Skip to main content

ஹைடெக்கர் குறிப்புகள் (2)



ஹைடெக்கரின் வாழ்க்கை:


  • 1889இல் மெஸ்கிரிச் எனும் அமைதியான, சம்பிரதாயமான, மதரீதியான நம்பிக்கைகளை வலுவாகக் கொண்ட ஒரு சிறுநகரத்தில் ஹைடெக்கர் பிறந்தார். இந்த ஊர் அவரது பிற்காலத்தைய தத்துவத்தில் ஒரு தாக்கம் செலுத்தியது.
  • 1909இல் அவர் இரு வாரங்கள் ஏசு அவையினரின் (Jesuit) மடத்தில் சேர்ந்து விட்டு விலகினார்.
  • அடுத்து ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்க சேர்ந்தார். 1911இல் இறையியலை விடுத்து தத்துவத்தில் சேர்ந்தார்.
  • 1915இல் ப்ரீபெர்கில் பேராசிரியர் ஆனார்.
  • 1917இல் மணம் புரிந்து இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவர் தனது மாணவியான ஹானா ஆரிண்டுடன் (பிற்காலத்தில் The Origins of Totalitarianism, The Human Condition போன்ற முக்கிய தத்துவ நூல்களை எழுதியவர்.) காதல் உறவில் இருந்தாலும் இதனால் அவரது திருமண உறவு முறியவில்லை. இறுதி வரை நீடித்தது.
  • ஹைடெக்கரை அவர் எழுதத் துவங்கியது முதலான காலத்தில் சில தத்துவவாதிகள் தீவிரமாக பாதித்தனர்:
  • முதலில் அரிஸ்டாட்டில். அவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இருப்பு உண்டா என முதன்முதலில் வினவியவர் - ஒரு கல்லுக்கு, ஒரு ஆப்பிளுக்கு, ஒரு மரத்துக்கு. இங்கிருந்து அவர் ஒவ்வொன்றுக்கும் ஒரு சாரம் உண்டா எனக் கேட்டார். This is a book என்றால் எது அதில் உள்ள “is”, அதன் isness தீர்மானிக்கிறது எனக் கேட்டார். ஒரு பொருள் அதுவாக இருப்பதற்குக் காரணமான இயல்புகள் என்னவெனக் கேட்டார் (being qua being). இதை பொதுமைப்படுத்த முயன்றார். அரிஸ்டாட்டில் மெய்யியல் குறித்து எழுதியவையே ஹைடெக்கரை phenomenology, ontology நோக்கி, மானுட இருப்பு நோக்கி ஈர்த்தது. ஹைடெக்கர் பிற்காலத்தில் அரிஸ்டாட்டிலை மறுத்து கடந்து சென்றாலும் துவக்கப் புள்ளி இதுவே.
  • அடுத்து இம்மானுவல் காண்ட், சோரன் கீர்க்கெகார்ட், நீட்சே போன்ற தத்துவஞானிகள் இவரைப் பெரிதும் பாதித்தனர்.
  • அடுத்த படியாய் ஆனால் மிக முக்கியமாய் phenomenologyயின் தந்தையாக அறியப்படுகிற ஹசர்ல். ஹசர்ல் 1915இல் ப்ரீபெர்க் பல்கலையில் பேராசிரியானார். 1919இல் ஹைடெக்கர் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார்.  
  • 1923 முதல் 1928 வரை மார்பெர்க் பல்கலையில் தத்துவப் பேராசிரியாக மிகவும் பெயர் பெற்று விளங்கிய ஹைடெக்கர் ஹசர்லின் ஓய்வுக்குப் பின்னர் ப்ரீபெர்க் பல்கலைக்குத் திரும்பி அங்கு ஹசர்லி இடத்தை எடுத்துக் கொண்டார்.
  • அங்குதான் அவர் தனது மிகச்சிறந்த தத்துவப் படைப்பான Being and Time நூலை எழுதினார், இதை தனது குருநாதரான ஹசர்லுக்கு அர்ப்பணித்தார்.
  • Being and Time புத்தகம் ஹைடெக்கரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. இது சார்த்தரின் இருத்தலியம், தெரிதாவின் கட்டுடைப்பு கோட்பாடு போன்ற புதிய தத்துவத் திறப்புகளுக்கு வழிகோலியது.
  • 1933இல் ஹைடெக்கர் ஹிட்லரின் நாசி கட்சியில் இணைந்தார். அடுத்து அவர் ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தின் தலைவராக (rector) நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் அவர் ஹிட்லரின் கொள்கைகளை பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மாற்றுவதன் வழி மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார் எனக் கூறப்படுகிறது.
  • 1933இல் ஹைடெக்கர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பிற்காலத்தில் அவர் மிக மோசமான இழிப்பெயரை இதனால் பெற்றார். இது அவர் எடுத்த மிகத் தவறான முடிவு எனலாம் - நாசிசம் நவீனத் தொழில்நுட்பத்தின் சீரழிவுகளில் இருந்து ஜெர்மனியைக் காப்பாற்றும், மக்கள் மீண்டும் ஒரு தேசியவாத எழுச்சியில் ஒரு கூட்டு சமூகமாக உணர்வது அவர்களை மறுமலர்ச்சி அடைய வைக்கும் என அவர் நம்பினார். அதாவது தனது தத்துவ நம்பிக்கைகளை நாசிக் கட்சி மூலம் செயல்வடிவுக்கு, நிலுவைக்குக் கொண்டு வரலாம் என அவர் நம்பினார். ஆனால் ஹிட்லரோ யூத வெறுப்பு, அதன் மூலம் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவது, சர்வாதிகாரம் மூலம் ஆட்சியில் நீடிப்பது என மற்றொரு பாதையில் சென்றார். தத்துவமும் நடப்பு அரசியலும் வேறு வேறு எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஐயப்படாமல் இருந்ததே ஹைடெக்கரின் முக்கிய தவறு. அதே நேரம் அவர் யூத வெறுப்பை, இனவாதத்தை ஏற்கவில்லை. ஆனால் நாசிக் கட்சி உறுப்பினர் எனும் பெயர் அவரது தத்துவத்திற்கு இனவாத சாயலைக் கொண்டு வந்தது ஒரு துன்பியல் நிகழ்வாகும்.
  • 1934 முதல் அவர் நாசிக் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார், ஆனால் கட்சியில் இருந்து விலக வில்லை.
  • உலகப்போர் முடிந்து ஹிட்லர் கொல்லப்பட்ட பின்னர் நாசி களையெடுப்புக் குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு ஹைடெக்கரை ஆசிரியப் பணியில் இருந்து தடை செய்தது.
  • 1949இல் அவர் மீதான தடை விலக்கப்பட்டது.
  • 1976இல் அவர் காலமானார்; சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...