சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தி வந்ததில் இருந்தே நிறைய சந்தேகங்கள் கிளம்பின:
துணியை மாட்டி தற்கொலை என்றால் ஏன் கயிற்றால் இறுக்கப்பட்டது போன்ற கரிய தடம் அவரது கழுத்தில் இருந்தது?
அதன் கீழ் மற்றொரு கயிற்று தடம் இரண்டாவதாக எப்படி வந்தது?
ஏன் கண்கள் பிதுங்கி நாவு வெளிவர வில்லை?
யார் அவரது உடலை கீழே இறக்கியது?
ஏன் கதவை உடைத்து அவரைக் காப்பாற்ற முயலவில்லை?
இந்த கேள்விகளை விட அப்போது என் கவனத்தைக் கவர்ந்தது கிட்டத்தட்ட அதே சமயத்தில் நடந்த சுஷாந்தின் மேலாளரான தியாவின் தற்கொலை. இந்த இரு மரணங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என யோசித்தேன். அது உண்மை என இப்போது தெரிய வருகிறது - தியா சல்மான்கானின் ஆத்ம நண்பரான சூரஜ் பஞ்சோலியுடன் உறவில் இருந்திருக்கிறார். பஞ்சோலியின் குழந்தையை தன் வயிற்றில் சுமந்திருக்கிறார். இந்த கர்ப்ப செய்தி வெளிவருவதை பஞ்சோலி விரும்பவில்லை. சுஷாந்த் இவ்விசயத்தில் தியாவுக்கு முழு ஆதரவும் தெரிவித்ததுடன் அவருக்காக போராடுவதாகக் கூறியிருக்கிறார். அவர் சுஷாந்திடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது பஞ்சோலி தியாவின் வீட்டுக்கு வருகிறார். தியா போனை வைக்கிறார். அடுத்து தியா தன் வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததாய் செய்தி வருகிறது. இது கொலையா தற்கொலையா? (2013இல் இந்த பஞ்சோலி ஜியா கான் எனும் நடிகையுடன் காதல் உறவில் இருந்து அவரது தற்கொலையைத் தூண்டினார் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது சல்மான் கான் தான் அவரை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றினார் எனச் சொல்லப்படுகிறது.) கொலை என்றால் சுஷாந்த் இந்த உண்மையை அம்பலப்படுத்துவார் என பஞ்சோலி / சல்மான் கானின் கோஷ்டி பயந்திருக்கலாம், சாட்சியத்தை அழிப்பதற்காக அவரையும் அதே பாணியில் கொன்று தற்கொலை என கட்டமைத்திருக்கலாம்.
தியாவின் மரணம் ஒரு கொலை என்றால் அதே நபர்கள் தாம் சுஷாந்தையும் கொன்றிருக்க வேண்டும். சல்மான் கான் அள்ளி வீசும் கோடிக்கணக்கான பணம், அவரது மாபியா தொடர்புகள் எல்லாவற்றையும் மீறி பஞ்சோலியைக் கைது செய்ய போலீசுக்குத் துணிச்சல் உண்டா?
Comments