முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பர்வீனின் கிழங்கும் ரதியின் தொடுகையும்


Image result for ரசிகன் நாவல்

“ரசிகன்” நாவலுக்கு வந்துள்ள ஒரு எதிர்வினை:

வணக்கம் எழுத்தாளரே ..
நலம்.  நலம் வேண்டுகிறேன்.
ஐந்து நாட்களாக சாதிக்குடன் பயணித்துக்கொண்டிருந்தேன் ( என் பெயர்தான் கதைசொல்லிக்கும்! ). தீவிர இலக்கியத்தில் நான் வாசித்து முடித்த இரண்டாவது நாவல் " ரசிகன் " .  பல வகைகளிலும் என்னைப் பாதித்த கதாப்பாத்திரங்கள் நாவல் முழுவதுமே இருக்கிறார்கள். 

இந்த நாவலைப் படிக்கும்பொழுது நான் கதைப்போக்குடன் கட்டுண்டிருந்தேன்.  பர்வீணுடைய கிழங்கையும் ரதியின்  தொடுகையையும் நானும் உணர்ந்தேன்.  எனினும்,  என்னுடைய  போதுமான வாசிப்பின்மை காரணமாக இதில் விவாதிக்கப்பட்டிருக்கும் பல அரசியல் சார்ந்த கருத்துகள் எனக்குப் புரியவில்லை.  
இவற்றைச் சார்ந்து நான் படிக்க சில புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்களா ? 
க. சங்கர் 
48, Jawahar Street,
Nagarpalayam,
Gobichettipalayam,
Erode - 638 452.
அன்புள்ள க. சங்கர்
நாவலை நீங்கள் ரசித்துப் படித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்?
அந்நாவலில் தமிழ் சிறு பத்திரிகை உலகம் குறித்த ஒரு சித்திரம் வருகிறது. மேலும் சாதிக்கின் உரையாடல்களில் எண்பது, தொண்ணூறுகளில் தமிழ்ச் சூழலில் பேசப்பட்ட கோட்பாடுகள் பற்றின குறிப்புகளும் வருகின்றன.
சிறு பத்திரிகை உலகம் பற்றி அறிய வேண்டுமானால் ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூல் உதவும். உடனடியாய் படிப்பதானால் இந்த கட்டுரையை பாருங்கள் (https://azhiyasudargal.wordpress.com/2012/05/01/எழுத்து-முதல்-கொல்லிப்ப/).
கோட்பாடுகளை எளிதாய் விளக்கும் நூல்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஆனாலும் கொஞ்சம் போராடி வாசிப்பதானால் தமிழவன், எம்.ஜி சுரேஷ் ஆகியோரின் கோட்பாட்டு நூல்களை தேடி வாசிக்கலாம். ஆனாலும் கோட்பாடுகளை எளிதாய் வாசித்தறிய ஆங்கில நூல்களே சிறப்பானவை.
நன்றி!


 “ரசிகன்” நாவலை இணையம் வழி வாங்க:

உடுமலை.காம்

nammabooks.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.