Skip to main content

டென்னிஸ் (4)


Image result for tennis paintings

நான் அவனது வகுப்பறை, அவன் வந்து போகும் வேளைகள், அவன் பயிற்சிக்கு வந்து புறப்படும் நேரம் என ஒவ்வொன்றையும் அறிந்தேன். எப்போதுமே சற்று தொலைவில் காற்தடங்கள் போல் அவனை தொடர்ந்தேன். ஒரு மாலையில் நான் தேநீர்க் கடையில் சுவரில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் நாளில் போன்றே அவன் அடித்த பந்து நான் அமர்ந்திருந்த வெற்று சிமிண்ட் இருக்கை அருகே உருண்டு போய் தேடி விட்டு பரிதவித்து நின்றது. “நீ திருந்துவதாய் தெரியவில்லை. அந்த இடத்தில் யாரோ உனக்கு சூனியம் வைத்திருக்கிறார்கள்என்றான் அவனுடன் ஆடியவன்.

ஆட்டம் முடியும் வேளையில் நான் வேகமாய் அங்கிருந்து அகன்றேன். ஆடுகளத்தில் இருந்து அவன் தன் நண்பர்களுடன் விளையாட்டுப் பொருட்களை வைக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து தன் பையை எடுத்து விட்டு நடந்து பிரதான வழியை அடையும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டேன். நான் அவனுக்கு முன்னரே அங்கு சென்று விட்டேன். குருதிப் பூக்களால் அடர்ந்த குல்மொஹர் மரம் ஒன்றின் கீழே கைகளை இறுகக் கட்டிக் கொண்டு நின்றேன். குளிரில் வெடவெடத்தது. முன்நெற்றியில் நெளிந்த மயிர்க்கற்றையின் கூர்முனை உறுத்தியது. அதை ஒதுக்கிட கையை வெளியே எடுக்கத் தோன்றவில்லை. தலையை உதறினேன். கற்றை என் இடது கண்ணை மறைத்து விழுந்தது. அவன் டென்னிஸ் ரேக்கட்டை காற்றில் வீசி பயிற்சி செய்தபடி தனித்து நடந்து வந்தான். நான் ஒற்றைக் கண்ணால் அவனை கவனித்தபடி வெடுவெடுவென நடந்து போனேன்.
சாலையெங்கும் சிவப்பு இலைகளை மிதித்து நடந்த போது தரையில் சிதறின சிறுசிறு பறவைகளைப் போல் அவை தோன்றின. என் பாதங்கள் நெருங்கின போது அச்சிறு செம்பறவைகள் லேசாய் அசைந்து கொடுத்தன. நானும் அவனும் அந்த சாலையில் நின்ற மிகப்பெரிய மரமான, காளான் வடிவில் கிளைகளை அகல விரித்த, ரெயின் ட்ரீயை நெருங்கினோம். நான் இப்போது ஊடுபாதை ஒன்றில் நுழைந்து ஓடி அவனுக்கு எதிர்ப்பக்கமாய் திறக்கும் பாதையில் தோன்றி மெல்ல நடந்தேன். பலமாய் மூச்சு வாங்குவதை காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கைகளை வீசியபடி நேராய் பார்த்து நடந்தேன். அவனைக் கடந்ததும் சட்டென நின்றுஏய் ஹைஎன்றேன். அவன் தலையை தூக்கி என்னைப் பார்த்ததும் கண்களை இடுக்கி உற்சாகம் தெரிக்க சிரித்தான்.
நீங்கஉங்களை டென்னிஸ் கோர்ட்டில்?”
ஆமா நான் தான்
ரொம்ப நல்லா ஆடுறீங்க
இல்ல இல்ல. நான் இப்போ தான் பழகுறேன்.”
உங்க ஸ்விங் ஷேப் நல்லா இருக்கு
ரியலி? நான் அன்னிக்கு வேணுமின்னே உங்க பக்கம் அடிக்கல”, அவன் முகம் சட்டென சிவந்தது.
நோ பிராப்ளம். ஐ எஞ்சாய்ட் இட் இன் பாக்ட்
அன்னிக்கு எல்லாம் தப்பாவே போய்க்கிட்டு இருந்தது
இல்ல சரியாத் தான் போனது
அவன் மீண்டும் முகம் சிவந்தான். அவன் ஆங்கிலத்தில் பேச திணறுவது கண்டு நான் இந்திக்கு மாறினேன். அவன் மூச்சு மெல்ல மெல்ல சீராவதை உணர்ந்தேன்.
உன் கிரிப் எப்படி காட்டு
அவன் காட்டினான்.
இது கொஞ்சம் செமி-வெஸ்டர்ன் இல்ல?”
அவன் தன் மணிக்கட்டை திருப்பி தன் கிரிப்பை திரும்ப திரும்ப பார்த்தான்.
என்னோடது கொஞ்சம் காண்டினெண்டல். நான் கொஞ்சம் ஓல்ட் டைப்
அப்படித் தெரியல”, அவன் சிரித்தான்.
