முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள் (2)

6) காதல் எப்போதும் முரண்களுக்குள் வாழ்கிறது - நிதானமாய் கச்சிதமாய் கராறாய் பகுத்தறிவுடன் நேர்த்தியாய் இருப்பவர்களுக்கானது அல்ல காதல். அது ஒரு பொய்யான குமாஸ்தாத்தனமான ஆண்-பெண் உறவை மட்டுமே உருவாக்கும். நீ எனக்குத் தேவையானதைக் கொடு, நான் உனக்குத் தேவையானதை திரும்பத் தருகிறேன் என்பது ஒப்பந்தம், ஒருவித விபச்சாரம். ‘நீ உனக்குத் தேவையானதைக் கேள், ஆனால் நான் அதைத் தர மாட்டேன், எனக்குத் தர ஆசை என்பதாலே தர மாட்டேன், நீ கேட்டு வாங்கிக் கொள்ளேன்என சீண்டுவதே காதல். ஒன்றைக் கொடுத்து விட்டால் அங்கு காதல் முடிந்து போகிறது, அதை கொடுத்தும் கொடுக்காமல் மீதம் வைப்பதே காதலை தக்க வைக்கிறது.

 ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை குலைக்கும். ஆனால் ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக மற்றொன்றை சொல்லுங்கள். இந்த இரண்டுக்கும் இடையில் ஊசலாடுவதே உங்களுடைய உண்மை எனப் புரிய வையுங்கள். காதலில் செல்லுபடியாகும் ஒரே உண்மை தன் வாலை தானே வளைந்து தின்னும் பாம்பைப் போன்ற உண்மைகளே.

7) நீதி-அநீதி, சரி-தவறு, அரசியல் சரித்தன்மை போன்ற சமாச்சாரங்களுக்கு காதலில் எந்த மதிப்பும் இல்லை என்பது மட்டுமல்ல, இவற்றை எல்லாம் சுமந்து வருகிறவர்களுக்கு காதலில் கதவு உடனேயே மூடி விடும்
8) முற்போக்கு சிந்தனைக்கு காதலில் இடமில்லை. .தா., நீங்கள் ஒரு ஆண் பெண்ணியவாதி, உங்கள் காதலி ஒரு பெண் பெண்ணியவாதி எனில் நீங்கள் பரஸ்பரம் உச்சிமுகர்ந்து பேஸ்புக்கில் பதிவுகள் போடலாம். ஆனால் காதல் அங்கேயே படுத்து உயிரை விட்டு விடும்
9) ஆனால் உங்களுடைய நன்னெறிகளை காதலிக்கு உணர்த்த தவறாதீர்கள், அந்த நன்னெறிகளுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் நேரடி உறவில்லை எனப் புரிய வைத்தபடியே அதைப் பண்ணுங்கள்.

10) உடல் விருப்பமும் விளையாட்டுத்தனமும் சதா மொழியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உங்கள் காதலியின் வறண்ட உதடுகளைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றாலும் உன் உதடுகளை கவ்விக் கொள்ளவா என சும்மாவேனும் சொல்லி வையுங்கள்; அல்லது உங்கள் உடல்மொழி அல்லது பார்வை மூலம் அந்த சேதியை கடத்துங்கள். அல்லாவிடில் காதல் சட்டென இறங்கி நட்பாகி விடும். இதை செய்யும் போது, எப்போதுமே இவனுக்கு செக்ஸ் தான் மனத்தில் என்கிற எண்ணம் அவளுக்கு உங்களைப் பற்றி ஏற்படாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.

 உங்கள் பாணியில் எதையாவது வேடிக்கையாக சொல்லிக் கொண்டிருங்கள். உங்களைப் பிடிக்கும் என்றால் அவள் நீங்கள் அடிக்கும் மொக்கை நோக்குக்குக் கூட சிரிப்பாள். (நீங்களும் அவள் விசயத்தில் அப்படித் தான்.) சிரிக்க சிரிக்க காதலில் ஒரு அபார சுதந்திரம் ஏற்படும். நினைத்ததை எல்லாம் அவளிடத்து சொல்லுகிற, தோன்றுகிற போல அவள் உடலை எடுத்துக் கையாளுகிற சுதந்திரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...