Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)


Image result for அப்துல் ரகுமான்

Image result for சுஜாதா

முன்குறிப்பு: நண்பரும் கவிஞருமான ஜம்ஸித் ஸமான் அவரது ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்திருந்தார். பெரும்பாலான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. வேறு சில கவிதைகளில் அவற்றின் வடிவம் சார்ந்து மட்டும் எனக்கு அவரிடம் கூற சில கருத்துக்கள் இருந்தன. அவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என்பதால் ஸ்மானின் அனுமதி பெற்று

தமிழில் ஹைக்கூ

ஹைக்கூ தமிழுக்கு புதிதல்ல. சுமார் அரைநூற்றாண்டாக அது இங்கே வேர்விட்டு செழித்து வளர்கிறது. ஒரு காலத்தில் அது மிக பிரபலமாக இருந்ததுண்டுஅப்துல் ரகுமான் போன்ற பிரசித்த வானம்பாடி கவிஞர்கள் ஹைக்கூவை வளைத்து வளைத்து டூயட் பாடினார்கள். அப்போது வாராந்திரிகளில் ஹைக்கூவுக்கென தனி பக்கம் ஒதுக்கினார்கள். வாசகர்கள் லட்சம் லட்சமாய் ஹைக்கூ எழுதி பிரசுரித்தார்கள். அதன் சுருக்கமான வடிவம், முடிவில் ஒரு திருப்பம் ஆகியன அதை எழுதவும் படிக்கவும் எளிதாக ஆக்கியது. விளைவாக தமிழில் ஹைக்கூ ஒரு துணுக்கின் அந்தஸ்தை பெற்றது. ஜோக் வாசிப்பது போல் நம்மவர்கள் ஹைக்கூ வாசித்து புரட்டிச் சென்றார்கள். (.தா. பறந்து விலகிய / தாவணி / கொடியில் காய்ந்தபடி)
 அதன் பிறகு சுஜாதா ஹைக்கூவுக்கு தனி வெளிச்சம் கொணர்ந்தார். ஹைக்கூவின் வடிவம், நுண்ணுணர்வு, ஜப்பானிய பாரம்பரியத்துக்கு அதற்கு உள்ள இடம் பற்றி சீரியஸாக இங்கு எழுதியவர் அவர் தான். குறிப்பாக நமது வணிக எழுத்தாளர்கள் எழுதியவை எல்லாம் ஹைக்கூ அல்ல என உணர்த்திய அவர் தான்.

இரு கேள்விகள்

நமது தீவிர இலக்கியர்கள் எனக்குத் தெரிந்து ஆரம்பத்தில் இருந்தே ஹைக்கூவை பொருட்படுத்தியதில்லை. ஆத்மாநாம், நகுலன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகிய பல முக்கிய கவிஞர்களும் ஹைக்கூ எழுதியதில்லை. யுவன் ஹைக்கூ மொழியாக்கி இருக்கிறார் (”பெயரற்ற யாத்ரீகன்”). உயிர்மையில் தொகுப்பான வெளியான இந்நூல் மிக முக்கியமானது. ஆனால் அவரும் தமிழில் ஹைக்கூ எழுதியதில்லை. அதாவது தமிழ் படைப்பாளிகள் ஹைக்கூவை மிகவும் சிலாகித்து படிப்பவர்கள். ஆனால் ஹைக்கூ வாளை அவர்கள் உறையில் இருந்து உருவினதில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழ்ச் சூழலுக்கு அது பொருந்தி வருமா எனும் ஐயம் தான். (1) அவர்கள் ஏன் அப்படி சிந்தித்தார்கள்? (2) வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ இல்லை?

முதல் கேள்வி

இந்த கேள்விகளுக்கான விடையை பார்த்து விட்டு, ஹைக்கூ எழுதுகையில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன எனப் பார்ப்போம். இதற்கான உதாரணங்களாய் நான் ஜம்ஸித்தின் சில கவிதைகளை தருகிறேன்.
முதல் கேள்விக்கு வருகிறேன்:
உலகம் முழுக்க உள்ள காவிய, நாட்டுப்பாடல், நவீன கவிதைகளுக்கு ஒரு பொதுவான முக லட்சணம் உண்டு. அதாவது, இங்கிலாந்தின் முதல் காவியம்போவுல்ப்”, பதினேழாம் நூற்றாண்டில் மில்டன் எழுதிய காவியம்பேரடைஸ் லாஸ்ட்ஆகியவை நம்மூர் கம்பராமாயணத்தில் இருந்து மிகப்பெரிதாய் வேறுபடாதவை. நுண்ணுணர்விலும் நோக்கத்திலும் நம்பிக்கைகளிலும் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஹைக்கூவுக்கும் ஒரு நவீன கவிதைக்குமான வேறுபாடு என்பது முடிச்சுப்போட முடியாதது. இதனாலே ஆங்கில இலக்கிய வகுப்புகளில் எப்போதும் ஹைக்கூவை அறிமுகப்படுத்தவோ விவாதிக்கவோ மாட்டார்கள்.
அமெரிக்காவில் ஐம்பதுகளில் பீட் தலைமுறை தோன்றிய போது ஹைக்கூ கவிதைகளுக்கு மவுசு தோன்றியது. ஜென் பௌத்தம் உலகெங்கும் தன அகன்ற சிறகுகளை விரித்து நிழல் பரப்பிய போது அதனுடன் ஹைக்கூவும் கூடுதலாய் பரவியது. இன்றும் ஜென் சிந்தனையில் ஆர்வம் கொண்டோர் ஐரோப்பாவில் ஹைக்கூவையும் முன்னெடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கணிசமான ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன. (எனது முதல் நூலானஇன்றிரவு நிலவீன் கீழ்இத்தகைய ஆங்கில ஹைக்கூக்களின் தொகுப்பாகும்.) இப்படி ஹைக்கூ என்றுமே ஒரு உதிரி இயக்கமாய் தழைத்துள்ளது. ஆனால் ஜப்பானில் அது ஒரு பிரதான கலாச்சார வடிவம். அங்கு எளிய மக்கள் பௌத்த ஆலயங்களில் உள்ள மரங்களில் தங்கள் பிரார்த்தனையின் பாகமாக ஹைக்கூ கவிதைகளை சுருள் ஒன்றில் எழுதி தொங்க விடுவார்கள் என படித்திருக்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...