முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்மலா சீத்தாராமனின் பதவி பறிக்கப்படுமா? ஏன்?



நிர்மலா சீத்தாராமனிடம் இருந்து நிதித்துறை விரைவில் பிடுங்கப்படும் என சொல்கிறார்கள். அடுத்த நிதியமைச்சரும் (கெ.வி காமத்) ஒன்றும் பொருளாதார அறிஞரோ உலகளவில் பெயர் பெற்ற நிபுணரோ அல்ல. மோடிக்கு தன் பேச்சைக் கேட்டு வேலை செய்யும் கிளிப்பிள்ளைகளைத் தான் பிடிக்கிறது; தனக்கு ஆலோசனை கூறும் நிபுணர்களை அல்ல. நிபுணர்களிடத்து அவர் பாதுகாப்பற்று உணர்கிறார் என நினைக்கிறேன்.
 நிர்மலா சீத்தாராமனின் குளறுபடிகளை நான் மோடியின் குளறுபடிகளாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு திட்டமும், முடிவும் பிரதமர் ஜியுடையதே. நிம்மி அதை வழிமொழிந்து ஊடகங்களில் ஓங்கி முழங்கும் ஒரு பொம்மை மட்டுமே. ஆனால் மோடியின் ஆன்மீக ஒளிவட்டம் காரணமாக அவரது நிர்வாகத் தவறுகளுக்கு மக்கள் அவரைப் பொறுப்பாக்குவதில்லை; அவரது அமைச்சர்களே அரணாக நின்று திட்டு வாங்குகிறார்கள்.
 அண்மையில் வந்த அறிக்கைகளின் படி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 3% எனும் மிக மட்டமான இடத்தில் உள்ளது. ஆனால் இதற்கும் ஜி பொறுப்பாக மாட்டார். நிம்மியை பதவி விலகச் செய்து குற்றங்களை அவர் தலையில் சுமத்தி, கங்கையில் மூழ்கி எழுவதைப் போல, ஜி தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்வார்.


ஜி உயர்ந்த நோக்கங்களுடன் நாட்டை வழிநடத்துகிறவர், மக்கள் ஏழ்மையில், பட்டினியில், வேலை இழப்பால், தொழில் நசிவால் தவிப்பதற்கு அவரது அமைச்சரவை சரிவர அவரது உத்தரவுகளைப் பின்பற்றாததே காரணம் என அவரது பக்தர்கள் சுலபத்தில் நம்பி விடுவார்கள். (அல்லது சங்கிகள் அப்பழியை முந்தைய காங்கிரஸ் அரசின் மீதோ எதிர்க்கட்சிகள் மீதோ சுமத்தி விடுவார்கள்.) இப்போது நிம்மியை பதவி விலக செய்வதுடன் குற்றம் செய்தது தன் அமைச்சரே ஆனாலும் ஜி கடுமையாக தண்டிப்பார் எனும் பிம்பத்தையும் ஏற்படுத்த முடியும். எப்படிப் பார்த்தாலும் இந்த பரிவர்த்தனையிலும் ஜியே லாபம் அடைவார்.

ஜியின் ராசி என்னவென்றால் அவர் தாமரை இலையைப் போன்றவர். எதுவும் அவரிடத்து ஒட்டாது. அவரே டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி, லாக் டவுன் என தன் மீது சேறு வாரி அடித்தாலும் அது அடுத்தவர் மீதே படும் ஒழிய அவரை அசிங்கமாக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...