Skip to main content

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (6)


இருந்தும் காணாமல் போனவர் பற்றி சுவரொட்டி




இது மிக மிக சுவாரஸ்யமானது. ஏற்கனவே நாம் கண்ட சுவரொட்டிகள் நிஜமானவை, ஆனால் நிஜத்திலும் பல முரண்கள் கொண்டுள்ளவை என்பதால் அவை புனைவுத் தன்மை பெறுகின்றன. ஆனால் இது வெளிப்படையாகவே ஒரு புனைவு. பகடிக்காக, விமர்சன நோக்குடன் உருவாக்கப்பட்ட சுவரொட்டி இது. டாக்டர் முத்தையா பரமக்குடியை சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.. தினகரனின் சொகுசு பங்களாவில் அவர் மறைவில் இருந்த காலத்தில் அவர் அதிமுகவுக்குதுரோகம் இழைத்ததைவிமர்சிக்கும் பொருட்டுஅம்மாவின் உண்மை விசுவாசிகள்ஊரெங்கும் ஒட்டிய சுவரொட்டி இது. மற்றவை நிஜத்துக்குள் வரும் புனைவு என்றால் இவை புனைவுக்குள் வரும் புனைவு. ஆனால் இதிலும்நிஜம்எனக் காட்டும் எத்தனிப்பு உண்டு; கூடவே வெறும் (ஆனால் சற்றே கோபமான) விளையாட்டு தான் இது எனக் காட்டும் முயற்சிகள் / குறிப்பான்கள் இந்த சுவரொட்டியில் உண்டு. இந்த முரண்களை இதை எழுதியவரே உணர்ந்து ஆவேசமாய் வலியுறுத்துவதே இதை நகைச்சுவையான சுவரொட்டி ஆக்குகிறது. அந்தஅழுத்தமானஇடங்களைப் பார்ப்போம்.


இந்த பிரதியில்காணவில்லைஇரண்டு முறை தடிமனான எழுத்தில் கறுப்பு வண்ணத்தில் அழுத்தி சொல்லிப் படுகிறது. இது ஒருநிஜகாணவில்லை சுவரொட்டி எனும் தன்மையை கொடுக்கிறது. ஆனால் இதற்கு கீழே உடனடியாய் இது ஒரு விளையாட்டு என சுட்டும்படியாய்அம்மாவின் துரோகிஎனும் வாக்கியம் வருகிறது. ஆனால் இந்த விளையாட்டுக்குள் மற்றொரு முரணாய் அதிமுகவின் கறுப்பு-வெள்ளை-சிவப்பு வண்ணக்கலவைஅம்மாவின் துரோகி / Dr.முத்தையாஎனும் சொற்களில் தோன்றும்படி வடிவமைத்திருக்கிறார்கள். அதாவது இந்ததுரோகிஇன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் பாருங்கள் என முரணாகவே ஒரு முரணை சுட்டுகிறார்கள். இதை அடுத்து, “M.L.Aவைஎன்பது சிறு எழுத்துக்களில் எந்த குறிப்பான பொருளுமற்ற நீல வண்ணத்தில் வருகிறது. இது அவரது பதவியை மெல்ல இன்மையை நோக்கித் தள்ளுகிறது.

கூடவேதொகுதி மக்கள் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்எனும் பகடி வாக்கியமும் வருகிறது. காணாமல் போனவரை கண்டால் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்ணோ முகவரியோ இல்லை - இதன் பொருள் இதை எழுதியவரேதேடுதல் வேட்டையில் ஈடுபடும் தொகுதி மக்கள்என்பது. ஆனால் தொகுதி மக்கள் அனைவரும் அதிமுகவினரா? அப்படி இருக்க முடியாதே? அப்படி எனில் இந்த பிரதியின் எழுத்தாளன் யார்? அதிமுக நிர்வாகமா? .பி.எஸ், எடப்பாடியா? இருக்க முடியாது. அவன் இந்த இரண்டு தரப்பும் அல்லன் - அவனேஅம்மாவின் உண்மை விசுவாசி”. ஆனால் உண்மை விசுவாசி தொகுதி மக்களாகவோ கட்சியாகவோ கட்சி நிர்வாகமாகவோ அல்லாமல் இருந்தால் அவன் யார்? இந்த குழப்பமே இந்த பகடியை ஒரு சுயபகடியாகிறது. அதிமுகவின் இன்றைய நிலை பற்றி வாசிக்கும் பொதுவாசகன் இங்கு சிரித்துக் கொள்ளும் சாத்தியத்தை இந்த சுவரொட்டி (அந்நோக்கமின்றியே) ஏற்படுத்திக் கொடுக்கிறது.





இறுதியாக...

கட்டுடைத்தல் ஒரு விமர்சனக் கருவி அல்லஅது அர்த்தங்கள் ஒன்றையொன்றை முறியடிக்கும் ஒரு ஜாலியான விளையாட்டாக, ஒரு ஜாலமாக, லீலையாக வாழ்க்கையை காணும்படி நம்மை அழைக்கும் ஒரு மாற்றுப் பார்வை. கட்டுடைத்தலை புரிந்து கொள்வது நம் கட்டுக்களில் இருந்து விட்டு விடுதலையாவது. தெரிதா நம்மை உடைக்க கேட்பது நம் மீது கருத்துக்கள், நம்பிக்கைகள், சொற்கள் கொண்டுள்ள உடும்புப் பிடியை. இந்த பிடி வெறும் கட்டமைப்பு, அது சொற்கள் இருமைக்குள், முரண்பாடுகளுக்குள், பூடகங்களுக்குள் உருக்கொள்கின்றன, தன்னளவில் இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என அறிய வரும் போது நாம் பாரதியைப் போலநீங்கள் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோஎன களிப்புடன் அனைத்து கட்டமைப்புகளையும், அவற்றின் கட்டுகளையும் நோக்கி வினவுகிறோம்அந்த வினா ஒரு களிவிளையாட்டின் துவக்கம்!

                                                                                                                             நன்றி: உயிர்மை, ஏப்ரல் 2019

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...