முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)

Image result for albert camus
ஆல்பர்ட் காம்யு


ஹைக்கூவும் புலன் மயக்கமும்

 புலன் மயக்கத்தின் அபத்தம் இக்கவிதைகளுக்கு அபாரமான களிப்பு, மனத்திளைப்பை, வெகுளித்தனமான குதூகலிப்பை தருகிறது.
அதென்ன புலன் மயக்கம்?

ஜென் நமது தர்க்கரீதியான புரிதல்கள் புலன்மயக்கத்தின் விளைவு தான் என சொல்கிறது. உதாரணமாய், ஒரு இழப்பு நேர்கையில் நாம் ஏன் துக்கிக்கிறோம்? அதற்கு முன், துக்கம் என்பது ஒரு தன்னியல்பான உணர்வா (பசி, காமம் போல)? இல்லை. பிறகு துக்கம் எப்படி உருக்கொள்கிறது?

காலம் மற்றும் வெளி சார்ந்த கட்டமைப்புகள் நமது துக்கத்தை சாத்தியமாக்குகின்றன. துக்கத்திற்கு ஒரு கால அளவு உண்டு. இடம் சார்ந்த நினைவுகளும் உண்டு. காம்யுவின் அந்நியன்நாவலில் மெர்சால்ட்டுக்கு ஒரு கடிதம் வருகிறது. அம்மா இறந்து விட்டாள் என அது சொல்கிறது. மெர்சால்ட்டுக்கு துக்கம் கொள்ளவா வேண்டாமா என குழப்பமாகிறது. ஏனெனில் அம்மா எப்போது இறந்தாள் என அக்கடிதம் சொல்லவில்லை. காலம் துல்லியமாய் தெரியவில்லை என்றால் மரணத்தின் மதிப்பை எப்படி அளவிடுவது? மரணத்தின் மீதான நமது உணர்வுத்தாக்கம் என்பது காலம் போகப் போக குறைவது. அம்மா நேற்று இறந்தாள் என்றால் கதறி அழலாம், போன மாதம் இறந்தாள் என்றால் அந்தளவுக்கு மனம் உடைந்து அழ முடியுமா? இந்த கேள்வி தான் மெர்சால்டை அலைகழிக்கிறது. இன்று அழுகிற ஒருவன் அதே போல் ஒரு வருடம் கழித்தும் சாப்பிடாமல் குளிக்காமல் வேலை செய்யாமல் அம்மாவுக்காக அழுது துக்கம் அனுசரித்தால் உலகம் அவனை பைத்தியம் எனச் சொல்லும். அப்படி எனில், இவ்வளவு காலம் மட்டுமே இந்தளவு துக்கம் காட்டலாம் என சமூகம் தீர்மானித்து வைத்துள்ளதா? அப்படி எனில் துக்கத்தை நாம் சமூக விதிமுறைகளின் படி நடிக்கிறோமா?
இறந்த காலம் எனும் இலக்கண பகுப்பு இன்றி மரணத்தைப் பற்றி நாம் பேச முடியுமா? ஒருவேளை நம் இலக்கணத்தில் கடந்த காலம் இல்லையெனில் ஒருவர் இறந்து போக இயலுமா? (”காலமாகி விட்டார்எனும் நிகழ்காலமும் கூட கடந்த காலத்தின் பினாமி காலம் தானே. அதன் பொருள் காலமானார்”)
ஒருவர் இறந்து போனார் என்பதை உறுதிப்படுத்த காலத்தை அடுத்து இடமும் அவசியம். எங்கு இறந்தார் என்பது தெரியாவிட்டால் நம்மால் நிம்மதியாய் கண்ணீர் சிந்த இயலாது. அவரைப் பற்றி துக்கத்தில் நம் மனம் உலையும் போது அவருடன் இருந்த நினைவுகள் நம்மை மூச்சுத்திணறச் செய்கின்றன. ஒவ்வொரு நினைவும் ஒரு இடத்துடன் சம்மந்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களை அழித்து விட்டு அவரை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? இயலாது.
காலமும் வெளியும் நமது கற்பிதங்கள் என ஒருவர் நிரூபித்தார் மரணம் கூட கற்பிதம் ஆகாதா? ஆகலாம். ஆகாமலும் போகலாம். ஆனால் நமது கவலைகள், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம் ஆகியவை நமது மனம் நிகழ்த்தும் மயக்கத்தின் விளைவுகள் தாம் என்பதை மேற்சொன்ன விசயம் காட்டுகிறது.
 இதை உணரும் ஒருவர் குழந்தைத்தனமாய் இவ்வுலகை காணத் துவங்குகிறார். அவர் அபாரமான சுதந்திரத்தை பெறுகிறார். எல்லா எல்லைகளையும் கடக்கிறார். இதைத் தான் ஜென் நமக்கு உணர்த்த முயல்கிறது. ஒவ்வொரு ஹைக்கூ கவிதையின் பின்னும் இந்த ஆன்மீக மனநிலை உள்ளது.


கருத்துகள்

சிகரம் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பு. உங்கள் பதிவு சிந்திக்க வைத்தது. துக்கம் கூட ஒரு காலத்துக்குத்தான். அதுவாகவே போகப் போக கரைந்து விடும். ஒன்று போனால் இன்னொன்று. வாழ்த்துகள்.

நமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...