Skip to main content

பிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (1)

Image result for bigg boss tamil

பிக்பாஸ் நிகழ்ச்சி நமது நவீன கார்ப்பரேட் வேலை உலகை பெரிதும் ஒத்திருப்பதாய், அதனாலே அந்நிகழ்ச்சியை கவனிப்பது ஆர்வமூட்டுவது மற்றும் அவசியமானது என எனது பிளாக் பதிவொன்றில் எழுதி இருந்தேன். நண்பர் ஒருவர் இது சம்மந்தமாய் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்: “பிக்பாஸில் யாரும் வேலை எதுவும் செய்வதில்லை; விளையாட்டுகள், அதுவும் அபத்தமான, தரை லோக்கலாய் இறங்கி பரஸ்பரம் அடித்துக் கொள்ளுகிற விளையாட்டுகள். திருடி அதிக பாயிண்ட்ஸ் சேர்த்து எதிரணியை நோகடிக்கும் விளையாட்டு, எதிரணி உறுப்பினர்களுக்கு முழுநாளும் உணவளிக்க மறுத்து காய விடும் விளையாட்டுகள், வாந்தியெடுக்காமல் ஜாங்கிரியும் மீனும் குழைத்து தின்னும் விளையாட்டுகள். இதுவும் நாம் செய்யும் சீரியஸான சிக்கலான வேலைகளும் ஒன்றா?”

இனி என் பதில்:
நேரடியாய் பார்த்தால் ரெண்டுமே ஒன்றல்ல தாம். ஒரே விசயத்தில் இரண்டுமே ஆனால் ஒன்றாகின்றன. கார்ப்பரேட் சூழலில் நாம் இன்று வேலையையும் ஒரு விளையாட்டாகத் தான் செய்கிறோம். கார்ப்பரேட்டில் நமக்கு அளிக்கப்படும் வேலைகளும் நமது தனிப்பட்ட திறன்களை மெருகேற்றும்படியாய் இருப்பதில்லை. விருப்பமில்லையெனிலும், நம் புரொஜெக்டின் தேவையை உணர்ந்து தகவமைப்பதே இன்றைய ஊழியர்களுக்கு அவசியமுள்ள பிரதான திறன்.
 பல சமயங்களில் நமக்குள்ள உணர்வு நாம் செய்வது அற்பமான ஆனால் முக்கியமான வேலை என்பது. அற்பம் ஏனெனில் அதனோடு நம் மனம் ஒன்றுவதில்லை; அது நமது அனுபவத்தை, பயிற்சியை, திறன்களை சீண்டுவதில்லை. முக்கியம் ஏனெனில் அது நமது பதவி உயர்வை, ஊதியத்தை, நமது புரோஜெக்டின் வெற்றியை, அதன் மூலம் நிறுவனத்தின் நிலைப்பை தீர்மானிக்கிறது. கார்ல் மார்க்ஸ் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன விசயம் இது: எந்திரமயமாக்கத்தின் விளைவாய் ஊழியர்கள் தம் வேலையில் இருந்து அந்நியமாய் உணர்வார்கள். அதுவே இப்போது கார்ப்பரேட்மயமாக்கலில் நிகழ்கிறது.
மனம் ஊன்றி, முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டியதல்ல இன்றைய வேலை. சாமர்த்தியமாய், அதிகம் பட்டுக் கொள்ளாமல் செய்ய வேண்டியதே இன்றைய வேலை. எனது சிறுபத்திரிகை நண்பர்கள் பலர் மென்பொருள் வேலையில் இருந்து பத்திரிகை வேலைக்கு நகர்ந்தார்கள். அங்கு நாம் மொழியுடன் தொடர்பு கொண்டிருப்போமே என்று. ஆனால் அங்கும் அவர்கள் தமது நம்பிக்கைகளுக்கு, நுண்ணுணர்வுக்கு தொடர்பற்ற பல விசயங்களையே எழுதுகிறார்கள். அப்படியே சம்பாதித்து தாக்குப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வேலை முன்பொருள் வேலையை விட மேல் எனத் தோன்றுகிறது. அங்கு அவர்கள் முன்பிருந்தது போல அந்நியமாய் இல்லை என்பதே ஆறுதல்.
 என் நண்பர் ஒருவர் மிக சீரியஸான சிறுகதையாளர், அவர் முழுக்க முழுக்க சினிமா கிசுகிசுக்களை வெளியிடும் இணைய இதழ் ஒன்றில் வேலை செய்தார். இரண்டிலும் அவருக்கு இருவேறான முகங்கள். நான் அவரை அவரது அலுவலகத்தில் அவரது வேலை செய்யும் இடத்தில் சென்று சந்தித்தேன். அவர் சினிமா கிசுகிசு பக்கம் ஒன்றின் இறுதி கட்ட வடிவமைப்பு பணியில் இருந்தார். வடிவமைத்தபடியே அவர் என்னிடம் வறட்சி மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். பிறகு அப்படியே நாங்கள் அயோத்திதாசர் திருக்குறளுக்கு கொடுத்துள்ள மாறுபட்ட விளக்கங்களுக்கு வந்தோம். அவர் அயோத்திதாசரை வெகுவாக மெச்சி பேசினபடி போனார். எனக்கு குழப்பம் ஏற்பட்டது. ரெண்டிலும் அவர் மிக தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். எது உண்மையான அவர்? விளையாட்டுத்தனமான ஒரு காரியத்தில் அவர் விளையாட்டுத்தனமாய் சீரியஸாய் இருந்தார். சீரியஸான ஒரு விசயத்தில் அவர் சீரியஸாய் விளையாட்டுத்தனமாய் இருந்தார். எது அவர்?
இந்த குணாதசியத்தை நான் இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாய் காண்கிறேன். அவர்கள் முன்பைப் போல வேலையை சீரியஸான சீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை. வேலை நேரத்தில் மட்டுமே வேலையில் இருக்கிறார்கள். இதை அவர்கள் smart work என்கிறார்கள். பிரவுஸரில் பல டேப்களை திறந்து வைத்திருப்பது போல அவர்கள் பல முகங்களை திறந்து வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் நேரத்துக்கு ஏற்றபடி ஒன்றை எடுத்து மாட்டிக் கொள்கிறார்கள். வேலையின் போது வேலை; கேளிக்கையின் போது கேளிக்கை. “இனி என் கிட்ட பேசாதே. Let us break up!” என்று கொதிப்பாய் காதலனிடம் சொல்லி விட்டு அடுத்த நிமிடம் ஒரு புன்னகையை சூடிக் கொண்டு அநாயசமாய் டீம் மீட்டிங்கில் கலந்து கொண்டு துடிப்பாய் பேச முடிகிறது; அது முடிந்ததும் அலுவலகத்தில் நிகழும் ஒரு சக ஊழியரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாய் ஹேப்பி பெர்த் டே பாடி விட்டு, மதிய உணவுக்கு தோழிகளுடன் ரெஸ்டெரெண்ட் போய் விட்டு இடையில் பாத்ரூம் போய் அழுது விட்டு கண்ணைத் துடைத்து மேக் அப் இட்டுக் கொண்டு வெளியே வந்து சகஜமாய் அனைவருடனும் பேச முடிகிறது. இவர்கள் போலியாகவோ பாசாங்கவோ இல்லை. இரண்டு எதிரெதிர் விசயங்களில் அவர்களால் ஒரே சமயம் உண்மையாய் இருக்க முடிகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...