Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)

Image result for albert camus
ஆல்பர்ட் காம்யு


ஹைக்கூவும் புலன் மயக்கமும்

 புலன் மயக்கத்தின் அபத்தம் இக்கவிதைகளுக்கு அபாரமான களிப்பு, மனத்திளைப்பை, வெகுளித்தனமான குதூகலிப்பை தருகிறது.
அதென்ன புலன் மயக்கம்?

ஜென் நமது தர்க்கரீதியான புரிதல்கள் புலன்மயக்கத்தின் விளைவு தான் என சொல்கிறது. உதாரணமாய், ஒரு இழப்பு நேர்கையில் நாம் ஏன் துக்கிக்கிறோம்? அதற்கு முன், துக்கம் என்பது ஒரு தன்னியல்பான உணர்வா (பசி, காமம் போல)? இல்லை. பிறகு துக்கம் எப்படி உருக்கொள்கிறது?

காலம் மற்றும் வெளி சார்ந்த கட்டமைப்புகள் நமது துக்கத்தை சாத்தியமாக்குகின்றன. துக்கத்திற்கு ஒரு கால அளவு உண்டு. இடம் சார்ந்த நினைவுகளும் உண்டு. காம்யுவின் அந்நியன்நாவலில் மெர்சால்ட்டுக்கு ஒரு கடிதம் வருகிறது. அம்மா இறந்து விட்டாள் என அது சொல்கிறது. மெர்சால்ட்டுக்கு துக்கம் கொள்ளவா வேண்டாமா என குழப்பமாகிறது. ஏனெனில் அம்மா எப்போது இறந்தாள் என அக்கடிதம் சொல்லவில்லை. காலம் துல்லியமாய் தெரியவில்லை என்றால் மரணத்தின் மதிப்பை எப்படி அளவிடுவது? மரணத்தின் மீதான நமது உணர்வுத்தாக்கம் என்பது காலம் போகப் போக குறைவது. அம்மா நேற்று இறந்தாள் என்றால் கதறி அழலாம், போன மாதம் இறந்தாள் என்றால் அந்தளவுக்கு மனம் உடைந்து அழ முடியுமா? இந்த கேள்வி தான் மெர்சால்டை அலைகழிக்கிறது. இன்று அழுகிற ஒருவன் அதே போல் ஒரு வருடம் கழித்தும் சாப்பிடாமல் குளிக்காமல் வேலை செய்யாமல் அம்மாவுக்காக அழுது துக்கம் அனுசரித்தால் உலகம் அவனை பைத்தியம் எனச் சொல்லும். அப்படி எனில், இவ்வளவு காலம் மட்டுமே இந்தளவு துக்கம் காட்டலாம் என சமூகம் தீர்மானித்து வைத்துள்ளதா? அப்படி எனில் துக்கத்தை நாம் சமூக விதிமுறைகளின் படி நடிக்கிறோமா?
இறந்த காலம் எனும் இலக்கண பகுப்பு இன்றி மரணத்தைப் பற்றி நாம் பேச முடியுமா? ஒருவேளை நம் இலக்கணத்தில் கடந்த காலம் இல்லையெனில் ஒருவர் இறந்து போக இயலுமா? (”காலமாகி விட்டார்எனும் நிகழ்காலமும் கூட கடந்த காலத்தின் பினாமி காலம் தானே. அதன் பொருள் காலமானார்”)
ஒருவர் இறந்து போனார் என்பதை உறுதிப்படுத்த காலத்தை அடுத்து இடமும் அவசியம். எங்கு இறந்தார் என்பது தெரியாவிட்டால் நம்மால் நிம்மதியாய் கண்ணீர் சிந்த இயலாது. அவரைப் பற்றி துக்கத்தில் நம் மனம் உலையும் போது அவருடன் இருந்த நினைவுகள் நம்மை மூச்சுத்திணறச் செய்கின்றன. ஒவ்வொரு நினைவும் ஒரு இடத்துடன் சம்மந்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களை அழித்து விட்டு அவரை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? இயலாது.
காலமும் வெளியும் நமது கற்பிதங்கள் என ஒருவர் நிரூபித்தார் மரணம் கூட கற்பிதம் ஆகாதா? ஆகலாம். ஆகாமலும் போகலாம். ஆனால் நமது கவலைகள், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம் ஆகியவை நமது மனம் நிகழ்த்தும் மயக்கத்தின் விளைவுகள் தாம் என்பதை மேற்சொன்ன விசயம் காட்டுகிறது.
 இதை உணரும் ஒருவர் குழந்தைத்தனமாய் இவ்வுலகை காணத் துவங்குகிறார். அவர் அபாரமான சுதந்திரத்தை பெறுகிறார். எல்லா எல்லைகளையும் கடக்கிறார். இதைத் தான் ஜென் நமக்கு உணர்த்த முயல்கிறது. ஒவ்வொரு ஹைக்கூ கவிதையின் பின்னும் இந்த ஆன்மீக மனநிலை உள்ளது.


Comments

சிறப்பு. உங்கள் பதிவு சிந்திக்க வைத்தது. துக்கம் கூட ஒரு காலத்துக்குத்தான். அதுவாகவே போகப் போக கரைந்து விடும். ஒன்று போனால் இன்னொன்று. வாழ்த்துகள்.

நமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...