முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டென்னிஸ் (5)


Image result for tennis paintings

விடுமுறை முடிந்த பிறகு நான் அந்த டென்னிஸ் ஆடுகளத்துக்கு செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தேன். அவனை எங்கும் காணவில்லை. அந்த எண்ணில் அழைத்தால் பயன்பாட்டில் இல்லை. அவன் நண்பர்களும் இப்போது பயிற்சிக்கு வருவதில்லை.
அவனைப் பற்றி விசாரிப்பதோ அவனைத் தேடுவதோ அர்த்தமற்றது என நினைத்தேன். ஒருவேளை நானாக தேடிச் சென்று பின் தொடர்ந்து உறவை ஏற்படுத்தினது தான் தவறோ? நான் இனி இயல்பாக எல்லாரையும் போல் இருக்க வேண்டுமோ? இந்த எண்ணம் என்னை தொடர்ந்து அலைகழித்தது.

இப்போது வெகுவாக நான் மாறி விட்டேன் என என் வகுப்புத் தோழிகள் சொல்கிறார்கள். வீட்டிலும் என் பொறுப்பான நடத்தையை பாராட்டுகிறார்கள். பொருத்தமாய் ஆடை அணிகிறேன். முடியை நீளமாய் வளர்க்க தொடங்கி விட்டேன். அடுத்தவர் கண்ணை நோக்கி துணிச்சலாய் பேசுகிறேன். தேவையின்றி யாரையும் எதையும் கவனிப்பதில்லை.
ஆனாலும் ஒரு நாள் எனக்கு சம்மந்தமில்லாத வேறு துறை பேராசிரியரின் பின்னால் நான் சென்று எதையோ பேச முயன்றிட அவர் குழம்பி விட்டார். இன்னொரு முறை பரீட்சை நாளன்று தவறான பேருந்து ஏறி தொலைவாய் சென்று, அங்கிருந்து திரும்ப பேருந்து கிடைக்காமல், வாடகைக் கார் பிடித்து கல்லூரி வந்தால் பரீட்சை முடிந்து விட்டது. இதற்கு நான் முன்பிருந்தது போல் ஊர் பொறுக்குவதும், யாரையாவது துரத்துவதுமே மேலானதோ? இப்படி மாற்றி மாற்றி குழப்பியபடி ஒரு மாலை ஆடுகளத்தருகே ஒரு ஹாட் சாக்லேட்டுடன் இருந்து யோசித்தேன். புத்தகத்தை திறந்து வைத்து நடந்து முடிந்தவற்றை எண்ணி கனவு கண்டேன்.
 அப்போது அந்த மஞ்சள் டென்னிஸ் பந்து என் காலடிகளை நோக்கி உருண்டு வந்தது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...