Skip to main content

சவுரவ் கங்குலி: நாம கெத்து தானே!

லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி இந்திய வெற்றியைக் கொண்டாடுகிறார், சட்டையைக் கழற்றி...

இந்திய கிரிக்கெட்டை கெத்தும் கம்பீரமும் தெனாவெட்டும் கொண்டதாக உருமாற்றியதில் மிகப்பெரிய பங்கு சவுரவ் கங்குலிக்கு தான். ‘டைகர்பட்டோடிக்கு அடுத்து இந்தியாவில் தோன்றிய மிக வசீகரமான, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிரிக்கெட் கேப்டன் கங்குலி தான். ஒரு இடது கை மட்டையாளனாக கங்குலியின் நளினமும் ஸ்டைலும் டைமிங்கும் ஒப்பற்றது. மேற்கு வங்காளத்தில் கங்குலியை மிகுந்த பிரியத்தோடுதாதாஎன அழைக்கிறார்கள். பெங்காலியில் அதற்குஅண்ணாஎன்று பொருள். ஆனால் தாதா என்றால் ரவுடிகளின் தலைவனும் தானே. கங்குலி ஒரு இனிமையான ரவுடியாக விளங்கினார். சச்சின் மும்பையில் எவ்வளவு பிரபலமோ அதை விட பலமடங்கு கங்குலி கொல்கொத்தாவில் பிரபலம். 2005இல் கங்குலி அணியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது இந்திய அணி கொல்கொத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுடன் ஒருநாள் ஆட்டம் ஒன்றை ஆடியது. அறுபதினாயிரம் ரசிகர்கள் ஒன்று கூடினர். அவர்கள் இந்தியா வெல்வதை பார்க்க வரவில்லை. தங்கள் நாயகனை நீக்கிய இந்திய அணி மீதான தம் கோபத்தை காட்ட வந்தார்கள். தென்னாப்பிரிக்காவை மிகுந்த உற்சாகத்துடன் ஆதரித்ததுடன் இந்திய அணி ஆடும் போதெல்லாம் கூவி தம் எதிர்ப்பை காட்டினர்.


இந்தியாவின் முதுகெலும்பை நிமிர வைத்தவர்

ஆஸ்திரேலியர்கள் திமிருடன் ஆடுவதில் பெயர் போனவர்கள். அவர்களின் இந்த அணுகுமுறையே எதிரணியை கலவரப்படுத்தும். ஆனால் அவர்களை எதிர்கொள்ள சிறந்த வழி அதே ரவுடித்தனத்துடன் அவர்களிடம் நடந்து கொள்வது தான் என கங்குலி முடிவு செய்தார்
2001இல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஆட வந்த போது தொடர்ந்து நான்கு முறைகள் கங்குலி டாஸுக்கு வேண்டுமென்றே தாமதமாக சென்றார். அப்போதைய ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாஹை காத்திருக்க வைத்து விட்டு மிக பொறுமையாக திமிராக வந்தார் அவர். தாமதத்திற்கு மன்னிப்பு ஏதும் கேட்காமல் நாணயத்தை சுண்டி விட்டு ஆட்டத்தை கவனிக்க போய் விட்டார். ஸ்டீவ் வாஹின் முகத்தில் ஈயாடவில்லை. தன்னை விட அடாவடியான ஒரு ஆளுடன் மோதப் போகிறோம் என அவர் அன்று உணர்ந்தார். அன்றைய காலத்தில் ஸ்டீவ் வாஹின் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை துணிச்சலாய் எதிர்கொண்டு மண்ணை கவ்வ வைத்த முதல் அணி இந்திய அணி தான். எதிரணி அளவுக்கு நமக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, தன்னம்பிக்கையும் போராட்ட குணமும் துணிச்சலும் வேண்டும், சண்டையில் எப்போதும் முதல் அடி கொடுப்பவர் நாமாக இருக்க வேண்டும் என தன் அணிக்கு கற்றுக் கொடுத்தார். இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றினார்.

