Skip to main content

பாஜகவின் நரைமயிர்கள் அம்பலமாகின்றன



கடந்த சில மாதங்களில் மட்டுமே பாஜக அரசு மிகத்தவறான நிர்வாக, கொள்கை முடிவுகளை எடுத்தது - கொரோனா ஊரடங்கு, புலம்பெயர் தொழிலாளர்களை நெடுந்தொலைவு நடந்து சாகடித்தது, அதன் பின் எல்லையின் சீனவீரர்களின் உருட்டுக்கட்டை தாக்குதலுக்கு நிராயுதபாணியாக இந்திய வீரர்களை நிற்க வைத்து பலிகொடுத்தது - இந்தக் குழப்படிகளை, அபத்தான, தேசநலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதில் அண்மையில் மோடியின் கால்வன் எல்லை திகிடுதித்தத்தை ராகுல் காந்தி கடுமையாய் பகடி செய்து அவர் நரேந்தர் கொடியல்ல Surender Modi (சரண்டர் என்பதன் கேலிச்சொல்) என ட்வீட் செய்தது பெரிதும் மக்கள் கவனத்தைப் பெற்றது. 20,000 விருப்பக்குறிகளைப் பெற்றது, 8000 பேர் இதை மறு-டிவீட் செய்தனர். அத்துடன் இந்த மோடி அரசு தன் நிதானத்தை இழந்தது; பாஜக கறுப்புச்சாயம் பூசி மறைத்து வந்த நரைமயிர்கள் புலனாகி விட்டன; பாஜக பல்லிளித்து தன் வயோதிகத்தைக் காட்டுகிறது. அதன் விளைவுதான் காங்கிரசுக்கு எதிரான் அதன் பல அபத்தமான விமர்சனங்கள். இப்போது பதினாலு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் அரசின் ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றதாக, அதைஊழல்’, ‘தேசவிரோதம்என்றெல்லாம் கூறி பாஜக இப்போது சாடுகிறது. பதினாலு வருடங்கள்! இந்த அறக்கட்டளைக்கான நன்கொடை விசயத்தில் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை, அது தேசத்துரோகம் என்று அறுதியாக சொல்லவும் முடியாது, ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த சீனப்போரும் நடக்கவில்லை. இப்போதுள்ளதைப் போல அரசால் ஆயுதம் பறிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் சீனப்படையால் அடித்துக் கொல்லப்படவில்லை. பாஜக தன் நிர்வாணத்தை மறைக்க என்னவெல்லாமோ சர்க்கஸ் வித்தைகள் காட்டுகிறது. அதில் ஒன்றே இது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


எனக்கு இதில் வினோதமாய் பட்டது ஏன் ஒவ்வொரு முறை தன் நிர்வாகக் குளறுடிகள், சீர்கேடுகள் பற்றி பேச்சு வரும் போதும் மோடி அரசு காலத்துக்குப் பின்னால் சென்று காங்கிரஸை குற்றவாளியாக மீண்டும் மீண்டும் நாமம் சாத்துகிறது என்பது. இப்போது நாட்டை ஆள்வது பாஜகவா காங்கிரசா? எப்போதெல்லாம் கொண்டாட்டமோ அப்போதெல்லாம் தானே ஆள்வதாய் மோடி மாரைத் தட்டிக்கொள்வார்; எப்போதெல்லாம் அவரது பெருந்தவறுகள் அம்பலப்படுகிறதோ, பொருளாதாரம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸே நாட்டைஆள்வதாய்அவர் கூறுவார். இந்த காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் கோமாளிப் பேச்சு பாஜகவுக்கு ஒன்றும் புதிதல்ல.


இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது:


1) மோடிக்கே உண்மையில் தன்னால் தேசத்தை ஒரு நிர்வாகியாக சிறப்பாக ஆள முடியும் நம்பிக்கை இல்லை. தமது வலிமை கலாச்சார அரசியலே என மோடி நம்புகிறார்; மோடி ஒரு பண்பாட்டுத் தலைவர்; ஒவ்வொரு கிராம எல்லையிலும் இருக்கும் எல்லைச்சாமியைப் போல ஒரு குறியீடு; நன்றாக ஆடை அணிந்து பிரமாதமாய் மேடையில் பேசுகிற ஒரு சோளக்கொல்லை பொம்மை; அவர் செய்வதெல்லாம் - இந்துப் பெருமைகளை கட்டமைப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது, இமயத்தில் தவமிருப்பது, மதக்குறியீடுகளை பெருமளவில் பயன்படுத்துவது, கார்ப்பரேட் சாமியார்களுடன் வெளிப்படையாக கைகோர்த்து விழா எடுப்பது, பாகிஸ்தானை தொடர்ந்து விரோதியாக கட்டமைத்து போர்ச்சூழலை உருவாக்கி ஏவுகணை அனுப்பி பனைமரங்களை வீழ்த்தி தேசப்பற்றை வளர்ப்பது. இந்த வேலைகளில் மோடி கில்லாடி. அவருக்கு நடைமுறை ஆட்சிப் பணிகளில் ஆர்வமோ திறனோ இல்லை. அதனால் அவர் மனத்தில் நடைமுறை நிர்வாகத்தை இன்னமும் காங்கிரசே செய்து வருகிறது எனும் எண்ணம் ஒரு உளவியல் உத்தியாய் வலுப்பெற்றுள்ளது. இது ஒரு அந்நியன் மனநிலை - அம்பியாக இருக்கும் போது அந்நியன் மீது பழிசுமத்துவது, அந்நியனாகும் போது அம்பி ஒரு சொங்கி என கிண்டலடிப்பது.


2) பண்டைய பாரத தேசத்தின் மகிமைகளைப் பற்றி வாய்கிழியப் பேசி அந்த காவியக் காலத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்லப் போவதாய் சங்கிகள் வீம்பளப்பதை நாம் மீட்புவாதம் என்கிறோம். இந்த மீட்புவாதத்தைக் காட்டி மக்களை மயக்கி ஒன்று திரட்டுவதே இந்துத்துவா. இதே மீட்புவாதம் பாஜகவின் கட்சிக்கொள்கை மட்டுமல்ல நிர்வாகக் கோளாறுகளை நியாயப்படுத்துவதற்கான உத்தியும் தான் என்பதைஎல்லாம் காங்கிரஸ் அரசின் செய்த ஊழல்களால், தேசவிரோத அரசியலினால் தான்என அடிக்கடி தன் மீது கண்டனம் வரும் போதெல்லாம் சீறுகிற பாஜகவின் பிரச்சாரத்தில் நாம் காண்கிறோம். உன்னதமான பாரத தேசத்தின் கடந்த காலத்துக்குப் பதிலாகமோசமான காங்கிரசின் கடந்த காலம்பற்றின கதையாடலை வைத்தால் அரசியல் மீட்புவாதம் தோன்றுகிறது. இரண்டுமே தற்கால அரசியலில் காலாவதியாகி விட்ட சங்கதிகள், இல்லாத கடந்த காலத்தையும் சாத்தியமில்லாத எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு கற்பனை முடிச்சே இந்த மீட்புவாதம்.


காங்கிரஸ் அரசின் ஊழல்கள் ஏற்கனவே பேசப்பட்டவை; மக்கள் அதற்கு இருமுறை அந்தக் கட்சியை தண்டித்து ஆகிற்று. பாஜக வேண்டுமென்றால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர்களை தண்டிக்கலாம். ஆனால் பாஜக அரசு அதைச் செய்யாது. பாஜகவுக்கு இந்த காங்கிரஸ் ஊழல் கதையாடலுடன் ஒரு தொப்புள்கொடி உறவு உள்ளது - அது துண்டிக்கப்பட்டால் அது சத்தின்றி சுவாசமின்றி செத்து விடும். தான் ஆட்சியே செய்யவில்லை என்பதை மறைக்க அதற்கு காங்கிரசின் கடந்த காலம் குறித்த விமர்சங்கள் அவசியம்

பேச்சு! பேச்சு! பேச்சு! இதை விட்டால் ஜிக்கு ஒன்றுமே தெரியாது. இந்த நாக்கு மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக் கொண்டு போய் விடும்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...