Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)


Image result for அப்துல் ரகுமான்

Image result for சுஜாதா

முன்குறிப்பு: நண்பரும் கவிஞருமான ஜம்ஸித் ஸமான் அவரது ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்திருந்தார். பெரும்பாலான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. வேறு சில கவிதைகளில் அவற்றின் வடிவம் சார்ந்து மட்டும் எனக்கு அவரிடம் கூற சில கருத்துக்கள் இருந்தன. அவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என்பதால் ஸ்மானின் அனுமதி பெற்று

தமிழில் ஹைக்கூ

ஹைக்கூ தமிழுக்கு புதிதல்ல. சுமார் அரைநூற்றாண்டாக அது இங்கே வேர்விட்டு செழித்து வளர்கிறது. ஒரு காலத்தில் அது மிக பிரபலமாக இருந்ததுண்டுஅப்துல் ரகுமான் போன்ற பிரசித்த வானம்பாடி கவிஞர்கள் ஹைக்கூவை வளைத்து வளைத்து டூயட் பாடினார்கள். அப்போது வாராந்திரிகளில் ஹைக்கூவுக்கென தனி பக்கம் ஒதுக்கினார்கள். வாசகர்கள் லட்சம் லட்சமாய் ஹைக்கூ எழுதி பிரசுரித்தார்கள். அதன் சுருக்கமான வடிவம், முடிவில் ஒரு திருப்பம் ஆகியன அதை எழுதவும் படிக்கவும் எளிதாக ஆக்கியது. விளைவாக தமிழில் ஹைக்கூ ஒரு துணுக்கின் அந்தஸ்தை பெற்றது. ஜோக் வாசிப்பது போல் நம்மவர்கள் ஹைக்கூ வாசித்து புரட்டிச் சென்றார்கள். (.தா. பறந்து விலகிய / தாவணி / கொடியில் காய்ந்தபடி)
 அதன் பிறகு சுஜாதா ஹைக்கூவுக்கு தனி வெளிச்சம் கொணர்ந்தார். ஹைக்கூவின் வடிவம், நுண்ணுணர்வு, ஜப்பானிய பாரம்பரியத்துக்கு அதற்கு உள்ள இடம் பற்றி சீரியஸாக இங்கு எழுதியவர் அவர் தான். குறிப்பாக நமது வணிக எழுத்தாளர்கள் எழுதியவை எல்லாம் ஹைக்கூ அல்ல என உணர்த்திய அவர் தான்.

இரு கேள்விகள்

நமது தீவிர இலக்கியர்கள் எனக்குத் தெரிந்து ஆரம்பத்தில் இருந்தே ஹைக்கூவை பொருட்படுத்தியதில்லை. ஆத்மாநாம், நகுலன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகிய பல முக்கிய கவிஞர்களும் ஹைக்கூ எழுதியதில்லை. யுவன் ஹைக்கூ மொழியாக்கி இருக்கிறார் (”பெயரற்ற யாத்ரீகன்”). உயிர்மையில் தொகுப்பான வெளியான இந்நூல் மிக முக்கியமானது. ஆனால் அவரும் தமிழில் ஹைக்கூ எழுதியதில்லை. அதாவது தமிழ் படைப்பாளிகள் ஹைக்கூவை மிகவும் சிலாகித்து படிப்பவர்கள். ஆனால் ஹைக்கூ வாளை அவர்கள் உறையில் இருந்து உருவினதில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழ்ச் சூழலுக்கு அது பொருந்தி வருமா எனும் ஐயம் தான். (1) அவர்கள் ஏன் அப்படி சிந்தித்தார்கள்? (2) வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ இல்லை?

முதல் கேள்வி

இந்த கேள்விகளுக்கான விடையை பார்த்து விட்டு, ஹைக்கூ எழுதுகையில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன எனப் பார்ப்போம். இதற்கான உதாரணங்களாய் நான் ஜம்ஸித்தின் சில கவிதைகளை தருகிறேன்.
முதல் கேள்விக்கு வருகிறேன்:
உலகம் முழுக்க உள்ள காவிய, நாட்டுப்பாடல், நவீன கவிதைகளுக்கு ஒரு பொதுவான முக லட்சணம் உண்டு. அதாவது, இங்கிலாந்தின் முதல் காவியம்போவுல்ப்”, பதினேழாம் நூற்றாண்டில் மில்டன் எழுதிய காவியம்பேரடைஸ் லாஸ்ட்ஆகியவை நம்மூர் கம்பராமாயணத்தில் இருந்து மிகப்பெரிதாய் வேறுபடாதவை. நுண்ணுணர்விலும் நோக்கத்திலும் நம்பிக்கைகளிலும் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஹைக்கூவுக்கும் ஒரு நவீன கவிதைக்குமான வேறுபாடு என்பது முடிச்சுப்போட முடியாதது. இதனாலே ஆங்கில இலக்கிய வகுப்புகளில் எப்போதும் ஹைக்கூவை அறிமுகப்படுத்தவோ விவாதிக்கவோ மாட்டார்கள்.
அமெரிக்காவில் ஐம்பதுகளில் பீட் தலைமுறை தோன்றிய போது ஹைக்கூ கவிதைகளுக்கு மவுசு தோன்றியது. ஜென் பௌத்தம் உலகெங்கும் தன அகன்ற சிறகுகளை விரித்து நிழல் பரப்பிய போது அதனுடன் ஹைக்கூவும் கூடுதலாய் பரவியது. இன்றும் ஜென் சிந்தனையில் ஆர்வம் கொண்டோர் ஐரோப்பாவில் ஹைக்கூவையும் முன்னெடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கணிசமான ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன. (எனது முதல் நூலானஇன்றிரவு நிலவீன் கீழ்இத்தகைய ஆங்கில ஹைக்கூக்களின் தொகுப்பாகும்.) இப்படி ஹைக்கூ என்றுமே ஒரு உதிரி இயக்கமாய் தழைத்துள்ளது. ஆனால் ஜப்பானில் அது ஒரு பிரதான கலாச்சார வடிவம். அங்கு எளிய மக்கள் பௌத்த ஆலயங்களில் உள்ள மரங்களில் தங்கள் பிரார்த்தனையின் பாகமாக ஹைக்கூ கவிதைகளை சுருள் ஒன்றில் எழுதி தொங்க விடுவார்கள் என படித்திருக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...