Skip to main content

“இச்சை என்பது…” – பெருந்தேவி எதிர்வினை


Image result for பெருந்தேவி

 “இச்சை என்பது…” கட்டுரைக்கு கவிஞர் பெருந்தேவி முகநூலில் செய்த அபாரமான எதிர்வினையை இங்கு பகிர்கிறேன். சொல்லப் போனால், கட்டுரையில் நான் பேச இயலாத ஒரு அம்சத்தை பெருந்தேவி சரளமான கவித்துவ மொழியில் விவாதிக்கிறார். “காதலன் – காதலன் ஆல்லாதோர்” எனும் இருமையை கடந்து, சிலவேளைகளில் – காதலில் கசியும் சந்தர்பங்களில் - ஒரு பெண் மனம் இயங்க முடியும் என பேசுகிறார். முக்கியமான பார்வை இது:
ரோலான் பார்த் போல் எழுதியது போல் எழுத வேண்டியது காதல்.
-------------------
பார்த்தவுடன் காதல் என்பது myth அல்ல. அது எப்படி என்று பலர் கேட்டாலும். Gut feeling அது. ஒருவகையில் ஒரு தேர்ந்த வாசகர் அவருக்கான கவிதையைக் கண்டுணர்வது போல. கண்கள்... ஆனால், புற அழகின் பங்கு ஒரு சின்ன அளவில்தான். கண்கள் என்றதும் புற அழகு குறித்து அல்ல.



அவ்வாறு கண்ணில் விழுந்து காதலில் எழும்போது (காதலில் விழுதல் என்ற வினை எனக்கு ஒவ்வாதது, உண்மையில் நாம் எழுகிறோம் அதில்.) அதைக் கவனமாகப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. காதல் சொர்க்கத்திலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் செடி. வன்முறையும் கெட்ட எண்ணங்களும் நிறைந்த சூழலில் மிகக் கவனமாகப் பராமரிக்கவேண்டிய செடி. அதைச் செய்யமுடிந்தால் (மட்டுமே) வாழும். மிகக் கடினமான விஷயம் அது.

//பார்த்ததும் காதல் என்பதே தவிர்க்க முடியாதநிதர்சனம். வேறெப்படியும் அது நிகழ முடியுமா தெரியவில்லை.//

//இப்படி பார்த்து தன்னை இழந்து காதலில் விழுந்த ஒருபெண்ணுடன் (ஆணுடன்) காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள்.அவள் (அவன்) கண்களுக்குள் உங்களை மறந்துலயித்திருக்கிறீர்கள். ஒரு சைகை, ஒரு சிறு அசைவு, ஆடையின்சலசலப்பு, முடி நெற்றியில் புரளும்பாங்கு//

//நீங்கள் உங்கள் காதலனுடன் இருக்கையில் இன்னொருஆணைக் கண்டு மனம் அலைபாய்கிறது. ஆனாலும் அந்தபேரழகனுக்காக உங்கள் காதலனான அழகனை நீங்கள்கைவிடப் போவதில்லை.//

மனம் அலைபாய்தல் என்பதை இப்படித்தான் பார்க்கிறேன். தன் காதலனோடு / காதலியோடு இருக்கும்போது பிற பெண்களும் ஆண்களும் அழகாகத் தெரியவே வாய்ப்புண்டு. அதாவது ஒருவர் மீது இருக்கும் காதல் பலரையும் நம் கண்ணில் அழகாக்கிக் காட்டுகிறது. உலகமே ரம்மியமாகிறது என்பது கிளிஷே அல்ல. அதனால், இந்த முதல் வரியின் அலைபாய்தல் தடாலென்று கைவிடுதலுக்கு எப்படி இட்டுச் செல்கிறதெனத் தெரியவில்லை.

ஏன் அலைபாய்தல் காதலோடு சேர்ந்த ஒன்றாக இருக்கக்கூடாது? இதனால் அலைபாய்தலையும் காதலையும் ஒன்றாக்கி சமப்படுத்தி நான் சொல்லவில்லை. அலைபாய்தல் ஒரு momentary good feel என்பதாக ஏன் கொள்ளக்கூடாது? …
By the way, என் காதலனோடு நான் இருக்கும்போது ஒரு பூனைக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ போனாலும் அவை ஒன்றேபோல் பேரழகாக என் கண்ணுக்குக் காட்சி தரும். உடனே என் மனதுக்குப் பிடித்துவிடும். தற்காலிகமாக என்றாலும்தான்.

அப்புறம்....அலைபாய்தல் விவகாரங்களைத் தவிர்த்து, தள்ளிவைத்துப் பார்த்தால்...தீவிரமான, genuine ஆன காதல் ஒருவரோடுதான் இருக்கவேண்டுமா, இருக்குமா என்பவை எல்லாம் ஆபத்தான, ஆனால் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...