Skip to main content

சிகரெட் புகைக்கும் பெண் (2)


மலையாள ஹீரோக்கள் ஏன் சிகரெட் பிடிப்பதில்லை?

Image result for malayalam movie + bidi smoking
மலையாள சினிமாவில் சிகரெட் பிடிக்காத நாயகர்களைக் குறிப்பிட்டேன்; ஆனால் அங்கு அந்த இடத்தை பீடி பிடித்துள்ளது. அங்கு பீடி பிடிக்காத நாயகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இல்லை. மாறாக வில்லன்கள் சிகரெட் பிடிப்பார்கள். இந்த பீடி × சிகரெட் எதிரிடை அங்கு வர்க்க வேறுபாடைக் குறிக்கும் குறியீடு ஆனது. இதற்கு அங்கு வலுவாக தோன்றின மார்க்ஸிய கதையாடல் ஒரு காரணம். “பீடி உள்ளது, தீப்பெட்டி உண்டா?” எனும் கேள்வி மறைந்து வாழும் தோழர்கள் பரஸ்பரம் அடையாளம் காண்பதற்கான ஒரு சமிக்ஞையாக பல இடதுசாரிப் படங்களில் வரும். இடதுசாரிகளை நேரடியாய் சித்தரிக்காத, விளிம்புநிலையினர் குறித்த படங்கள் அங்கு எண்பதுகள் தொட்டே வருகின்றன. இப்படங்களிலும் நாயகனின் முரட்டு கலகத்தன்மையை சுட்டுவதற்கு பீடி பயன்படுகிறது.


