முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக தலைவர் முதல்வரானால்?

Image result for ஸ்டாலின்



திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்டாலினின் ஆளுமை குறித்த எனது அவதானிப்பு இது:

ஸ்டாலின் வெளிமுகமாய் இனிமையாய் நிதானமாய் தெரிகிறவர். ஆனால் உள்முகமாய் சற்றும் கடுமையாய், சர்வாதிகாரத் தன்மை கொண்டவர். இந்த உள்முகம் அவர் முதல்வர் ஆன பின் நிச்சயம் வெளிப்படும்.
ஸ்டாலின் ஜெயலலிதா அளவு சர்வாதிகார முரட்டுத்தனத்துடன் செயல்பட மாட்டார் எனினும், ஜெயலலிதாவைப் போன்றே ஒருவித கார்ப்பரேட் அரசியலை அவர் முன்னெடுப்பார். அவ்விதத்தில் அவர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை ஒத்திருக்கும். கராறான நிர்வாகம், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை, மக்களிடம் எளிமையுடன் கருத்துரையாடும் (ஆனால் சொத்து சேர்ப்பதில் சளைக்காத) அமைச்சரவை என அவரது ஆட்சி தனித்துவத்துடன் இருக்கும்.
கட்சியை பொறுத்த மட்டில் கலைஞரின் காலத்தில் இருந்த அனைவரையும் அணைத்துப் போகும், பல்முனை அதிகார முகாம்கள் கொண்ட அமைப்பாய் ஸ்டாலின் தலைமையிலான திமுக இருக்குமா என்பது ஐயமே. அடுத்த முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின், கட்சிக்குள் தனக்கு போட்டியாக எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளவர்களை கூட விட்டு வைக்க மாட்டார். கட்சிக்குள் ஒவ்வொரு குண்டூசி முனையையும் தனது எந்திரப் பிடியில் வைத்திருக்க வேண்டும் எனும் முனைப்பும் தயக்கமற்ற செயல்திறனும் அவரிடம் இருக்கும். ஆக, சகோதர சகோதரி அதிகார வட்டங்கள் அவர் முன் முழுக்க மண்டியிட்டு அடையாளமற்று போய் விடுவார்கள். எதிரிகளைப் பொறுத்தமட்டில் ஆர்ப்பாட்டம் அற்ற  ஆனால் ஆபத்தான ஒரு அரசியல்வாதியாக அவர் இருப்பார். ஜெயலலிதா கலைஞரை நள்ளிரவில் கைது செய்ததைப் போன்ற வெறியை, வன்மத்தை அவர் தன் விரோதிகள் மீது காட்ட மாட்டார். ஆனால் அப்படி காட்டாமலே புன்னகைத்தபடி விரோதிகளை காணாமல் அடித்து விடுவார்.
ஒரு முதல்வராக ஸ்டாலின் மிக நல்ல நிர்வாகியாக இருப்பார். சென்னை வெள்ளம் மீண்டும் வந்தால் ஜெயலலிதாவை போல செம்பரம்பாக்கம் ஏரியை நிச்சயம் திறந்து விட மாட்டார். ஜெயலலிதாவின் நிதானமின்மை ஸ்டாலினிடம் நிச்சயம் இராது. உணர்ச்சிரீதியிலும் உடல்நலம் சார்ந்தும் அவர் நிலையாக இருப்பார். ஆகையால் அதிர்ச்சிக்குரிய ஆபத்தான முடிவுகளை எடுக்க மாட்டார். இது சாதகமானது. ஆனால், அதேவேளை, ஜெயலலிதாவின் பல எதிர்பாராத நலத்திட்டங்களுக்கு (அம்மா உணவகம்) இணையான மாறுபட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவாரா என்பது ஐயமே. ஒன்றுக்கு நூறு தடவை யோசித்து சில நல்ல யோசனைகளையும் கூட அவர் தள்ளிப் போட வாய்ப்புண்டு.
ஏன் ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறேன் என்றால், ஆட்சி நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உண்டு என அறிவேன். ஆகையால் தான் இந்த ஒப்பீடு.
ஸ்டாலினிடம் தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாப்பானது; அவரது ஆட்சிக்காலம் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I 100% agree this
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
இது போல நடக்க சாத்தியக்கூறுகள் மிக அதிகம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...