்திருக்கிறார்கள் ” என்றான் அவனுடன் ஆடியவன் .

டென்னிஸ் 3

  உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன் .  அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன் .  எங்கே ?  டென்னிஸ் ஆடுகளத்தில் . அது உதைப்பந்து மைதானத்தை ஒட்டிய பூங்காவுக்குப் பின்னால் இருந்தது . அதனை ஒட்டிய வழியே சென்றால் சுலபத்தில் நூலகமும் , நான் அடிக்கடி ஹாட் சாக்லேட் அருந்தும் கடையும் வந்து விடும் . நூலகத்துக்கு முன்னால் மேலாண்மை , சட்டம் ஆகிய துறை மாணவர்களின் வகுப்பறைகள் இருந்தன . ஆகையால் அவர்களில் கணிசமானோர் ஓய்வு வேளைகளில் அந்த கடை வாயிலிலோ அல்லது ஆடுகளத்திலோ தான் இருப்பார்கள் . அவர்களுடையது ஒரு தனி உலகம் . நான் அதிகம் அங்கே செல்வதில்லை .

டென்னிஸ் (2)

நான் பின் தொடர்ந்த இன்னொரு சம்பவம் என் அப்பா சம்மந்தப்பட்டது . “ நீ தினமும் கல்லூரிக்குப் போகிறாயா ? இல்லை ஊர் சுற்றுகிறாயா ?” என காலையில் அப்பா முகம் கறுக்க கடுகடுப்பாய் கேட்டார் . நான் முனகியபடி தலையாட்டி விட்டு வந்து விட்டேன் . ஆனால் அன்று அப்பாவைப் பின் தொடர முடிவெடுத்து அவர் பின்னால் பேருந்து நிறுத்தம் வரை சென்றேன் .

டென்னிஸ் (1)

    எனக்கு ஒரு கெட்ட பழக்கம் . எல்லா கெட்ட பழக்கங்களையும் போல யாருக்கும் இதைப் பற்றித் தெரியாது . அதாவது உங்களைத் தவிர . அவனையும் தவிர . சரி , நான் கதைக்கு வருகிறேன் . நான் இப்படித் தான் - எதையும் நேரடியாய் சுருக்கமாய் சொல்லத் தெரியாது . கண்ணாடிக் குடுவைக்குள் மாட்டின பட்டாம்பூச்சி போல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பேன் .

சோகமான செக்ஸ் என்பது

ஜூலியன் பார்ன்ஸ் “சோகமான செக்ஸ் என்றால் - அவளது வாயின் டூத் பேஸ்ட் அவள் சற்று முன் அருந்தியிருந்த ஷெர்ரி வைனின் வீச்சத்தை மறைக்க முடியாது தோற்றிட, அவள் “கிறுக்கா என் பௌல், என்னை உற்சாகப்படுத்துடா” என முணுமுணுக்கையில், நீங்கள் அவ்வாறே செய்வீர்களே அது. அவ்வாறு அவளை குதூகலப்படுத்துவது உங்கள் குதூகலத்தை குறைப்பது எனப் பொருள்பட்டாலும்.

முன்பு நீங்கள் இப்படி விசாரிக்கவில்லை

  “உங்க படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்குமா?” அல்லது “கிடைப்பதில்லையா?” இக்கேள்வியை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் இருக்கும் இடம் ஒரு காரணம். இங்கு யார் தமிழில் படிக்கிறார்கள்? ஒருவிதத்தில் இப்படி ஓரிடத்தில் அந்நியமாய் வாழ்வது எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு இப்படி இருப்பதில் ஒரு அந்தரங்க உணர்வு உள்ளது. பரண் மீது சொகுசாக அமர்ந்து மீசையை நக்கும் பூனையைப் போல.

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (6)

  “ ரசம் களன்ற கண்ணாடி தெளிவாக குயில் ஓசை மட்டும் ” ·        பாஷோவின் தவளைக் கவிதையை நினைவுபடுத்தும் ஹம்ஸித்தின் ஹைக்கூ இது .

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (5)

  ஹைக்கூவில் எப்படி கருத்து சொல்வது கூடாதோ அப்படியே ஒப்பீடு , உருவகம் ஆகியவற்றுக்கும் இடமில்லை . எந்த தரப்பையும் எடுக்காமல் , எதையும் வலியுறுத்தாமல் , நியாயப்படுத்தாமல் , விளக்காமல் தர்க்க மொழியில் இடமில்லாத ஒரு தூய காட்சியை – அல்லது ஒரு படிமத்தை – சித்தரித்து விட்டு இடத்தை காலி பண்ணுவதே ஒரு சிறந்த ஹைக்கூவின் பண்பு .