வேறெந்த மொழிகளையும் விட மலையாள சினிமாவிலே நாயகியின் அருகில் நின்று அலட்சியமாய் பீடி புகைக்கும் நாயகர்கள் வருவார்கள். பீடிப் புகை அப்பெண்ணின் முகத்தை சூழ்ந்து கலைகையில் நாயகனின் ஆண்மை மூர்க்கமடைந்து அவளை கலைத்து ஆக்கிரமிக்கும் குறியீடு காட்சிப்படுகிறது. ஒரு சாதாரண காதல் காட்சியில் பின்னணியில் இப்படியான ஒரு செக்ஸுவல் தொனியை அளிக்க புகை பயன்படுவது மலையாள சினிமாவின் சுவாரஸ்யங்களில் ஒன்று. நாயகனை அந்தளவு முரடனாய் காட்ட வேண்டாம் என இயக்குநர் நினைத்தால் நாயகி வரும் போது பீடியை கீழே இட்டு அணைப்பவனாய் நாயகன் வருவான்.
இங்கு ஒரு முக்கியமான கேள்வி வருகிறது: ஏன் மலையாள படங்களில் பீடி தோன்றுமளவுக்கு தமிழில் சிகரெட் தோன்றவில்லை? ஏன் சிகரெட்டுக்கு பீடியின்சமூக அங்கீகாரம்கிடைக்கவில்லை? இதற்கு இடதுசாரி அரசியல் காரணமாய் மலையாள சினிமாவில் அடித்தள மக்கள் பிரதானமாவதும், கேரள சமூகத்தில் பீடி அடித்தள மக்களின் ஒரு அன்றாட அடையாளமாக பார்க்கப்படுவதும் காரணம். அங்குள்ள அபூர்வ அரசியல் பண்பாட்டு சூழ்நிலை காரணமாய், பீடி புகைப்பது ஒரு சமூக ஒழுங்கு மற்றும் மரபு மீறலாக அல்ல ஒருவித அரசியல் பண்பாட்டுக் கலகமாய் அர்த்தம் பெறுகிறது.
தமிழ் ஹீரோயின்களும் சிகரெட்டும்
ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை, நம் தமிழ் சினிமாவில் பெண்கள் சிகரெட் புகைப்பது ஒரு சுட்டித்தனமான கலக விளையாட்டாக காட்டப்பட்டு வந்தது. நாயகி தன் தோழிகளுடன் சிகரெட் பிடிக்க முயன்று சிரமப்பட்டு இரும அதை நாயகன் கண்டு பிடித்து அவளை சீண்டுவதும் அந்த சீண்டலின் மூலம் அவளை அவன் நெருங்குவதும் இப்படங்களில் வரும் ஒரு டெம்பிளேட். “அக்னி நட்சத்திரத்தில்அமலா சிகரெட் பிடிக்க முயன்று பிரபுவிடம் மாட்டுவதாய் ஒருரொமாண்டிக்காட்சி வரும். “எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமியிலும்இதே போல அசினை ஜெயம் ரவி சிகரெட்டை வைத்து சீண்டி அடக்கும் காட்சி வரும். ஏன் இப்பெண்கள் மட்டும் சிகரெட் பிடித்தார்கள்? சிகரெட் பிடிக்கும் பெண்ணின் இயல்பாக நம் சினிமா எதைக் காட்டுகிறது?
பொதுவாக சற்றே விடலைத்தனமும் சுட்டியும் வேடிக்கை சுபாவமும் விளையாட்டுத் துணிச்சலும் கொண்ட பெண்கள் பாலியல் கவர்ச்சி மிக்கவர்கள். குறிப்பாய், ஆண்மை செருக்கு கொண்ட நாயகனுக்கு இத்தகைய பெண்கள் பொருத்தமாய் இருப்பார்கள். “இதயம்படத்தில் வாயில்லா பூச்சியான முரளிக்கு நாயகியாக வரும் ஹீரா சிகரெட் புகைத்தால் அது அவள் மீது வெறுப்பு உண்டாக்கும்படியாய் இருக்கும் அல்லது நாயகனின் ஆண்மையை வெகுவாய் மட்டுப்படுத்துவதாய் மாறும். ஆனால் ஏற்கனவே அடக்கி ஆளும் இயல்பும் உடல் வலுவும் கொண்டவனாய் இருக்கும் பாக்ஸரும் போலீஸ் அதிகாரியுமானஅக்னி நட்சத்திரம்பிரபுவுக்கு அவனைப் போன்றே துணிச்சலும் துறுதுறுப்பும் மிக்க ஒரு நாயகியை அடக்குவதே சவால். அங்கு வன்முறையும் பாலியலும் கைகோர்க்கிறது. காதலும் ஒரு சண்டைக்காட்சி போல ஆக அதற்கு கிக் கூடுகிறது. “எம். குமரனிலும்இதுவே நிலை. ஆக, இத்தகைய சிகரெட் பிடிக்கும் பெண்கள் ஆணை ஆதிக்கமிக்கவனாய் கூடுதலாய் காட்டவும், காதல் காட்சிகளில் கிளர்ச்சியை கூட்டவும் உதவினர்.
ஆனால் இந்த டெம்பிளேட் சமீபத்தைய படங்களில் வெகுவாய் மறைந்து விட்டது. இன்றுராஜா ராணிபோன்ற படங்களில் அமலா போன்ற ஆதிக்க சுபாவம் கொண்ட நாயகிஇதயம்முரளி போன்ற பிள்ளைப்பூச்சி நாயகர்களை நேசிப்பது அதிகம் வருகிறது. நாயகனை நாயகி மிரட்டுவதும் ஓட விடுவதுமே இன்றைய டெம்பிளேட். சமீபத்தில் வெளிவந்தபியார் பிரேமா காதல்”, “96” போன்ற படங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் நாயகிகளே மக்களால் ரசிக்கப்படுகிறார்கள்; அப்பிராணி நாயகனே கைத்தட்டு பெறுகிறான். அதே நேரம், இப்பெண்கள் ஒரு ஆணுடன் இரவில் ஒரே அறையில் தங்குவது, குடிபோதையில் உடலுறவு கொள்வது வரை காண்பிக்கப்பட்டாலும் சிகரெட் புகைக்கும் சித்தரிப்புகள் வருவதில்லை.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...