முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக தலைவர் முதல்வரானால்?

Image result for ஸ்டாலின்



திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்டாலினின் ஆளுமை குறித்த எனது அவதானிப்பு இது:

ஸ்டாலின் வெளிமுகமாய் இனிமையாய் நிதானமாய் தெரிகிறவர். ஆனால் உள்முகமாய் சற்றும் கடுமையாய், சர்வாதிகாரத் தன்மை கொண்டவர். இந்த உள்முகம் அவர் முதல்வர் ஆன பின் நிச்சயம் வெளிப்படும்.
ஸ்டாலின் ஜெயலலிதா அளவு சர்வாதிகார முரட்டுத்தனத்துடன் செயல்பட மாட்டார் எனினும், ஜெயலலிதாவைப் போன்றே ஒருவித கார்ப்பரேட் அரசியலை அவர் முன்னெடுப்பார். அவ்விதத்தில் அவர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை ஒத்திருக்கும். கராறான நிர்வாகம், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை, மக்களிடம் எளிமையுடன் கருத்துரையாடும் (ஆனால் சொத்து சேர்ப்பதில் சளைக்காத) அமைச்சரவை என அவரது ஆட்சி தனித்துவத்துடன் இருக்கும்.
கட்சியை பொறுத்த மட்டில் கலைஞரின் காலத்தில் இருந்த அனைவரையும் அணைத்துப் போகும், பல்முனை அதிகார முகாம்கள் கொண்ட அமைப்பாய் ஸ்டாலின் தலைமையிலான திமுக இருக்குமா என்பது ஐயமே. அடுத்த முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின், கட்சிக்குள் தனக்கு போட்டியாக எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளவர்களை கூட விட்டு வைக்க மாட்டார். கட்சிக்குள் ஒவ்வொரு குண்டூசி முனையையும் தனது எந்திரப் பிடியில் வைத்திருக்க வேண்டும் எனும் முனைப்பும் தயக்கமற்ற செயல்திறனும் அவரிடம் இருக்கும். ஆக, சகோதர சகோதரி அதிகார வட்டங்கள் அவர் முன் முழுக்க மண்டியிட்டு அடையாளமற்று போய் விடுவார்கள். எதிரிகளைப் பொறுத்தமட்டில் ஆர்ப்பாட்டம் அற்ற  ஆனால் ஆபத்தான ஒரு அரசியல்வாதியாக அவர் இருப்பார். ஜெயலலிதா கலைஞரை நள்ளிரவில் கைது செய்ததைப் போன்ற வெறியை, வன்மத்தை அவர் தன் விரோதிகள் மீது காட்ட மாட்டார். ஆனால் அப்படி காட்டாமலே புன்னகைத்தபடி விரோதிகளை காணாமல் அடித்து விடுவார்.
ஒரு முதல்வராக ஸ்டாலின் மிக நல்ல நிர்வாகியாக இருப்பார். சென்னை வெள்ளம் மீண்டும் வந்தால் ஜெயலலிதாவை போல செம்பரம்பாக்கம் ஏரியை நிச்சயம் திறந்து விட மாட்டார். ஜெயலலிதாவின் நிதானமின்மை ஸ்டாலினிடம் நிச்சயம் இராது. உணர்ச்சிரீதியிலும் உடல்நலம் சார்ந்தும் அவர் நிலையாக இருப்பார். ஆகையால் அதிர்ச்சிக்குரிய ஆபத்தான முடிவுகளை எடுக்க மாட்டார். இது சாதகமானது. ஆனால், அதேவேளை, ஜெயலலிதாவின் பல எதிர்பாராத நலத்திட்டங்களுக்கு (அம்மா உணவகம்) இணையான மாறுபட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவாரா என்பது ஐயமே. ஒன்றுக்கு நூறு தடவை யோசித்து சில நல்ல யோசனைகளையும் கூட அவர் தள்ளிப் போட வாய்ப்புண்டு.
ஏன் ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறேன் என்றால், ஆட்சி நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உண்டு என அறிவேன். ஆகையால் தான் இந்த ஒப்பீடு.
ஸ்டாலினிடம் தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாப்பானது; அவரது ஆட்சிக்காலம் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I 100% agree this
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
இது போல நடக்க சாத்தியக்கூறுகள் மிக அதிகம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...