Skip to main content

இந்திய கிரிக்கெட் அணியின் காயங்களும் அணி சேர்க்கை சிக்கல்களும்

காயத்தினால் வெளியேறும் ஹர்த்திக் பாண்டியா


முன்பு எப்போதும் இவ்வளவு காயங்கள் இந்திய அணியை சீர்குலைத்துள்ளதாகத் தோன்றவில்லை - பந்து வீச்சில் ஷமி, பும்ரா காயத்துக்குப் பிறகு ஆட வந்துள்ளார்கள்; புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக கடந்த சில வருடங்களாகவே அணியில் அரிதாகத் தான் தென்படுகிறார். தீபக் சஹாரும் ஒரு நல்ல துவக்கத்துக்குப் பிறகு காயத்தினால் காணாமல் போய் விட்டார். அதன் பிறகு ரோஹித் ஷர்மா உடல்நிலை குறைபாடு காரணமாய் அடிக்கடி ஓய்வு அளிக்கப்பட்டு இன்றைய ஆட்டத்தில் மீண்டும் காயப்பட்டிருக்கிறார். தவனும் காயத்தினால் ஏற்பட்ட இடைவேளைக்குப் பிறகு ஆட வந்து மெல்ல மெல்ல நல்ல ஆட்டநிலையை எட்டி வருகிறார். ஆனால் அவரும் இன்று காயப்பட்டிருக்கிறார். அதே போல காயப்பட்டியலில் வேகவீச்சாளர் சயினியும் வேறு சேர்ந்திருக்கிறார்.

ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியா முதுகுக்காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.


 இவ்வளவு உள்ளே-வெளியேக்களுக்குப் பிறகு அணியில் ஒரு நிலையற்ற தன்மை வந்து விட்டது. விராத் கோலி சும்மாவே அணி வீரர்களை மாற்றுவார். இப்போது அவர் இங்கி-பாங்கி போட்டு கன்னாபின்னாவென மாற்றுகிறார். கொஞ்ச நாள் குல்தீப்பும் சாஹலும் இணைந்து பந்து வீசி ஆட்டங்களை நமக்கு வென்றளித்தார்கள் என்றால் பாண்டியாவின் காயம் காரணமாக ஏற்பட்ட தடுமாற்றத்தை இன்றும் இந்திய அணியில் உணர முடிகிறது. அவரிடத்து வேறு நல்ல ஆல்ரவுண்டர் சரியாக அமையாத காரணத்தால் ஜடேஜாவை தொடர்ந்து ஆட வைக்கிறார் கோலி. இரண்டு கால்சுழலர்களில் சாஹலையும் குல்தீப்பையும் மாற்றி மாற்றி ஆட வைக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா நன்றாகப் பந்து வீசினார் என்றாலும் ஆல்ரவுண்டராக அவர் நிரந்தரத் தீர்வாகத் தோன்றவில்லை.

 துவக்க மட்டையாட்டத்திலும் ராகுலும் ரோஹித்தும் இணைந்து ஆடும் வாய்ப்பு தவனின் காயத்தினால் ஏற்பட்டது. அவர்கள் அபாரமாக டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20யில் ஆடினார்கள். ஆனால் தவன் திரும்ப வந்த பின் கோலி ராகுலை ஒரு போட்டியில் எண் 3இல் ஆட வைத்து அடுத்த ஆட்டத்தில் எண் 5க்கு அனுப்பினார். அதோடு ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தினால் அவரிடத்தில் ராகுல் கீப்பராகும் தேவையும் ஏபட்டது. அதிர்ஷடவசமாக இந்த மாற்றம் நல்ல முடிவுகளைத் தந்தது. ராகுல் எண் 5இல் அபாரமாக ஆடுகிறார். அவரது கீப்பிங்கும் நன்றாக உள்ளது. இப்போது கோலி செய்ய வேண்டியதெல்லாம் மேலும் குழப்பிக் கொள்ளாமல் ராகுலை தொடர்ந்து அந்த எண்ணிலே கீப்பராக ஆடச் செய்வதும் பண்டை பேட்ஸ்மேனாக மட்டுமே நடத்துவதும் தான்.
இந்த மியூசிக்கல் சேர் அணி மாற்றங்களுக்கு இடையில் நிரந்தரமாக இருப்பது (கோலிக்கு அடுத்தபடியாய்) ஆச்சரியமாக கேதார் ஜாதவ் தான். ஆடுகிறாரோ இல்லையோ எப்படியோ 15 பேர் அணியில் இடம்பெற்று விடுகிறார். அஜய் ஜடேஜா சொல்வது போல ஜாதவின் இடம் கேலிக்கூத்தாக மாறி உள்ளது. இன்று அவரை ஆட வைக்க வாய்ப்பிருந்தும் கோலி பாண்டேவைத் தான் கொண்டு வந்தார். எனில் அவர் ஏன் அணியில் இருக்க வேண்டும்? அவரது பந்து வீச்சு மோசமாகி விட்டது. மட்டையாட்டத்திலும் ஆவேசம் இல்லை. ரொம்பவே தடவுகிறார். களத்தடுப்பு சுத்த வேஸ்ட்.வயதும் 35 ஆகி விட்டது. அவர் அணியில் ஒரு திருஷ்டிபொம்மையைப் போல் இருக்கிறார். எல்லாரிடத்தும் இணக்கமாக அன்பாக. ஆனால் அதற்காக அவரை அணியில் வைத்திருப்பது ஒரு அபத்தம்.
 ஜாதவின் இடத்தில் கர்நாடக அணியில் ஷ்ரேயாஸ் கோபாலைக் கொண்டு வரலாம். அவர் ஆல்ரவுண்டர். கால்சுழல் வீச்சில் குல்தீப்புக்கு நல்ல இணையாக இருப்பார். நல்ல பேட்ஸ்மேனும் கூட. இளைஞர் என்பதால் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒரு நல்ல முதலீடாக இருப்பார்.

அடுத்த ஆட்டம் பெங்களூரில். அதுவே இறுதிப்போட்டி. அதில் தோற்றால் இந்தியா இந்த ஆட்டத்தொடரை இழந்து விடும். ஆகையால் அணிசேர்க்கை துல்லியமாக இருக்க வேண்டும். தவனும் ரோஹித்தும் காயத்தில் இருந்து மீள்வார்கள் எனத் தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுவே என் அணி:

ரோஹித்
தவன்
கோலி
ஷ்ரேயாஸ் / பாண்டே
ராகுல் (கீப்பர்)
ரிஷப் பண்ட்
ஜடேஜா
குல்தீப்
ஷமி
சயினி
பும்ரா



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...