முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பர்வீனின் கிழங்கும் ரதியின் தொடுகையும்


Image result for ரசிகன் நாவல்

“ரசிகன்” நாவலுக்கு வந்துள்ள ஒரு எதிர்வினை:

வணக்கம் எழுத்தாளரே ..
நலம்.  நலம் வேண்டுகிறேன்.
ஐந்து நாட்களாக சாதிக்குடன் பயணித்துக்கொண்டிருந்தேன் ( என் பெயர்தான் கதைசொல்லிக்கும்! ). தீவிர இலக்கியத்தில் நான் வாசித்து முடித்த இரண்டாவது நாவல் " ரசிகன் " .  பல வகைகளிலும் என்னைப் பாதித்த கதாப்பாத்திரங்கள் நாவல் முழுவதுமே இருக்கிறார்கள். 

இந்த நாவலைப் படிக்கும்பொழுது நான் கதைப்போக்குடன் கட்டுண்டிருந்தேன்.  பர்வீணுடைய கிழங்கையும் ரதியின்  தொடுகையையும் நானும் உணர்ந்தேன்.  எனினும்,  என்னுடைய  போதுமான வாசிப்பின்மை காரணமாக இதில் விவாதிக்கப்பட்டிருக்கும் பல அரசியல் சார்ந்த கருத்துகள் எனக்குப் புரியவில்லை.  
இவற்றைச் சார்ந்து நான் படிக்க சில புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்களா ? 
க. சங்கர் 
48, Jawahar Street,
Nagarpalayam,
Gobichettipalayam,
Erode - 638 452.
அன்புள்ள க. சங்கர்
நாவலை நீங்கள் ரசித்துப் படித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்?
அந்நாவலில் தமிழ் சிறு பத்திரிகை உலகம் குறித்த ஒரு சித்திரம் வருகிறது. மேலும் சாதிக்கின் உரையாடல்களில் எண்பது, தொண்ணூறுகளில் தமிழ்ச் சூழலில் பேசப்பட்ட கோட்பாடுகள் பற்றின குறிப்புகளும் வருகின்றன.
சிறு பத்திரிகை உலகம் பற்றி அறிய வேண்டுமானால் ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூல் உதவும். உடனடியாய் படிப்பதானால் இந்த கட்டுரையை பாருங்கள் (https://azhiyasudargal.wordpress.com/2012/05/01/எழுத்து-முதல்-கொல்லிப்ப/).
கோட்பாடுகளை எளிதாய் விளக்கும் நூல்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஆனாலும் கொஞ்சம் போராடி வாசிப்பதானால் தமிழவன், எம்.ஜி சுரேஷ் ஆகியோரின் கோட்பாட்டு நூல்களை தேடி வாசிக்கலாம். ஆனாலும் கோட்பாடுகளை எளிதாய் வாசித்தறிய ஆங்கில நூல்களே சிறப்பானவை.
நன்றி!


 “ரசிகன்” நாவலை இணையம் வழி வாங்க:

உடுமலை.காம்

nammabooks.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...