முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோகமான செக்ஸ் என்பது

Image result for julian barnes
ஜூலியன் பார்ன்ஸ்


“சோகமான செக்ஸ் என்றால் - அவளது வாயின் டூத் பேஸ்ட் அவள் சற்று முன் அருந்தியிருந்த ஷெர்ரி வைனின் வீச்சத்தை மறைக்க முடியாது தோற்றிட, அவள் “கிறுக்கா என் பௌல், என்னை உற்சாகப்படுத்துடா” என முணுமுணுக்கையில், நீங்கள் அவ்வாறே செய்வீர்களே அது. அவ்வாறு அவளை குதூகலப்படுத்துவது உங்கள் குதூகலத்தை குறைப்பது எனப் பொருள்பட்டாலும்.

சோகமான செக்ஸ் என்பது மன அழுத்த மாத்திரையின் மென்மையான மயக்கத்தில் அவள் இருக்கையில் நிகழ்வது. அப்படி செய்தால் அவளை சற்று மகிழ்ச்சிப்படுத்தலாம் என நினைத்து நீங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவது.
சோகமான செக்ஸ் என்பது – நீங்களே நிர்கதியில் இருக்கிறீர்கள், உங்கள் நிலை மீட்க முடியாத ஒன்றாய் இருக்கிறது, உங்கள் முன்கதை அவ்வளவு கசப்பானது, நாளுக்கு நாள் நொடிக்கு நொடி உங்கள் ஆத்மாவின் சமநிலை ஆட்டம் கண்டு வருகிறது, அப்போது சில நிமிடங்கள், ஒரு அரைமணிநேரம் உங்களை செக்ஸில் தொலைக்கலாமே என நினைத்து நீங்கள் ஈடுபடுவது. ஆனால் ஒரு நானோ செகண்ட் கூட உங்களையோ உங்கள் ஆன்மாவின் கதியையோ நீங்கள் மறக்க இயலாது போவது.
சோகமான செக்ஸ் என்பது அவளுடனான எல்லா தொடர்புகளை நீங்களும், உங்களுடனானதை அவளும் இழப்பதாய் நீங்கள் உணர்வது, ஆனால் இதன் மூலம் அவளும் நீங்களும் ஒன்றாய் இன்னமும் உணர்வதாய் எப்படியோ தோன்ற செய்யலாம் என நம்புவது; நீங்கள் இந்த உறவை இன்னமும் கைவிட தயாராக இல்லை என தெரிவிப்பது, உங்களது ஒரு பகுதி அதற்கு அவசியமில்லை என உணர்த்தினாலும் கூட. பிறகு நீங்கள் உணர்வீர்கள் – பிணைப்பை தக்க வைக்கும் ஒன்று வலியை நீட்டிப்பதுமே என்று.
(…)
சோகமான செக்ஸ் என்பது அவள் நிதானமாய் இருக்கையில், இருவரும் பரஸ்பரம் இச்சையுடன் இருக்கையில், என்ன ஆனாலும் நீங்கள் அவளை நேசிப்பீர்கள் என நீங்கள் உணர்கையில், அவளும் அவ்வாறே அறிகையில் நிகழ்வது, ஆனால் அதேவேளை – இருவருமே ஒருவேளை - பரஸ்பரம் நேசிப்பது அவசியமாய் மகிழ்ச்சியில் போய் முடிய வேண்டியதில்லை என புரிதல் கொள்கையில் நடப்பது. ஆக, உங்கள் முயக்கம் என்பது இப்போது ஆறுதலுக்கான தேடல் என்றல்லாமல் பரஸ்பரம் மகிழ்ச்சியின்மையை மறுப்பதற்கான ஒரு முட்டாள் முயற்சியாய் மாறி விட்டது.” (126-127)

-    ஜூலியன் பார்ன்ஸின் The Only Story நாவலில் இருந்து.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I genuinely enjoy looking through on this web site, it holds good articles.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Greetings! Very helpful advice within this article!
It's the little changes that produce the most significant changes.
Many thanks for sharing!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...