முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோகமான செக்ஸ் என்பது

Image result for julian barnes
ஜூலியன் பார்ன்ஸ்


“சோகமான செக்ஸ் என்றால் - அவளது வாயின் டூத் பேஸ்ட் அவள் சற்று முன் அருந்தியிருந்த ஷெர்ரி வைனின் வீச்சத்தை மறைக்க முடியாது தோற்றிட, அவள் “கிறுக்கா என் பௌல், என்னை உற்சாகப்படுத்துடா” என முணுமுணுக்கையில், நீங்கள் அவ்வாறே செய்வீர்களே அது. அவ்வாறு அவளை குதூகலப்படுத்துவது உங்கள் குதூகலத்தை குறைப்பது எனப் பொருள்பட்டாலும்.

சோகமான செக்ஸ் என்பது மன அழுத்த மாத்திரையின் மென்மையான மயக்கத்தில் அவள் இருக்கையில் நிகழ்வது. அப்படி செய்தால் அவளை சற்று மகிழ்ச்சிப்படுத்தலாம் என நினைத்து நீங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவது.
சோகமான செக்ஸ் என்பது – நீங்களே நிர்கதியில் இருக்கிறீர்கள், உங்கள் நிலை மீட்க முடியாத ஒன்றாய் இருக்கிறது, உங்கள் முன்கதை அவ்வளவு கசப்பானது, நாளுக்கு நாள் நொடிக்கு நொடி உங்கள் ஆத்மாவின் சமநிலை ஆட்டம் கண்டு வருகிறது, அப்போது சில நிமிடங்கள், ஒரு அரைமணிநேரம் உங்களை செக்ஸில் தொலைக்கலாமே என நினைத்து நீங்கள் ஈடுபடுவது. ஆனால் ஒரு நானோ செகண்ட் கூட உங்களையோ உங்கள் ஆன்மாவின் கதியையோ நீங்கள் மறக்க இயலாது போவது.
சோகமான செக்ஸ் என்பது அவளுடனான எல்லா தொடர்புகளை நீங்களும், உங்களுடனானதை அவளும் இழப்பதாய் நீங்கள் உணர்வது, ஆனால் இதன் மூலம் அவளும் நீங்களும் ஒன்றாய் இன்னமும் உணர்வதாய் எப்படியோ தோன்ற செய்யலாம் என நம்புவது; நீங்கள் இந்த உறவை இன்னமும் கைவிட தயாராக இல்லை என தெரிவிப்பது, உங்களது ஒரு பகுதி அதற்கு அவசியமில்லை என உணர்த்தினாலும் கூட. பிறகு நீங்கள் உணர்வீர்கள் – பிணைப்பை தக்க வைக்கும் ஒன்று வலியை நீட்டிப்பதுமே என்று.
(…)
சோகமான செக்ஸ் என்பது அவள் நிதானமாய் இருக்கையில், இருவரும் பரஸ்பரம் இச்சையுடன் இருக்கையில், என்ன ஆனாலும் நீங்கள் அவளை நேசிப்பீர்கள் என நீங்கள் உணர்கையில், அவளும் அவ்வாறே அறிகையில் நிகழ்வது, ஆனால் அதேவேளை – இருவருமே ஒருவேளை - பரஸ்பரம் நேசிப்பது அவசியமாய் மகிழ்ச்சியில் போய் முடிய வேண்டியதில்லை என புரிதல் கொள்கையில் நடப்பது. ஆக, உங்கள் முயக்கம் என்பது இப்போது ஆறுதலுக்கான தேடல் என்றல்லாமல் பரஸ்பரம் மகிழ்ச்சியின்மையை மறுப்பதற்கான ஒரு முட்டாள் முயற்சியாய் மாறி விட்டது.” (126-127)

-    ஜூலியன் பார்ன்ஸின் The Only Story நாவலில் இருந்து.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I genuinely enjoy looking through on this web site, it holds good articles.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Greetings! Very helpful advice within this article!
It's the little changes that produce the most significant changes.
Many thanks for sharing!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...