முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)


Image result for அப்துல் ரகுமான்

Image result for சுஜாதா

முன்குறிப்பு: நண்பரும் கவிஞருமான ஜம்ஸித் ஸமான் அவரது ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்திருந்தார். பெரும்பாலான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. வேறு சில கவிதைகளில் அவற்றின் வடிவம் சார்ந்து மட்டும் எனக்கு அவரிடம் கூற சில கருத்துக்கள் இருந்தன. அவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என்பதால் ஸ்மானின் அனுமதி பெற்று

தமிழில் ஹைக்கூ

ஹைக்கூ தமிழுக்கு புதிதல்ல. சுமார் அரைநூற்றாண்டாக அது இங்கே வேர்விட்டு செழித்து வளர்கிறது. ஒரு காலத்தில் அது மிக பிரபலமாக இருந்ததுண்டுஅப்துல் ரகுமான் போன்ற பிரசித்த வானம்பாடி கவிஞர்கள் ஹைக்கூவை வளைத்து வளைத்து டூயட் பாடினார்கள். அப்போது வாராந்திரிகளில் ஹைக்கூவுக்கென தனி பக்கம் ஒதுக்கினார்கள். வாசகர்கள் லட்சம் லட்சமாய் ஹைக்கூ எழுதி பிரசுரித்தார்கள். அதன் சுருக்கமான வடிவம், முடிவில் ஒரு திருப்பம் ஆகியன அதை எழுதவும் படிக்கவும் எளிதாக ஆக்கியது. விளைவாக தமிழில் ஹைக்கூ ஒரு துணுக்கின் அந்தஸ்தை பெற்றது. ஜோக் வாசிப்பது போல் நம்மவர்கள் ஹைக்கூ வாசித்து புரட்டிச் சென்றார்கள். (.தா. பறந்து விலகிய / தாவணி / கொடியில் காய்ந்தபடி)
 அதன் பிறகு சுஜாதா ஹைக்கூவுக்கு தனி வெளிச்சம் கொணர்ந்தார். ஹைக்கூவின் வடிவம், நுண்ணுணர்வு, ஜப்பானிய பாரம்பரியத்துக்கு அதற்கு உள்ள இடம் பற்றி சீரியஸாக இங்கு எழுதியவர் அவர் தான். குறிப்பாக நமது வணிக எழுத்தாளர்கள் எழுதியவை எல்லாம் ஹைக்கூ அல்ல என உணர்த்திய அவர் தான்.

இரு கேள்விகள்

நமது தீவிர இலக்கியர்கள் எனக்குத் தெரிந்து ஆரம்பத்தில் இருந்தே ஹைக்கூவை பொருட்படுத்தியதில்லை. ஆத்மாநாம், நகுலன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகிய பல முக்கிய கவிஞர்களும் ஹைக்கூ எழுதியதில்லை. யுவன் ஹைக்கூ மொழியாக்கி இருக்கிறார் (”பெயரற்ற யாத்ரீகன்”). உயிர்மையில் தொகுப்பான வெளியான இந்நூல் மிக முக்கியமானது. ஆனால் அவரும் தமிழில் ஹைக்கூ எழுதியதில்லை. அதாவது தமிழ் படைப்பாளிகள் ஹைக்கூவை மிகவும் சிலாகித்து படிப்பவர்கள். ஆனால் ஹைக்கூ வாளை அவர்கள் உறையில் இருந்து உருவினதில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழ்ச் சூழலுக்கு அது பொருந்தி வருமா எனும் ஐயம் தான். (1) அவர்கள் ஏன் அப்படி சிந்தித்தார்கள்? (2) வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ இல்லை?

முதல் கேள்வி

இந்த கேள்விகளுக்கான விடையை பார்த்து விட்டு, ஹைக்கூ எழுதுகையில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன எனப் பார்ப்போம். இதற்கான உதாரணங்களாய் நான் ஜம்ஸித்தின் சில கவிதைகளை தருகிறேன்.
முதல் கேள்விக்கு வருகிறேன்:
உலகம் முழுக்க உள்ள காவிய, நாட்டுப்பாடல், நவீன கவிதைகளுக்கு ஒரு பொதுவான முக லட்சணம் உண்டு. அதாவது, இங்கிலாந்தின் முதல் காவியம்போவுல்ப்”, பதினேழாம் நூற்றாண்டில் மில்டன் எழுதிய காவியம்பேரடைஸ் லாஸ்ட்ஆகியவை நம்மூர் கம்பராமாயணத்தில் இருந்து மிகப்பெரிதாய் வேறுபடாதவை. நுண்ணுணர்விலும் நோக்கத்திலும் நம்பிக்கைகளிலும் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஹைக்கூவுக்கும் ஒரு நவீன கவிதைக்குமான வேறுபாடு என்பது முடிச்சுப்போட முடியாதது. இதனாலே ஆங்கில இலக்கிய வகுப்புகளில் எப்போதும் ஹைக்கூவை அறிமுகப்படுத்தவோ விவாதிக்கவோ மாட்டார்கள்.
அமெரிக்காவில் ஐம்பதுகளில் பீட் தலைமுறை தோன்றிய போது ஹைக்கூ கவிதைகளுக்கு மவுசு தோன்றியது. ஜென் பௌத்தம் உலகெங்கும் தன அகன்ற சிறகுகளை விரித்து நிழல் பரப்பிய போது அதனுடன் ஹைக்கூவும் கூடுதலாய் பரவியது. இன்றும் ஜென் சிந்தனையில் ஆர்வம் கொண்டோர் ஐரோப்பாவில் ஹைக்கூவையும் முன்னெடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கணிசமான ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன. (எனது முதல் நூலானஇன்றிரவு நிலவீன் கீழ்இத்தகைய ஆங்கில ஹைக்கூக்களின் தொகுப்பாகும்.) இப்படி ஹைக்கூ என்றுமே ஒரு உதிரி இயக்கமாய் தழைத்துள்ளது. ஆனால் ஜப்பானில் அது ஒரு பிரதான கலாச்சார வடிவம். அங்கு எளிய மக்கள் பௌத்த ஆலயங்களில் உள்ள மரங்களில் தங்கள் பிரார்த்தனையின் பாகமாக ஹைக்கூ கவிதைகளை சுருள் ஒன்றில் எழுதி தொங்க விடுவார்கள் என படித்திருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...