Skip to main content

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (1)

ஆண்-பெண் உறவு பிக்பாஸ் வீட்டில் (மலையாளம் மற்றும் தமிழில்) எப்படி உள்ளது, இது நமது சமகால பண்பாட்டை, பாலினங்களின் அதிகார படிநிலைகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என சமீபத்தில் நான் எழுதிய பிக்பாஸ் கட்டுரைகளில் கேட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்போது பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு உள்ள ஒரு முக்கியமான வித்தியாசத்தைப் பற்றி இப்போது பேசப் போகிறோம். இந்தி பிக்பாஸில் பெண்களின் நிலையையும் மேலோட்டமாய் ஒப்பிடுவோம்
.

தமிழ் பிக்பாஸின் இரண்டு பருவங்களிலும் ஆண்-பெண் சமத்துவம் வீட்டின் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது என ஒரு தோழி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் அப்படி சொல்லக் காரணம் மலையாள பிக்பாஸின் முதல் பருவத்தின் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் சினிமா நடிகர் அனூப் சந்திரன் வீட்டின் காரணவர் (தலைவர்) ஆன போது நடந்த சில விசயங்களே. வீட்டின் உறுப்பினர்களுக்கு பணிகளை ஒதுக்கும் போது அவர் சமையல் வேலைகளை மொத்தமாய் பெண்களிடமும் ஒப்படைத்து விட்டார். இது சமத்துவத்துக்கு எதிரானது அல்லவா என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மோகன்லால் மறைமுகமாய் கேள்வி கேட்டார். பெண்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என வீட்டின் பெண் பங்கேற்பாளர்களிடமும் கேள்வியை முன்வைத்தார். ஆனால் அவர்களில் ரஞ்சினி சற்று வெளிப்படையாய் இதை கண்டிக்க முயன்றார். ஆனால் பிற பெண்கள் ஆவேசமாய் இதை எதிர்க்காததால் அவரது சொற்கள் வெறும் முனகலாய் அமுங்கிப் போயின. அனூப் இதற்கு விளக்கமளிக்கையில் தான் பெண்களை மதிப்பதாகவும் அவர்களாலே மிகுந்த அக்கறையுடன் சமைலறையின் காரியங்களை கவனிக்க முடியும் என்பதாலே, ஒருவித அங்கீகாரமாய் மட்டுமே அப்பணியை முழுக்க அவர்களிடம் தான் ஒப்படைத்ததாய் சொன்னார். இதற்கும் பெண்களிடம் இருந்து எதிர்வினைகள் இல்லை. சமையல் வேலையை எடுத்துக் கொண்டு நூறாண்டுகளுக்கு முன்பான இல்லாள்களைப் போல செயல்பட அவர்கள் உற்சாகம் காட்டுவதாகவே தென்பட்டது. இத்தனைக்கும் மலையாள பிக்பாஸில் அரசியல் மொழி நன்கு பரிச்சயமான, போராடவும் மறுத்துரைக்கவும் தயங்காத பெண்கள் அதிகம். அவர்கள் ஏன் தம் மீது திணிக்கப்படும் பாலின கட்டமைப்பை எதிர்க்கவில்லை?

இதைப் பற்றி உரையாடுகையில் தான் தோழி கேட்டார்: இதுவே தமிழ் பிக்பாஸில் என்றால் ஒரு பருவத்தில் நமீதாவும் காயத்ரியும் ஜூலியும் அடுத்த பருவத்தில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா போன்றோரும் கடுமையாய் எதிர்த்திருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த முடிவை எடுத்தமைக்காக கமல்ஹாசன் அந்த வீட்டுத் தலைவரை அரைமணிநேரம் குழப்பி குழப்பி கண்டித்து மூளை கொதிக்க வைத்து தெறிக்க விட்டிருப்பார். ஆனால் மோகன்லால், ஒப்பிடுகையில், பெண் என்பவள் என்ன சமையலறைக் கைதியா என்றெல்லாம் கொதிக்கவில்லை. கேரளா மிக முற்போக்கான மாநிலம் என்கிறோம். அங்கு தாய்வழி சமூகங்கள் தழைத்தன என்றும், அங்குள்ள பெண்கள் துணிச்சலானவர்கள் என்றும் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் ஏன் இப்படி சில விசயங்களில் அவர்கள் மிகப்பிற்போக்காய் இருக்கிறார்கள்?

இந்த கேள்வியுடன் தமிழ் பிக்பாஸுக்கு வந்த தோழி அங்கு பெண்கள் கூடுதல் சுயமரியாதையுடன் இருப்பதாய் கூறினார்

சரி, இது உண்மையெனில், தமிழகம் மற்றும் கேரளாவில் ஆண்-பெண் உறவு இப்படித் தான் மிகவும் முரணாக உள்ளதா என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். ஒரு முற்போக்கான மாநிலம் ஆண்-பெண் விசயத்தில் பிற்போக்காய் நடந்து கொள்கிறது. ஒரு பிற்போக்கான மாநிலமாய் காணப்படும் தமிழகமோ பெண்களை கண்ணியமாய் சுயமரியாதைக்கு இடமளித்து நடத்துகிறது. ஏன் இப்படி?