யுவ புரஸ்கார் லாபியிங்

சுனில் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் வழங்கப் போகிறார்கள் எனும் வதந்தியை ஒட்டி முகநூல் இலக்கிய வட்டாரங்களில் ஒரு சர்ச்சை தீ போல் பரவி வருகிறது. தன் பெயர் இப்படி விவாதிக்கப்படுவது சுனில் கிருஷ்ணனுக்கே வியப்பேற்படுத்தக் கூடும். விருதுக்கு முன்பு இப்படி ஊகத்தின் பெயரில் விவாதங்கள் ஆரோக்கியமானதா?

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)

ஆல்பர்ட் காம்யு ஹைக்கூவும் புலன் மயக்கமும்   புலன் மயக்கத்தின் அபத்தம் இக்கவிதைகளுக்கு அபாரமான களிப்பு , மனத்திளைப்பை , வெகுளித்தனமான குதூகலிப்பை தருகிறது . அதென்ன புலன் மயக்கம் ? ஜென் நமது தர்க்கரீதியான புரிதல்கள் புலன்மயக்கத்தின் விளைவு தான் என சொல்கிறது . உதாரணமாய் , ஒரு இழப்பு நேர்கையில் நாம் ஏன் துக்கிக்கிறோம் ? அதற்கு முன் , துக்கம் என்பது ஒரு தன்னியல்பான உணர்வா ( பசி , காமம் போல )? இல்லை . பிறகு துக்கம் எப்படி உருக்கொள்கிறது ?

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (3)

பாஷோவின் ஜென்   ஹைக்கூ நம் சிந்தனையை ரத்து செய்ய கோருவது . அது நம்மை சிந்தனையற்ற , நீர் வளையங்கள் அற்ற ஒரு பரப்பிற்கு நகர்த்தும் ஒரு இலக்கிய வடிவம் . உதாரணத்திற்கு , பாஷோவின் இந்த மிகப்பிரபலமான கவிதையை பாருங்கள் . இதற்கு ஏகப்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன . நான் டியோன் ஒ ’ டொனோல் என்பவரின் மொழியாக்கத்தை எடுத்து அதை தமிழாக்கி தருகிறேன் .

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)

  ஹைக்கூவின் தத்துவம் ஹைக்கூ இவ்வாறு ஜப்பானுக்கும் ஜென் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் மட்டுமே உரித்தானதாய் இருப்பது அதை ஐரோப்பிய கவிதைப் பரப்பில் இருந்து துண்டு பட வைத்தது . நமது தமிழ் நவீன கவிதை ஐரோப்பிய நவீன கவிதையின் ஒன்று விட்ட தம்பியாக இருப்பதனால் அதற்கு ஜென் பௌத்த சாயலோ ஹைக்கூவின் தொடர்போ பெரிதாய் இல்லை . யுவன் , மனுஷ்யபுத்திரன் , தேவதச்சன் ஆகியோர் ஜென் தாக்கம் கொண்ட நவீன கவிதை எழுதியிருக்கிறார்கள் . ஆனால் ஹைக்கூ கோரும் மனநிலையில் இருந்து இக்கவிதைகளின் மனநிலை மாறுபட்டது . அது என்ன வித்தியாசம் ?

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)

முன்குறிப்பு : நண்பரும் கவிஞருமான ஜம்ஸித் ஸமான் அவரது ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்திருந்தார் . பெரும்பாலான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன . வேறு சில கவிதைகளில் அவற்றின் வடிவம் சார்ந்து மட்டும் எனக்கு அவரிடம் கூற சில கருத்துக்கள் இருந்தன . அவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என்பதால் ஸ்மானின் அனுமதி பெற்று …

கசாப்பு கடைக்காரர் - ஆகா ஷாஹித் அலி

ஜமா மஸ்ஜிதின் அருகில் உள்ள அந்த சந்தில், அவர் கிலோ கணக்கில் கறியை நாளிதழ் தாளில் பொட்டலம் கட்டிட, அவரது மணிக்கட்டில் செய்தி மை படிகிறது, அவரது உள்ளங்கையில் செய்தி வரிகள் ஈரமாய் படிகின்றன: