இம்மாத இறுதியில் வெளியாகப்
போகும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு பகுதிகளைப் பற்றி பேராசிரியர் கணேஷ் பேச இருக்கிறார்.
கணேஷ் சார் எம்.ஸி.ஸியில் நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது எனது பேராசிரியர்.
தற்போது அவர் அங்கு துறைத்தலைவர்.
எம்.ஸி.ஸியில் அவர் பேசும் போது பக்கத்து
வகுப்பு மாணவர்கள் எல்லாம் கூட்டமாய் வந்து மொய்ப்பார்கள். அவரது கணீர் குரல்
வளாகம் எங்கும் ஒலிக்கும். அபாரமான பேச்சாற்றல் கொண்ட அவரது வகுப்புகள் போவதே
தெரியாமல் நாங்கள் சொக்கிப் போய் அமர்ந்திருப்போம். 16 வருடங்களுக்குப்
பிறகு கணேஷ் சார் எனது “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலுக்கு பேசுவார் என நான்
கனவிலும் நினைக்கவில்லை. அவரது குரலை, பிரமாதமான பேச்சை
நீண்ட காலத்துக்குப் பிறகு கேட்க இருக்கிறேன். உவகையும் பரபரப்பும் ஒரே நேரத்தில்
சூழ்கின்றன. நீங்களும் வாங்க. சந்திப்போம்!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....


Comments