Skip to main content

ஏன் உடலை மட்டும் கேட்க முடியாது



யாத்ரி பெண்களிடம் உடல் விழைவை ஆண் நேரடியாகவே வெளிப்படுத்த வேண்டும் எனும் தொனியில் சிலாக்கியமாக மெத்துமெத்தென எழுதிய அந்த பேஸ்புக் பதிவு எத்தனை விதமான பார்வைகளை, மறுப்புகளை, பாராட்டுகளை கடந்த சில நாட்களில் கடந்து வந்திருக்கிறது எனப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது (மனுஷ் கூட அதைப் பற்றி ஒரு கவிதை எழுதி விட்டார்) - இவ்வளவு விவாதிக்க அதில் ஒன்றுமே இல்லை என்று எனக்கு அதை துவக்கத்தில் படித்த போதே தோன்றியது.

 ஒரு பெண்ணிடம் கடலை போட நினைக்கும் ஆண் தன் இச்சையை முடிந்த அளவுக்கு மறைக்காமல் இருக்க வேண்டும் இல்லையெனில் பெண்கள் இவர்களை friend zoneக்கு அனுப்பி விடுவார்கள் என நிறைய டேட்டிங் பத்தியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒருமுறை friend zoneக்கு போய் விட்டால் பிறகு மீள முடியாது. இதில் கலவரத்தை உன்டு பண்ணும் விவகாரம் ஒன்றும் இல்லை. ஆனால் இது இக்கருத்து இவ்வளவு விவாதிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் யாத்ரி இதை சமூக வலைதள அரட்டைகளில் விடுக்கப்பட்டும் காதல் தூதுகளுக்குப் பொருத்துகிறார் என்பது. அது பலரையும் சீண்டி விட்டது; கிளுகிளுப்பான ஒரு சிந்தனையோட்டத்துக்கு முகாந்திரம் தந்தது.
 பேஸ்புக்கில், உதாரணமாக, பெண்களை அடையும் நோக்குடனே பலரும் கணக்கைத் தொடங்குகிறார்கள். அவர்கள் அதிகமாய் எழுதவோ பகிரவோ மாட்டார்கள். இந்த ஸ்லீப்பர் செல்கள் பேஸ்புக்குக்கு வெளியே ஒரு வளமான வலைதொடர்பை உருவாக்கி ஜாலியாக இருப்பார்கள். இன்பாக்ஸை விட்டால் வேறு உலகமே இந்த ஸ்லீப்பர் புலிகளுக்குத் தெரியாது. எந்த தயக்கமும் இன்றி எல்லா பெண்களையும் நள்ளிரவில் கூடஹைபோட்டு தொந்தரவு பண்ணுவது, எல்லாரையும் முயற்சி பண்ணிப் பார்ப்பது என மிக மிக தீவிரமாக இருப்பார்கள். கடும் இறுக்கத்தில் இருக்கும் பெண்களில் பலரும் இந்த சமூக வலைதளங்கள் தந்த சுதந்திரத்தால் புதுப்புது உறவுகளை இப்போது பரிசீலிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த வகையான டேட்டிங் என்பது காதலுக்கானது அல்ல. இதில் ஈடுபடுகிறவர்கள் வெகுதெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் யாத்ரி சொல்ல வருகிறார் என புரிந்து கொண்டேன். அவர் இதைச் சொன்னதும் இந்த திறந்தநிலை பாலியலை வசதியாக பேச நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்து விட்டது - அவரைத் திட்டியோ பாராட்டியோ மறுத்தோ இந்த பாலியல் பிரளயத்தை கடந்த சில நாட்களாக பரிசீலித்து வருகிறோம்

சி.எஸ்.கே சொல்வதைப் போல யாத்ரி இந்த விவகாரத்தை ரொம்பவே மிகையாக ரொமாண்டிக்காகப் பார்ப்பதாகவே நினைக்கிறேன் - வெளிப்படையாக செக்ஸ் பற்றி நாம் இன்று பேசலாம், ஆனால் முழுக்க செக்ஸை மட்டுமே முன்வைத்த, எந்த உணர்வுப் பற்றுதலும் இல்லாத one-night standகளுக்கு நம் சமூகம் தயாராகவில்லை என்பதே உண்மை. கள்ள உறவுகளில் கூட நமது ஆட்கள் ஒரு மனச்சாய்வுடனே இருக்கிறார்கள். நமக்கு உடல் மட்டுமே போதாது; உடலுடன் நமக்கு மனரீதியான ஆறுதல்கள், தோள் அணைப்புகள், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் தேவையாக உள்ளன. அதனால் தான் திருமணமானவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடும் போது அது அம்பலமாகும் போது இரு பெண்கள் ஒரு ஆணுக்காக பொதுவெளியில் அடித்துக் கொள்வதை, பக்கம் பக்கமாய் வசையை எழுதுவது, காணொளிகளில் ஒப்பாரி வைப்பதை எல்லாம் பார்க்கிறோம். பொஸஸிவ்னெஸ் இல்லாமல் டிஷ்யூபேப்பர் போல பாலுறவுகளைக் கையாள நம் சமூகம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை - ஒருவிதமான களங்கமின்மை இன்னமும் நம் மக்களிடம் இருக்கிறது; சமூகவலைதளங்களில் நம்மவர்கள் நாடுவது ஒரு மாற்றுக்கணவனை, மாற்று மனைவியை, மாற்றுக் காதலியை, மாற்றுக்காதலனை; அதிக இடையூறு இல்லாத ஒருஉண்மையானஉறவை. ஒரு பெண் தன்னிடம் வரும் ஆணுடன் படுக்க விரும்பலாம்; ஆனால் அவன் அவளைஉடலாகமட்டுமே காண்பதாய்த் தோன்றினால் அவள் காயப்படுவாள். செக்ஸுடன் உணர்வுரீதியான அங்கீகாரத்தை அவள் விரும்புவாள்.

 நம்முடைய ஓரிரவு உறவுகள் இப்படி இருக்கையில் நீங்கள் செக்ஸை வெறும் உடல் சம்மந்தமான விசயமாக நம்மூரில் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...