Skip to main content

பாஜகவின் நரைமயிர்கள் அம்பலமாகின்றன



கடந்த சில மாதங்களில் மட்டுமே பாஜக அரசு மிகத்தவறான நிர்வாக, கொள்கை முடிவுகளை எடுத்தது - கொரோனா ஊரடங்கு, புலம்பெயர் தொழிலாளர்களை நெடுந்தொலைவு நடந்து சாகடித்தது, அதன் பின் எல்லையின் சீனவீரர்களின் உருட்டுக்கட்டை தாக்குதலுக்கு நிராயுதபாணியாக இந்திய வீரர்களை நிற்க வைத்து பலிகொடுத்தது - இந்தக் குழப்படிகளை, அபத்தான, தேசநலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதில் அண்மையில் மோடியின் கால்வன் எல்லை திகிடுதித்தத்தை ராகுல் காந்தி கடுமையாய் பகடி செய்து அவர் நரேந்தர் கொடியல்ல Surender Modi (சரண்டர் என்பதன் கேலிச்சொல்) என ட்வீட் செய்தது பெரிதும் மக்கள் கவனத்தைப் பெற்றது. 20,000 விருப்பக்குறிகளைப் பெற்றது, 8000 பேர் இதை மறு-டிவீட் செய்தனர். அத்துடன் இந்த மோடி அரசு தன் நிதானத்தை இழந்தது; பாஜக கறுப்புச்சாயம் பூசி மறைத்து வந்த நரைமயிர்கள் புலனாகி விட்டன; பாஜக பல்லிளித்து தன் வயோதிகத்தைக் காட்டுகிறது. அதன் விளைவுதான் காங்கிரசுக்கு எதிரான் அதன் பல அபத்தமான விமர்சனங்கள். இப்போது பதினாலு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் அரசின் ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றதாக, அதைஊழல்’, ‘தேசவிரோதம்என்றெல்லாம் கூறி பாஜக இப்போது சாடுகிறது. பதினாலு வருடங்கள்! இந்த அறக்கட்டளைக்கான நன்கொடை விசயத்தில் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை, அது தேசத்துரோகம் என்று அறுதியாக சொல்லவும் முடியாது, ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த சீனப்போரும் நடக்கவில்லை. இப்போதுள்ளதைப் போல அரசால் ஆயுதம் பறிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் சீனப்படையால் அடித்துக் கொல்லப்படவில்லை. பாஜக தன் நிர்வாணத்தை மறைக்க என்னவெல்லாமோ சர்க்கஸ் வித்தைகள் காட்டுகிறது. அதில் ஒன்றே இது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


எனக்கு இதில் வினோதமாய் பட்டது ஏன் ஒவ்வொரு முறை தன் நிர்வாகக் குளறுடிகள், சீர்கேடுகள் பற்றி பேச்சு வரும் போதும் மோடி அரசு காலத்துக்குப் பின்னால் சென்று காங்கிரஸை குற்றவாளியாக மீண்டும் மீண்டும் நாமம் சாத்துகிறது என்பது. இப்போது நாட்டை ஆள்வது பாஜகவா காங்கிரசா? எப்போதெல்லாம் கொண்டாட்டமோ அப்போதெல்லாம் தானே ஆள்வதாய் மோடி மாரைத் தட்டிக்கொள்வார்; எப்போதெல்லாம் அவரது பெருந்தவறுகள் அம்பலப்படுகிறதோ, பொருளாதாரம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸே நாட்டைஆள்வதாய்அவர் கூறுவார். இந்த காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் கோமாளிப் பேச்சு பாஜகவுக்கு ஒன்றும் புதிதல்ல.


இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது:


1) மோடிக்கே உண்மையில் தன்னால் தேசத்தை ஒரு நிர்வாகியாக சிறப்பாக ஆள முடியும் நம்பிக்கை இல்லை. தமது வலிமை கலாச்சார அரசியலே என மோடி நம்புகிறார்; மோடி ஒரு பண்பாட்டுத் தலைவர்; ஒவ்வொரு கிராம எல்லையிலும் இருக்கும் எல்லைச்சாமியைப் போல ஒரு குறியீடு; நன்றாக ஆடை அணிந்து பிரமாதமாய் மேடையில் பேசுகிற ஒரு சோளக்கொல்லை பொம்மை; அவர் செய்வதெல்லாம் - இந்துப் பெருமைகளை கட்டமைப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது, இமயத்தில் தவமிருப்பது, மதக்குறியீடுகளை பெருமளவில் பயன்படுத்துவது, கார்ப்பரேட் சாமியார்களுடன் வெளிப்படையாக கைகோர்த்து விழா எடுப்பது, பாகிஸ்தானை தொடர்ந்து விரோதியாக கட்டமைத்து போர்ச்சூழலை உருவாக்கி ஏவுகணை அனுப்பி பனைமரங்களை வீழ்த்தி தேசப்பற்றை வளர்ப்பது. இந்த வேலைகளில் மோடி கில்லாடி. அவருக்கு நடைமுறை ஆட்சிப் பணிகளில் ஆர்வமோ திறனோ இல்லை. அதனால் அவர் மனத்தில் நடைமுறை நிர்வாகத்தை இன்னமும் காங்கிரசே செய்து வருகிறது எனும் எண்ணம் ஒரு உளவியல் உத்தியாய் வலுப்பெற்றுள்ளது. இது ஒரு அந்நியன் மனநிலை - அம்பியாக இருக்கும் போது அந்நியன் மீது பழிசுமத்துவது, அந்நியனாகும் போது அம்பி ஒரு சொங்கி என கிண்டலடிப்பது.


2) பண்டைய பாரத தேசத்தின் மகிமைகளைப் பற்றி வாய்கிழியப் பேசி அந்த காவியக் காலத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்லப் போவதாய் சங்கிகள் வீம்பளப்பதை நாம் மீட்புவாதம் என்கிறோம். இந்த மீட்புவாதத்தைக் காட்டி மக்களை மயக்கி ஒன்று திரட்டுவதே இந்துத்துவா. இதே மீட்புவாதம் பாஜகவின் கட்சிக்கொள்கை மட்டுமல்ல நிர்வாகக் கோளாறுகளை நியாயப்படுத்துவதற்கான உத்தியும் தான் என்பதைஎல்லாம் காங்கிரஸ் அரசின் செய்த ஊழல்களால், தேசவிரோத அரசியலினால் தான்என அடிக்கடி தன் மீது கண்டனம் வரும் போதெல்லாம் சீறுகிற பாஜகவின் பிரச்சாரத்தில் நாம் காண்கிறோம். உன்னதமான பாரத தேசத்தின் கடந்த காலத்துக்குப் பதிலாகமோசமான காங்கிரசின் கடந்த காலம்பற்றின கதையாடலை வைத்தால் அரசியல் மீட்புவாதம் தோன்றுகிறது. இரண்டுமே தற்கால அரசியலில் காலாவதியாகி விட்ட சங்கதிகள், இல்லாத கடந்த காலத்தையும் சாத்தியமில்லாத எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு கற்பனை முடிச்சே இந்த மீட்புவாதம்.


காங்கிரஸ் அரசின் ஊழல்கள் ஏற்கனவே பேசப்பட்டவை; மக்கள் அதற்கு இருமுறை அந்தக் கட்சியை தண்டித்து ஆகிற்று. பாஜக வேண்டுமென்றால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர்களை தண்டிக்கலாம். ஆனால் பாஜக அரசு அதைச் செய்யாது. பாஜகவுக்கு இந்த காங்கிரஸ் ஊழல் கதையாடலுடன் ஒரு தொப்புள்கொடி உறவு உள்ளது - அது துண்டிக்கப்பட்டால் அது சத்தின்றி சுவாசமின்றி செத்து விடும். தான் ஆட்சியே செய்யவில்லை என்பதை மறைக்க அதற்கு காங்கிரசின் கடந்த காலம் குறித்த விமர்சங்கள் அவசியம்

பேச்சு! பேச்சு! பேச்சு! இதை விட்டால் ஜிக்கு ஒன்றுமே தெரியாது. இந்த நாக்கு மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக் கொண்டு போய் விடும்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...