வரலாற்றை மாற்றிய ஒரு கோடை விடுமுறை

சவுரவ் கங்குலி 1972இல் கொல்கொத்தாவில் ஒரு பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். அவருடைய அண்ணன் ஸ்னேஹாஷிஷ் கங்குலி சிறு வயது முதலே கிரிக்கெட் ஆடி மேற்கு வங்காள கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். ஆனால் சவுரவோ இளமையில் கால் பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டினார். அண்ணனின் வழிகாட்டுதலும் தூண்டுதலும் அவருக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் ஏற்பட காரணமாகியது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக அவர் ஒரு பயிற்சி முகாமில் பங்கு பெற்றார். பிறகு தன் பள்ளி அணிக்காக ஆடி 15 வயதுக்கு கீழோருக்கான ஆட்டத்தொடரில் சதம் அடித்தார். பள்ளி அணியின் தலைவரானார். ஆனால் அப்போதும் கங்குலி கிரிக்கெட்டை முதன்மையாக கருதவில்லை. அவ்வருடம் கோடை விடுமுறையின் போது மேற்கு வங்க அணியில் ஒரு பேட்ஸ்மேன் கடைசி நேரத்தில் காயம் காரணமாய் ஆட முடியாது போக அவர் இடத்தில் தற்காலிகமாய் கங்குலி ஆடினார். ஆனால் யாரும் எதிர்பாராத முறையில் அவர் அந்த ஆட்டத்தில் சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து ரஞ்சி தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது கங்குலியின் பெயரும் இருந்தது. கங்குலி இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவிப்பதற்காக மலர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் எங்கும் சோகக் களை. எல்லாரும் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. நீண்ட காலம் அணியில் ஆடி வந்த அவரது அண்ணனை நீக்கி விட்டு தான் ஆறு மாதமாய் கிரிக்கெட் ஆடத் தொடங்கின தம்பி சவுரவ் கங்குலியை அணியில் சேர்த்திருந்தனர். கங்குலிக்கு அழவா சிரிக்கவா என தெரியவில்லை.
ஆனால் அண்ணனை விட சவுரவுக்கு இயல்பான பேட்டிங் திறமை அபாரமாக இருந்தது. அவர் விரைவில் ரஞ்சி கோப்பையில் சோபித்தார். 1992இல் இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால் அவரது அடாவடி சுபாவம் சீனியர்களை எரிச்சலூட்டியதால் அணியில் இருந்து விரைவில் நீக்கப்பட்டார்.

ஆணவமும் கம்பீரமும்

15 வயதில் கங்குலி தன் பள்ளி அணியின் தலைவர் ஆன போது அவரதுஆணவமான நடத்தைபிற வீரர்களை கடுப்பேற்றியது. இடைவேளையின் போது பிற வீரர்களுக்கு தண்ணீரும் தேவையான பொருட்களும் எடுத்து அளிக்க மறுத்தார். பின்னர் 1992இல் இந்திய அணியில் தேர்வான போதும் இதே காரணத்துக்காய் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் கடுமையாய் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய பிறகே அவர் மீண்டும் இந்திய அணிக்காய் தேர்வானார். சவுரவ் பின்னர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் ஆடப் போன போது தன் சகவீரர்களை வேலைக்காரர்களாய் நடத்துகிறார் என புகார் எழுந்தது. இங்கிலாந்தில் நேவெஸ்ட் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற போது அவர் லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்றபடி சட்டையை கழற்றி கொண்டாடினது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால் இந்திய அணியில் இடம் பெற்று பெரும் சாதனைகள் நிகழ்த்திய பின் இதே ஆணவம் கம்பீரமாய் மாறியது. மக்கள் அவரை அதற்காய் மதித்தனர், ரசித்தனர், கொண்டாடினர்.

