இம்மாத இறுதியில் வெளியாகப்
போகும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு பகுதிகளைப் பற்றி பேராசிரியர் கணேஷ் பேச இருக்கிறார்.
கணேஷ் சார் எம்.ஸி.ஸியில் நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது எனது பேராசிரியர்.
தற்போது அவர் அங்கு துறைத்தலைவர்.
எம்.ஸி.ஸியில் அவர் பேசும் போது பக்கத்து
வகுப்பு மாணவர்கள் எல்லாம் கூட்டமாய் வந்து மொய்ப்பார்கள். அவரது கணீர் குரல்
வளாகம் எங்கும் ஒலிக்கும். அபாரமான பேச்சாற்றல் கொண்ட அவரது வகுப்புகள் போவதே
தெரியாமல் நாங்கள் சொக்கிப் போய் அமர்ந்திருப்போம். 16 வருடங்களுக்குப்
பிறகு கணேஷ் சார் எனது “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலுக்கு பேசுவார் என நான்
கனவிலும் நினைக்கவில்லை. அவரது குரலை, பிரமாதமான பேச்சை
நீண்ட காலத்துக்குப் பிறகு கேட்க இருக்கிறேன். உவகையும் பரபரப்பும் ஒரே நேரத்தில்
சூழ்கின்றன. நீங்களும் வாங்க. சந்திப்போம்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share


Comments