முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)

Image result for albert camus
ஆல்பர்ட் காம்யு


ஹைக்கூவும் புலன் மயக்கமும்

 புலன் மயக்கத்தின் அபத்தம் இக்கவிதைகளுக்கு அபாரமான களிப்பு, மனத்திளைப்பை, வெகுளித்தனமான குதூகலிப்பை தருகிறது.
அதென்ன புலன் மயக்கம்?

ஜென் நமது தர்க்கரீதியான புரிதல்கள் புலன்மயக்கத்தின் விளைவு தான் என சொல்கிறது. உதாரணமாய், ஒரு இழப்பு நேர்கையில் நாம் ஏன் துக்கிக்கிறோம்? அதற்கு முன், துக்கம் என்பது ஒரு தன்னியல்பான உணர்வா (பசி, காமம் போல)? இல்லை. பிறகு துக்கம் எப்படி உருக்கொள்கிறது?

காலம் மற்றும் வெளி சார்ந்த கட்டமைப்புகள் நமது துக்கத்தை சாத்தியமாக்குகின்றன. துக்கத்திற்கு ஒரு கால அளவு உண்டு. இடம் சார்ந்த நினைவுகளும் உண்டு. காம்யுவின் அந்நியன்நாவலில் மெர்சால்ட்டுக்கு ஒரு கடிதம் வருகிறது. அம்மா இறந்து விட்டாள் என அது சொல்கிறது. மெர்சால்ட்டுக்கு துக்கம் கொள்ளவா வேண்டாமா என குழப்பமாகிறது. ஏனெனில் அம்மா எப்போது இறந்தாள் என அக்கடிதம் சொல்லவில்லை. காலம் துல்லியமாய் தெரியவில்லை என்றால் மரணத்தின் மதிப்பை எப்படி அளவிடுவது? மரணத்தின் மீதான நமது உணர்வுத்தாக்கம் என்பது காலம் போகப் போக குறைவது. அம்மா நேற்று இறந்தாள் என்றால் கதறி அழலாம், போன மாதம் இறந்தாள் என்றால் அந்தளவுக்கு மனம் உடைந்து அழ முடியுமா? இந்த கேள்வி தான் மெர்சால்டை அலைகழிக்கிறது. இன்று அழுகிற ஒருவன் அதே போல் ஒரு வருடம் கழித்தும் சாப்பிடாமல் குளிக்காமல் வேலை செய்யாமல் அம்மாவுக்காக அழுது துக்கம் அனுசரித்தால் உலகம் அவனை பைத்தியம் எனச் சொல்லும். அப்படி எனில், இவ்வளவு காலம் மட்டுமே இந்தளவு துக்கம் காட்டலாம் என சமூகம் தீர்மானித்து வைத்துள்ளதா? அப்படி எனில் துக்கத்தை நாம் சமூக விதிமுறைகளின் படி நடிக்கிறோமா?
இறந்த காலம் எனும் இலக்கண பகுப்பு இன்றி மரணத்தைப் பற்றி நாம் பேச முடியுமா? ஒருவேளை நம் இலக்கணத்தில் கடந்த காலம் இல்லையெனில் ஒருவர் இறந்து போக இயலுமா? (”காலமாகி விட்டார்எனும் நிகழ்காலமும் கூட கடந்த காலத்தின் பினாமி காலம் தானே. அதன் பொருள் காலமானார்”)
ஒருவர் இறந்து போனார் என்பதை உறுதிப்படுத்த காலத்தை அடுத்து இடமும் அவசியம். எங்கு இறந்தார் என்பது தெரியாவிட்டால் நம்மால் நிம்மதியாய் கண்ணீர் சிந்த இயலாது. அவரைப் பற்றி துக்கத்தில் நம் மனம் உலையும் போது அவருடன் இருந்த நினைவுகள் நம்மை மூச்சுத்திணறச் செய்கின்றன. ஒவ்வொரு நினைவும் ஒரு இடத்துடன் சம்மந்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களை அழித்து விட்டு அவரை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? இயலாது.
காலமும் வெளியும் நமது கற்பிதங்கள் என ஒருவர் நிரூபித்தார் மரணம் கூட கற்பிதம் ஆகாதா? ஆகலாம். ஆகாமலும் போகலாம். ஆனால் நமது கவலைகள், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம் ஆகியவை நமது மனம் நிகழ்த்தும் மயக்கத்தின் விளைவுகள் தாம் என்பதை மேற்சொன்ன விசயம் காட்டுகிறது.
 இதை உணரும் ஒருவர் குழந்தைத்தனமாய் இவ்வுலகை காணத் துவங்குகிறார். அவர் அபாரமான சுதந்திரத்தை பெறுகிறார். எல்லா எல்லைகளையும் கடக்கிறார். இதைத் தான் ஜென் நமக்கு உணர்த்த முயல்கிறது. ஒவ்வொரு ஹைக்கூ கவிதையின் பின்னும் இந்த ஆன்மீக மனநிலை உள்ளது.


கருத்துகள்

சிகரம் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பு. உங்கள் பதிவு சிந்திக்க வைத்தது. துக்கம் கூட ஒரு காலத்துக்குத்தான். அதுவாகவே போகப் போக கரைந்து விடும். ஒன்று போனால் இன்னொன்று. வாழ்த்துகள்.

நமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...