Offside ஆட்டத்தின் கடவுள்

கங்குலி Offsideஇல் ஆடுவது ஒரு அழகான நடன அசைவு போலிருக்கும். Off ஸ்டம்பில் விழுகிற ஒரு பந்தை கூட அவர் பவுண்டரி அடிக்காமல் விடுவதில்லை. அதே போல இறங்கி வந்து இடதுகை சுழலர்களை சிக்ஸர் அடிப்பதிலும் சமர்த்தர். தொண்ணூறுகளில் இடது கை சுழலர்கள் வீச வந்தாலே இதோ கங்குலி சிக்ஸ் அடிக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு கிளம்பும். ஒருமுறை கூட கங்குலி ஏமாற்றியதில்லை. 1996இல் லார்ட்ஸில் தன் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சதம் அடித்த பின் சச்சினின் தலைமையின் கீழ் கங்குலி மிகச்சிறந்த பேட்ஸ்மெனாக வளர்ந்தார். ஒருநாள் ஆட்டங்களில் சச்சினுடனான அவரது துவக்க பார்ட்னர்ஷிப் இந்தியாவை மிக வலிமையான பேட்டிங் அணியாக்கியது. இருவரும் சேர்ந்து 6362 ரன்கள், 20 சதங்கள், 22 சதங்கள் அடித்தனர். இது ஒரு உலக சாதனை.

ஓடிப் போலாமா?

கங்குலி டானா ராயை சிறுவயதில் இருந்தே காதலித்தார். ஆனால் அவர் கங்குலியின் குடும்பத்தின் ஜென்ப பகைவரின் மகள். கங்குலி இந்திய அணியில் சிறப்பாக ஆடி நட்சத்திரமாக இருந்த காலம் அது. அவர் குடும்ப பகையும் எதிர்விளைவுகள் பற்றியும் சற்றும் தயங்காமல் டானாவுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இரு குடும்பங்களும் சமரசம் பண்ணிக் கொண்டு திருமணத்தை ஏற்றுக் கொண்டன.

இளவரசர் மணிசூடினார்

2000இல் அசருதீன், ஜடேஜா, மோங்கியாவுக்கு எதிராய் சூதாட்ட குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சற்று முன்பு சச்சின் அணித்தலைமையை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் அது. அனைவரும் அணி மீது நம்பிக்கை இழந்த போது கங்குலி அணித்தலைவரானார். யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், சஹீர்கான், முகமது கேயிப், சேவாக் போன்று புது திறமைகளை அடையாளம் கண்டு வாய்ப்பளித்து புது அணியை உருவாக்கினார். போர்க்குணமிக்க அணியை முன்னின்று தலைமை தாங்கினார். 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி அபாரமாய் ஆடி இறுதிப் போட்டி வரை சென்றது. 2000இல் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடித்ததும் கங்குலியின் மிக முக்கியமான சாதனை.
2005இல் கங்குலியின் ஆட்டநிலை சரிந்தது. பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடனான மோதல் காரணமாய் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் கங்குலி விரைவில் மீண்டு வந்து இரண்டு வருடங்கள் ரன்களை குவித்தார். 2007இல் பாகிஸ்தானுடனான தொடரில் ஓய்வு பெறும் முன் தனக்கான ஸ்டைலில் அவர் இரட்டை சதம் அடித்து ஆர்ப்பாட்டமாகவே விடைபெற்றார்

கங்குலி தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார்.

கூடுதல் தகவல்கள்:

கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்களும் 16 சதங்களும் அடித்தார்.
ஒருநாள் ஆட்டங்களில் 11,363 ரன்களும் 22 சதங்களும் அடித்தார்.
ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2004இல் பத்மபூஷன் விருதை பெற்றார்.
1999 உலகக்கோப்பையில் திராவிடுடன் சேர்த்து அவர் அடித்த 318 ரன்கள் இன்னும் முறியடிகப்படாத ஒரு உலகக்கோப்பை சாதனை .
Wisden Cricketer’s Almanack ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் ஆறாவது சிறந்த பேட்ஸ்மேன் என கங்குலியை கௌரவித்துள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் உலகில் 10,000 ரன்களை கடந்த மூன்றாவது பேட்ஸ்மேன் கங்குலி.
வெளிநாடுகளில் டெஸ்டு போட்டிகளில் 11 முறை இந்திய அணியை வெற்றியடைய வைத்த ஒரே தலைவர்தாதாதான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...