நான் என் தலையை அழுத்திக் கோதி விட்டேன்.
நீ இதுக்கு முன்னாடி பேட்மிண்டன் ஆடுவியோ?”
எப்பிடித் தெரியும்?”
நீ மணிக்கட்டை…” அவன் பச்சை நரம்புகள் புடைத்த கையைப் பற்றி காட்டினேன், “நீ செர்வ் பண்ணும் போது இப்பிடி மணிக்கட்டை அசைக்கிறே. அப்பிடி பண்றதுனால தான் உனக்கு கண்டுரோல் இல்லாம போகுது. டென்னிஸ்ல போர் ஆர்ம் ஸ்டிப்பா இருக்கணும்.”
அவன் தலையசைத்தான். பிறகு நெர்வஸாக சிரித்தான். முகம் முழுக்க பரவும் சிவப்பு. அச்சிவப்பு ஒரு தீச்சுடராய் என்னைத் தொட்டு விழுங்கி எனக்குள் இறங்கியது.
பிரதான வாயிலை அடைந்ததும் நாங்கள் பிரிந்தோம்.
அடுத்த நாள் மாலையிலும் நான் பதுங்கி நின்று கவனித்தேன். அவன் கண்கள் என்னைத் தேடின. ஆனால் அவனது செர்வீஸ் ஷாட்கள் இப்போது ஒழுங்காய் எய்த அம்புகள் போல் நளினமாய் சென்றன. எதிர்சாரியில் ஆடினவர் பல தடவைகள் திணறினார். அவன் அன்று ஏதோ ஆட்கொண்டது போல் ஆடினான்.
மீண்டும் அவனுக்கு எதிரே வந்து ஹை சொல்லி அவனுடன் நடையில் இணைந்து கொண்டேன்.
இன்னிக்கு ரொம்ப நல்லா ஆடினே
சிவப்பாய் வெட்கிநீ பார்த்துக்கிட்டு இருந்தேன்னு தோணிக்கிட்டே இருந்துது
அவனைப் பற்றி உரையாடல் நடுவே சில விசயங்களைச் சொன்னான். சொந்த ஊர் உ.பி. பிறந்து வளர்ந்தது வங்காளத்தில். அவன் இந்தியில் தெரிந்த வங்காளக் கொச்சை நினைவுக்கு வந்தது. ஒரு நாய்க்குட்டி நடைபழகுவது போன்ற கொச்சை இந்தி. எனக்கு அவன் கொச்சையின், குழந்தைமையின் முதுகில் வருடித் தரத் தோன்றியது.
வரும் நாட்களில் தொடர்ந்து சந்தித்தோம். வாயிலை அடைந்து அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது என்னையும் கூட வர கேட்பான். அவனுடன் ஊர் சுற்ற அழைப்பான். மறுத்து விடுவேன். எனக்கு அவனுடன் அந்த பாதை முடியும் திருப்பத்தை கடந்து செல்லவே அச்சமாய் இருந்தது. மலர்க்கொத்துக்களும் செங்கனல் இலைகளும் கைகோர்த்து வானை மூடின அந்த சாலையைக் கடந்து வாகனங்கள் உறுமி விரையும் குறுகின, நெரிசல் மிகுந்த வெளிகளில் அவனுடன் நடப்பது செயற்கையாய் பட்டது. அவன் ரொம்ப சாதாரணமானவனாய் ஆகி விடுவான் என அஞ்சினேன்.
ஒருநாள் பனி பாதையை மறைத்திருந்தது. இரு பக்கமும் பனி வெண் துகில்களாய் சன்னமாய் சூழ்ந்தன. குல்மொஹர் மரத்தடியில் ஒடுங்கினோம். அவன் தோள்களுக்கு நடுவே புதைந்து கொண்டேன். ஒரு நொடி பார்வையை மேலே உயர்த்தினேன். பனிக் கூரைக்குக் கீழே கண்ணைப் பறிக்கும் சிவப்பு வெருட்டியது. சற்று நேரத்தில் பனி முழுக்க விலகி, கண்ணைக் கூசச் செய்யும் துல்லிய வெளிச்சம் எங்கும் சூழ்ந்தது. வெயிலற்ற கடும் ஒளி. அந்த கண்ணாடித் துல்லியம் எனக்கு தூங்கும் போது யாரோ போர்வையை உருவின உணர்வைக் கொடுத்தது.
அடுத்த நாள் முதல் விடுமுறை துவங்குகிறது. அவன் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமூட்டியது. தன்னிடம் ஸ்மார்ட் போன் கூட இல்லை என்றான். ஒரு நண்பனின் வீட்டில் அப்போது இருப்பதாகவும், விரைவில் ஒரு புது வீட்டுக்கு செல்வதாகவும் சொன்னான். ஆகையால் நான் அவனது முகவரியை விசாரிக்கவில்லை. எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டேன்.
அடுத்தடுத்த நாட்களில் நான் மட்டும் கல்லூரி வளாகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். தனிமையில் அமர்ந்து உதிரும் இலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...