இந்த கேள்வியுடன் எங்கள் உரையாடல் முடிந்து போனாலும் நான் மேற்கொண்டு இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு பதில்கள் எனக்குத் தோன்றின.
ஒன்று, எல்லா சமூகங்களும் இப்படி முரண்பாட்டு முடிச்சுகளாகவே இருக்க முடியும். ஒரு பெண் முற்போக்காக வெளிப்பட அவளது இருப்பில் ஒரு பிற்போக்குத் தன்மை இருந்தே ஆக வேண்டும்

அடுத்து, கேரள சமூகம் முற்போக்கின், கல்வியின், இடதுசாரி அறிவியக்கங்களின், சமூக நிதியில் கலைகளின் பாதையில் நடந்து அரைநூற்றாண்டு கடந்து விட்டதென்றாலும், அங்கு பெண் ஆணுக்கு ஒரு அங்குலம்உயரத்தில்குறைவு தான். அங்கு பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதும் அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் சமூகம் நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கட்டமைப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்றாலும் பெண்கள் இங்கு கூடுதல் சுதந்திரத்துடன், தன்னியல்புடன், தன்னிறைவுடன் உள்ளார்கள் என்பதே உண்மை. இன்னொரு பக்கம், இங்கு பெண்களின் சுயமுனைப்பும் துணிச்சலும் ஆண்களை பின்னுக்குத் தள்ளி அவர்களின் அதிகாரத்தை அச்சுறுத்துகிறது. தாம் குடும்ப வெளிக்குள், உறவு வெளிக்குள் இடமற்று புறந்தள்ளப்படுவோம் எனும் அச்சம் இங்கு ஆண்களுக்கு மிகுதி. வடிவேலுவை கோவை சரளா துவைத்தெடுக்கும் நகைச்சுவைக் காட்சி நினைவுள்ளதா? அது போல மலையாளத்தில் ஒரு காட்சி கூட இல்லை. “மொழிபடத்தில் ஜோதிகா குடித்து விட்டு தன் மனைவியை துன்புறுத்தும் கணவனை துணிச்சலாய் அடித்து திருத்துவார். இதைக் கண்டு தான் ப்ரித்விராஜ் அவர் மீது மையல் கொள்வார். பெண்ணுக்காய் மறுகி உருகி பாட்டோ பாட்டென்று பாடி பின்னே திரியும் சோக நாயகன்கள் தமிழில் தொண்ணூறுகள் வரை பிரசித்தம். முரளி இதற்கென்றே தனிமுத்திரை பெற்றார். ஆனால் கேரளாவிலோ பெண்ணால் நிராகரிக்கப்பட்டு அந்த துயரம் தாளாமல் நெஞ்சம் உருக காதலில் சிக்கி அழியும் காதலன் எனும் தொன்மமே இல்லை எனலாம். அப்படியான நாயகர்கள் தோன்றும் போதும் (“அன்னயும் ரசூலும்போல) அவர்கள் தமிழ்ப் படங்களின் நேரடி தாக்கத்தினாலே உருவாகிறார்கள். “பிரேமத்தில்நிவின் பாலி தன்னிரக்கம் தொனிக்க தோன்ற வேண்டிய பாத்திரம். ஆனால் அவர் மாறாக தொடர்ந்து பெண்களால் நிராகரிக்கப்பட்டாலும்ஸ்படிகம்மோகன்லால் போல திமிறும் ஆண்மையுடன் தான் தெரிகிறார். இந்த நிவின் பாலியைகாதல்படத்தின் பரத்துடன் ஒப்பிட்டால் வித்தியாசம் புரியும். தமிழக ஆண் தொன்மத்தில் தோன்றும் நாயகன் சற்று பலவீனப்பட்ட, பாவப்பட்ட பிறவியாக ஒரு புறமும்சிங்கம்சூர்யா போல மிகையான ஆற்றல் கொண்டவனாக இன்னொரு பக்கமும் இருக்கிறான். ஆனால் மலையாள சினிமாவில் இத்தகைய சித்தரிப்புகள் மிக மிக அரிது

இது தமிழக, கேரள சமூக நிலையை நேரடியாக பிரதிபலிப்பதன் நான் கூற முயலவில்லை; இது அம்மாநில மக்களின் உள்ளார்ந்த விழைவுகளை சித்தரிப்பதாக கூறுகிறேன்.

Comments

ஜெயலலிதா மறைவை ஒட்டி போகன் சங்கர் அவர்களின் ஒரு முகநூல் பதிவு ஒன்றில் கேரளத்தில் ஒரு பெண்ணை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதாக எழுதியிருந்தார். ஒழிமுறி திரைப்படத்தை பார்த்த பின் இவ்வாறு தோன்றும். கேரளத்து ஆண்கள் அடி பட்டு மீண்ட பின் மிகுந்த முன்னெச்செரிக்கையுடன் இருப்பதாக கருதுகிறேன். ஒரு வேளை தாய் வழி சமூக அமைப்பு வழக்கொழிந்து பின் வரும் தலைமுறைகளில் ஆண்கள் மிகுந்த விசையுடன் இருப்பது தான் பொது போக்கு போலும்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...