Skip to main content

“கில்லியை” (அல்லது “ஒக்கடுவை”) எங்கிருந்து சுட்டிருப்பார்கள்?




கில்லிஎனக்குப் பிடித்த ஆக்‌ஷன் படங்களில் ஒன்று. அதுவும் விஜய்யின் வீட்டில் அவரது அறைக்குள் பதுங்கி இருக்கும் திரிஷா வரும் இடங்கள். ஒருமுறை அவரது அம்மா வந்து விட திரிஷா பொம்மைகள் நடுவே மறைந்து கொள்ளும் காட்சி வெகு அழகானது. கண்னிமைக்காமல் அவர், அந்த வெகுளி அம்மா சொல்வதைப் போல, ஒரு கண்கொள்ளா அழகு கொண்ட உயிருள்ள பொம்மையைப் போல இருப்பார். ஆனால் நம் இயக்குநர்களைத் தான் அப்படி சுலபத்தில் மனம் விட்டு பாராட்டி விடக் கூடாதே! நீங்கள் பாராட்டி விட்டு நிமிர்ந்தால் அதை எங்கிருந்தோ உருவின கதை தெரிய வரும். நேற்று இப்படித் தான் ஸ்பீல்பெர்கின் E.T. பார்த்துக் கொண்டிருந்த போது இதே போன்றதொரு காட்சி சட்டென இடறியது


E.T.யில் எலியட் எனும் சிறுவன் ஒரு குழந்தையைப் போன்ற, கள்ளங்கபடமற்ற, விளையாட்டுத்தனமான வேற்றுகிரகவாசியை கண்டடைகிறான். அந்த வேற்றுகிரகவாசி ஒரு ஆய்வுக்காக கூட்டமாக உலகத்துக்கு வந்த போது எதேச்சையாக இங்கேயே கைவிடப்படுகிறது. எலியட் அதை பாதுகாக்கிறான். அதற்கு மொழியையும் மனித வழக்கங்களையும் சொல்லித் தருகிறான். தனது சகோதரி மற்றும் சகோதரிக்கு அதை அறிமுகப்படுத்துகிறான். மூவரும் சேர்ந்து அதை திரும்ப தன் கிரகத்துக்கு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்; விசாரணை அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்றி கடைசியில் அதை ஒரு பறக்கும் தட்டில் ஏற்றி அனுப்பியே விடுகிறார்கள்

இதற்கு நடுவே ஒரு காட்சியில் எலியட் குளிர்பதனப்பெட்டியில் இருந்து பொருட்களை எடுக்கையில் வேற்றுகிரகவாசி ஏதோ பொருட்களை கவிழ்த்துப் போட்டு சத்தம் எழுப்புகிறது. அவன் அதற்கான உணவுடன் வந்து பார்க்க அது பொம்மைகளுக்குப் பின்னே பதுங்கி இருக்கிறது. அது மெல்ல தன்னை வெளிப்படுத்த அவன் அதனுடன் உரையாடிகிறான். இந்த சில வினாடிகள் வரும் காட்சித் துண்டை சற்றே அழகு கூட்டி ரொமாண்டிக்காக்கி, பூரிப்பை உணர்த்தும் பின்னணி இசையுடன், “கில்லிபடத்தில் அந்த பிரசித்தமான பொம்மைக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். அந்த சிறுவனின் இடத்தில் விஜய்; வேற்றுகிரகவாசியின் இடத்தில் திரிஷா
(கில்லி தெலுங்கு படம் ஒக்கடுவின் ரீமேக் என்பதால் மேலே சொல்லியுள்ள பணியை "ஒரிஜினலாக" தெலுங்கு இயக்குநர் குணசேகரே பண்ணி இருக்க வேண்டும்)








இந்த ஒற்றுமை புலப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த படமுமே ஒருவிதத்தில் E.T.யின் ஆக்‌ஷன் ரொமாண்டிக் மறு உருவாக்கம் தானே என கேள்வி எனக்குள் எழுந்தது. ஆம்

விஜய் எதேச்சையாக திரிஷாவை காப்பாற்றுகிறார். அதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரதான சவாலே தன் பெற்றோரிடம் இருந்து மறைப்பது; E.T.யிலும் இதுவே சவால். அடுத்து திரிஷாவை வெளிநாட்டுக்கு தப்பித்துப் போக வைக்க வேண்டும். E.T.யில் இது வேற்று கிரகம். இதற்காக விஜய் மொத்த தமிழக அரசு எந்திரத்துடனே மோத நேர்கிறது.  E.T.யில் குழந்தைகள் அரசாங்க அதிகாரிகளின் பெரும்படைக்கு எதிராக போராடி வேற்றுகிரகவாசியை காப்பாற்றி அனுப்புகிறார்கள். இதற்கு நடுவே கொஞ்சம் கபடி கபடி, அழகிரியை நினைவுபடுத்தும் பிரகாஷ்ராஜ், விஜய்யின் கலாட்டாக்களை சேர்த்தால்கில்லிதோன்றி விடுகிறது. முக்கியமான வித்தியாசம் கடைசியில் வெற்றிகிரகவாசி தன் கிரகத்துக்கு மீள, இங்கே திரிஷா விமானம் ஏறாமல் திரும்ப விஜய்யுடன் வாழ வருகிறார் என்பது. ஒரு குழந்தைகள் படத்தில் இருந்து ஒரு அடிதடி, பரபரப்பு, காதல் படத்துக்கான கதை வடிவத்தை எப்படி உருவுகிறார்கள் என யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது


பின்குறிப்பு: மணிரத்னம் இதற்கு முன்பே E.T. மற்றும் To Kill a Mocking Board ஆகிய படங்களின் காட்சிமொழியை பயன்படுத்திஅஞ்சலிபடத்தை எடுத்திருக்கிறார்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...