Skip to main content

விமர்சகன் ஒரு படைப்பாளியின் நெஞ்சில் பாய்ச்சும் ஈட்டி


ஹெரால்ட் புளூம் பற்றின கேள்வி பதிலின் தொடர்ச்சி



கேள்வி: அப்படியானால், (கதையை கதையாக மட்டுமே படிக்க வேண்டுமெனில்) விமர்சனம் என்பது கதைக்குள் ஆரம்பித்து கதைக்குள் மட்டுமே முடிந்துவிடும் இல்லையா ?
கதையாக மட்டுமே அணுகினால், இலக்கியத்தில் பிற துறைகளின் தேவை என்பதே இல்லாமல் ஆகிவிடுகிறதே ? (பாலராம கிருஷ்ணன்)

பதில்: விமர்சனத்தை இரு விதமாக அணுகலாம். ) வாசிப்பனுபவத்தில் கண்டடைந்ததை முன்வைப்பது; இதில் முடிந்தளவுக்கு எந்தவொரு முன்முடிவுகளை கேங்ஸ்டர் படத்தில் சட்சட்டென துப்பாக்கி நீட்டுவதைப் போல எடுத்து நீட்டாதிருப்பது. இந்த வகை விமர்சனங்களில் ஆகச்சிறந்தவை ஒரு பிரதியை தெளிவாக்காமல் மேலும் சிக்கலாக்கி அது எதையும் தெள்ளத்தெளிவாக திடமாக சொல்வதில்லை, தன்னையே மறுத்து, தன்னுடனே முரண்படுவதாக ஒரு பிரதி எப்படி உள்ளது எனக் காட்டுவது. தெரிதா தனது கட்டுரைகளில் இதை செய்கிறார். இது விமர்சனத்தை இலக்கியத்தின் தரத்துக்கு எடுத்துச் செல்லும்.

) உளவியல், சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் விமர்சனக் கோட்பாடுகளையும் படைப்பாளி குறித்த பல தொன்மங்களையும் வைத்து (புதுமைப்பித்தன், ஆத்மாநாம், தலித் படைப்பாளிகள் போன்றோருக்கு இது நடந்துள்ளது) பிரதியை விரிவாக்கி படிப்பது. இது சோற்றில் குழம்பை ஊற்றி குழைத்து அடிப்பதைப் போல. சோற்றின் சுவையை, குணத்தை மாற்றி அதை மற்றொன்றாக ஆக்கி சாப்பிடுகிறீர்கள். சிலர் விஸ்கியின் கடுப்பு பிடிக்கவில்லை என அதில் ஸ்பிரைட், பெப்ஸி ஊற்றி மடக்கென குடிப்பது போன்றும் இது இருக்கிறது
பிற துறைகள்என்பவை இலக்கியத்தை வெளிச்சமாக்குவதற்கான கைவிளக்குகள் அல்ல. அவையும் கதையாடல்கள் தாம். உதாரணமாக, ஜெயமோகனின்விஷ்ணுபுரத்தைநீங்கள் சுதந்திரத்துக்குப் பின்பான இந்திய அரசியலை விமர்சிக்கும், பகடி செய்யும் ஒரு மிகுகற்பனைப் படைப்பாக, நீதிக்கதையாக வாசிக்கலாம். அது சுவாரஸ்யமாகவும் இருக்கும். நான் மறுக்கவில்லை. ஆனால் இங்கு நாம் வாசிப்பது வரலாற்றையா இலக்கியத்தையா? இரண்டையும். இந்த வரலாறு என்பது நாம் நேரடியாக அனுபவித்து புலனக்ள் வழியாக கண்டறிந்ததா? இல்லை. இந்த வரலாறும் ஒரு எழுதப்பட்ட பிரதி அல்லது கதையாக பலமுறை பேசப்பட்ட ஒரு சம்பவம். இப்போது நாம் ஒரு பிரதியின் மீது மற்றொன்றை வைக்கிறோம். இப்போது வரலாற்றின் சுவாரஸ்யம் நமக்கு அந்த பிரதியின் சுவாரஸ்யமாக தவறாகத் தெரிகிறது.
நீங்கள் படுக்கையில் கிடக்கும் உங்கள் மொபைல் போன் மீது தலையணையை தெரியாமல் வைத்து விடும் போது என்னாகிறது? தலையணை பெரிதாக முன்பு இருக்கிறது, ஆனால் மொபைல் மறைந்து விடுகிறது. வரலாறு இங்கே ஒரு தலையணை போல வந்து நாவலை மறைத்து விடுகிறது. நல்ல வாசிப்பு என்பது இந்த மொபைல் இப்போது படுக்கைவிரிப்புக்குள் மேலும் ஒளிந்து கொண்டிருப்பதைக் காட்டுவது
வரலாற்றை நீங்கள் பயன்படுத்தும் போதும் அது எப்போது நல்ல வாசிப்பு ஆகிறது தெரியுமா?
சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் நாவலின் அத்தியாயங்களை வரலாற்றெழுத்தியலாக, ஒரு புது பிரதியாக எடுத்துக் கொண்டு அதில் மேலும் தோன்றுகிற இருண்மையை, சிடுக்குகள், முரண்கள், பகுத்து கூறவே முடியாத இடங்களை நாம் கண்டடைகிற போது தான். ஆனால் நாம்பிற துறைகளைஇலக்கிய பிரதியை தெளிவுபடுத்த எடுத்து பயன்படுத்தும் போது அது மனநலம் இல்லாத ஒருவருக்கு நிறைய மாத்திரைகள் கொடுத்து மந்தநிலையில் வைத்துஇப்போது பாருங்கள் அவர் கத்துவதோ பிரச்சனை பண்ணுவதோ இல்லை. நார்மலாகி விட்டார்என சொல்வதைப் போன்றது
மேற்சொன்ன தவறுகளை ஒரு விமர்சகனாக நானும் செய்திருக்கிறேன், பலமுறை. ஆனால் என்னை விட அதிகமாக நமது விமர்சகர்கள் உலகம் முழுக்க இந்த அபத்தத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் விமர்சகர்கள் அல்ல இலக்கிய விரோதிகள்
நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா - ஒரு படைப்பாளியிடம் அவரது படைப்பை லாஜிக்கலாக தெளிவாக அலசி முன்வைக்கும் போது அவர் தன் நெஞ்சில் யாரோ ஈட்டியை பாய்ச்சியதைப் போல உணர்வார். காரணம் இது தான்.

  • ஆர். அபிலாஷ் 

Comments

Unknown said…
விமர்சனங்கள் படைப்பாளனைகூர்மைப்படுத்துகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...