முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)


Image result for அப்துல் ரகுமான்

Image result for சுஜாதா

முன்குறிப்பு: நண்பரும் கவிஞருமான ஜம்ஸித் ஸமான் அவரது ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்திருந்தார். பெரும்பாலான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. வேறு சில கவிதைகளில் அவற்றின் வடிவம் சார்ந்து மட்டும் எனக்கு அவரிடம் கூற சில கருத்துக்கள் இருந்தன. அவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என்பதால் ஸ்மானின் அனுமதி பெற்று

தமிழில் ஹைக்கூ

ஹைக்கூ தமிழுக்கு புதிதல்ல. சுமார் அரைநூற்றாண்டாக அது இங்கே வேர்விட்டு செழித்து வளர்கிறது. ஒரு காலத்தில் அது மிக பிரபலமாக இருந்ததுண்டுஅப்துல் ரகுமான் போன்ற பிரசித்த வானம்பாடி கவிஞர்கள் ஹைக்கூவை வளைத்து வளைத்து டூயட் பாடினார்கள். அப்போது வாராந்திரிகளில் ஹைக்கூவுக்கென தனி பக்கம் ஒதுக்கினார்கள். வாசகர்கள் லட்சம் லட்சமாய் ஹைக்கூ எழுதி பிரசுரித்தார்கள். அதன் சுருக்கமான வடிவம், முடிவில் ஒரு திருப்பம் ஆகியன அதை எழுதவும் படிக்கவும் எளிதாக ஆக்கியது. விளைவாக தமிழில் ஹைக்கூ ஒரு துணுக்கின் அந்தஸ்தை பெற்றது. ஜோக் வாசிப்பது போல் நம்மவர்கள் ஹைக்கூ வாசித்து புரட்டிச் சென்றார்கள். (.தா. பறந்து விலகிய / தாவணி / கொடியில் காய்ந்தபடி)
 அதன் பிறகு சுஜாதா ஹைக்கூவுக்கு தனி வெளிச்சம் கொணர்ந்தார். ஹைக்கூவின் வடிவம், நுண்ணுணர்வு, ஜப்பானிய பாரம்பரியத்துக்கு அதற்கு உள்ள இடம் பற்றி சீரியஸாக இங்கு எழுதியவர் அவர் தான். குறிப்பாக நமது வணிக எழுத்தாளர்கள் எழுதியவை எல்லாம் ஹைக்கூ அல்ல என உணர்த்திய அவர் தான்.

இரு கேள்விகள்

நமது தீவிர இலக்கியர்கள் எனக்குத் தெரிந்து ஆரம்பத்தில் இருந்தே ஹைக்கூவை பொருட்படுத்தியதில்லை. ஆத்மாநாம், நகுலன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகிய பல முக்கிய கவிஞர்களும் ஹைக்கூ எழுதியதில்லை. யுவன் ஹைக்கூ மொழியாக்கி இருக்கிறார் (”பெயரற்ற யாத்ரீகன்”). உயிர்மையில் தொகுப்பான வெளியான இந்நூல் மிக முக்கியமானது. ஆனால் அவரும் தமிழில் ஹைக்கூ எழுதியதில்லை. அதாவது தமிழ் படைப்பாளிகள் ஹைக்கூவை மிகவும் சிலாகித்து படிப்பவர்கள். ஆனால் ஹைக்கூ வாளை அவர்கள் உறையில் இருந்து உருவினதில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழ்ச் சூழலுக்கு அது பொருந்தி வருமா எனும் ஐயம் தான். (1) அவர்கள் ஏன் அப்படி சிந்தித்தார்கள்? (2) வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ இல்லை?

முதல் கேள்வி

இந்த கேள்விகளுக்கான விடையை பார்த்து விட்டு, ஹைக்கூ எழுதுகையில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன எனப் பார்ப்போம். இதற்கான உதாரணங்களாய் நான் ஜம்ஸித்தின் சில கவிதைகளை தருகிறேன்.
முதல் கேள்விக்கு வருகிறேன்:
உலகம் முழுக்க உள்ள காவிய, நாட்டுப்பாடல், நவீன கவிதைகளுக்கு ஒரு பொதுவான முக லட்சணம் உண்டு. அதாவது, இங்கிலாந்தின் முதல் காவியம்போவுல்ப்”, பதினேழாம் நூற்றாண்டில் மில்டன் எழுதிய காவியம்பேரடைஸ் லாஸ்ட்ஆகியவை நம்மூர் கம்பராமாயணத்தில் இருந்து மிகப்பெரிதாய் வேறுபடாதவை. நுண்ணுணர்விலும் நோக்கத்திலும் நம்பிக்கைகளிலும் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஹைக்கூவுக்கும் ஒரு நவீன கவிதைக்குமான வேறுபாடு என்பது முடிச்சுப்போட முடியாதது. இதனாலே ஆங்கில இலக்கிய வகுப்புகளில் எப்போதும் ஹைக்கூவை அறிமுகப்படுத்தவோ விவாதிக்கவோ மாட்டார்கள்.
அமெரிக்காவில் ஐம்பதுகளில் பீட் தலைமுறை தோன்றிய போது ஹைக்கூ கவிதைகளுக்கு மவுசு தோன்றியது. ஜென் பௌத்தம் உலகெங்கும் தன அகன்ற சிறகுகளை விரித்து நிழல் பரப்பிய போது அதனுடன் ஹைக்கூவும் கூடுதலாய் பரவியது. இன்றும் ஜென் சிந்தனையில் ஆர்வம் கொண்டோர் ஐரோப்பாவில் ஹைக்கூவையும் முன்னெடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கணிசமான ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன. (எனது முதல் நூலானஇன்றிரவு நிலவீன் கீழ்இத்தகைய ஆங்கில ஹைக்கூக்களின் தொகுப்பாகும்.) இப்படி ஹைக்கூ என்றுமே ஒரு உதிரி இயக்கமாய் தழைத்துள்ளது. ஆனால் ஜப்பானில் அது ஒரு பிரதான கலாச்சார வடிவம். அங்கு எளிய மக்கள் பௌத்த ஆலயங்களில் உள்ள மரங்களில் தங்கள் பிரார்த்தனையின் பாகமாக ஹைக்கூ கவிதைகளை சுருள் ஒன்றில் எழுதி தொங்க விடுவார்கள் என படித்திருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...