முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டென்னிஸ் (2)


Image result for tennis paintings

நான் பின் தொடர்ந்த இன்னொரு சம்பவம் என் அப்பா சம்மந்தப்பட்டது. “நீ தினமும் கல்லூரிக்குப் போகிறாயா? இல்லை ஊர் சுற்றுகிறாயா?” என காலையில் அப்பா முகம் கறுக்க கடுகடுப்பாய் கேட்டார். நான் முனகியபடி தலையாட்டி விட்டு வந்து விட்டேன். ஆனால் அன்று அப்பாவைப் பின் தொடர முடிவெடுத்து அவர் பின்னால் பேருந்து நிறுத்தம் வரை சென்றேன்.

அவர் முதல் பேருந்தில் இருந்து வெகுவாய் சிரமப்பட்டு இறங்கி எடுக்கப் போகும் கூட்டமான மற்றொரு பேருந்தில் மூச்சிரைக்க ஏறி வாசல் படியில் தொங்கியபடி வந்தார். நான் சுலபமாய் ஏறி உள்ளே சென்று விட்டேன். எனக்கு உட்கார இடமும் கிடைத்தது. முதல் நிறுத்தம் வந்ததும் கூட்டம் சற்றே குறைந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பத்து நிமிடம் நடந்தால் அவரது அலுவலகம். அங்கு அவர் நுழையும் போது எதேச்சையாய் என்பது போல் அவர் பார்வையில் பட வேண்டும், அப்போது அவர் கேட்பார்இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்தவர்களை விலக்கிபடி அப்பா என் இருக்கை அருகே வந்தார். நான் ஜன்னல் அருகே இருந்ததால் முதலில் அவர் என்னை கவனிக்கவில்லை. அவர் என்னருகே இருந்த முதியவரை தள்ளி இருக்க கேட்டார். நான் தோள்களைத் தாழ்த்தி துப்பட்டாவால் தலையை மூடி ஒடுங்கிக் கொண்டேன். என் இதயம் எகிறித் துடித்தது.
 அப்பா இருக்கை விளிம்பில் அமர்ந்து எதிர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்தார். அவர் முகமெங்கும் வியர்வை பூத்துள்ளதை, ஆழமாய் அவர் மூச்சு விடுவதை, தொப்பை ஏறி இறங்குவதை அரைக்கண்ணால் பார்த்தேன். தன் கையில் இருந்த பையை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டார். தன் கண்ணாடியை உருவி முகத்தை துடைத்துக் கொண்டார். இந்த இடைவெளியில் நான் சட்டென முடிவெடுத்துஅப்பாஎன மெல்ல அழைத்தேன். அவர் அதிர்ந்து திரும்பிப் பார்த்தார்.
 நீங்க எப்போ ஏறுனீங்க?”
அவர் அதிர்ச்சி விலகாது நோக்கினார்: “நீயா? நான் வேறே ஏதோ பொண்ணுன்னு நினைச்சேன்.”
புன்னகைத்தேன்.
 தலையில என்ன துப்பட்டாவால மூடியிருக்க?”
ஆமாம்
உன் கண்ணாடி எங்கே?”
வெளியே வந்தால் போட்டுக்கிறதில்ல?”
ஏன்?”
“….”
வேறே யாரோன்னு நினைச்சேன்.”
அவர் மீண்டும் ஒருமுறை என் முகத்தில் உற்று நோக்கினார். தன் பின்னங்கழுத்தை தொட்டுக் காட்டி சொன்னார், “முடி வெட்டினியா? இதென்ன பாய்கட்டா?”
ஆமாப்பாஇல்லப்பா, லைட்டா டிரிம் பண்ணினேன். முடியை இப்படி சீவியிருக்கிறதுனால இப்போ உங்களுக்கு வித்தியாசமா தெரியுது. காலையில் கூட பார்த்தீங்களே
நான் பார்க்கவே இல்லியே?”
அவர் தன்னையே மறுப்பது போல் தலையை அசைத்தார்.
மாலை வீடு திரும்பிய போது அப்பா என்னை பேருந்தில் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. நான் அவருக்கு தேநீர் கொண்டு கொடுத்த போது என் கண்களை சந்திக்கவே தயங்கினார்.
சரி, நான் இனி சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.
இப்போதெல்லாம் நான் நூலகத்துக்குப் போவதில்லை. ஒருவித ஒவ்வாமை. நான் மாலை வேளைகளில் கூடைப்பந்து விளையாட்டரங்கின் படிக்கட்டில் அமர்ந்து படிப்பேன். அல்லது படிக்கிற பாவனையில் யாராவது ஒரு நபரை மட்டுமே தொடர்ந்து கவனிப்பேன். அவர் யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவரை மையமாக்கி அந்த சூழலை ஒரு திரைப்படம் போல் உள்வாங்குவேன்.
 ஆனால் அப்போதெல்லாம் பின்னிருந்து மூச்சுக்காற்று என் கழுத்தைத் தீண்டும். அந்த அபூர்வமான வாசனை என்னை மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி இழுக்கும். அரங்கு காலியாக இருக்கும் போது சின்ன காலடிகள் சுற்றிச் சுற்றி ஓடும் ஒலிகண்ணை மூடிக் கொள்வேன்.
 ஒருநாள் அரங்கில் கடுமையான கூட்டம். அப்போது கல்லூரிகள் இடையிலான போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன். அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன். எங்கே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...