Skip to main content

நிதியமைச்சரின் கூடுதல் வரித்திட்டம்



சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 வது கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி பங்கை தர முடியாது எனக் கூறி, பதிலுக்கு ரிசர்வ் வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்குமாறு சொன்னதைக் கேள்விப்பட்டோம். மாநிலங்களுக்கு உரிமையுள்ள பணத்தை தர மறுப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என கேரள மற்றும் பஞ்சாப் நிதியமைச்சர்கள் கடுமையாக இம்முடிவை விமர்சித்துள்ளனர். மிச்ச பேர் மிக்சர் சாப்பிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இது பற்றி கருத்து தெரிவித்த பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி சொன்ன ஒரு விசயம் தான் ஆபத்தானது; விவாதிக்க வேண்டியது - ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசு வட்டிக்கு கடன் வாங்கினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்கிறார். இது எப்படி? அதுதான் வட்டித்தொகை இருக்கிறதே?


மாநில அரசுகள் மக்களிடம் வரி மீதான வரி எனப்படும் ஒரு கூடுதல் வரியை வசூலிக்காலாம் என நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது, இந்த ஜி.எஸ்.டி என்பதே கூடுதல் மறைமுக வரியாக பொருட்களின் விலையை அதிகப்படுத்தி விட்டது. இந்த வரியும் மாநில அரசுக்கு செல்லாமல் மத்திய அரசுக்குப் போய் விடுகிறது. ஏன் அப்படிப் போக வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே மோடி அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை முழுங்கும் திட்டம் இருந்திருக்கிறது; ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வாங்கி வைத்து பிறகு தருகிறோம் என்பதன் பொருள் வரிப்பங்கை எங்கள் முடிவின் படி தருவோம் என்பதே.


 முதலில் பங்கை குறைத்து தமது விருப்பப்படி மாநிலங்களுக்கு பணத்தை அளித்தார்கள். பிறகு இந்த கொரோனாவை காரணம் காட்டி ஒரேயடியாக நிறுத்தி விட்டார்கள். PC Cares நிதியில் இருந்து பணத்தைத் தர மறுக்கிறார்கள். தமது தேர்தலில் பயன்படக் கூடிய விதத்தில் இந்த நிதியை, வரிப்பணத்தை பிரதமரின் நேரடியான நிதியளிப்பு எனும் பொருளில் திட்டங்கள் வகுத்து (குஜராத், .பி. பீகார் போன்ற) சில மாநில மக்களுக்கு மட்டும் செலவிடுவதே பாஜக அரசின் திட்டமாகத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தமட்டில் நடுவண் அரசு என்பதற்கும் பாஜக எனும் கட்சிக்கும் வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கும் பாஜகவின் தேர்தலில் நிதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


 மற்றொரு பக்கம், மத்திய அரசின் வருவாய் குறைந்து விட்டது என்பதும் உண்மையே - நாட்டின் பொருளாதாரம் படுத்தே விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜி.டி.பி 8% இருந்து 3.1% க்கு கீழிறங்கி விட்டது. அதாவது இது கொரோனா லாக்டவுனுக்கு முன்பு. ஆனால் அதன் பின்னர் ஜி.டி.பி 3 சதவீதத்துக்கும் கீழேயே சென்றிருக்க வாய்ப்பதிகம். கடந்த மூன்று பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. நாட்டில் பணம் புழங்கினால் தானே வரியாக அது நடுவண் அரசிடம் போகும். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மோடி அரசு தெளிவான எந்த வளர்ச்சித்திட்டத்தையும் வகுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏதோ மூச்சைப்பிடித்துக் கொண்டு இருந்த தொழில்களையும் நசுக்கி விட்டன. இதைப் பற்றி எந்த கவலையும் இன்றி சுயவிளம்பரம், கலாச்சார பிரச்சாரம் என மோடி ஒரு பக்கமும், தம்மிடம் உள்ள அதிகார, பொருளாதார பலத்தைக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பதிலும் பாஜகவின் உள்கட்டமைப்பை செறிவாக்குவதிலும் தான் அமித் ஷா மறுபக்கமும் அக்கறை செலுத்தி வருகிறார்கள். மிச்ச பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் பிரதமரைப் பாராட்டி பாட்டெழுதுவதிலே நேரத்தை செலவிடுகிறார்கள்


எல்லாராலும் கைவிடப்பட்ட பொருளாதாரம் தெருவில் கிடந்து நாறியது. அதன் நாற்றம் அதிகமாகும் போதெல்லாம் நடுவண் அரசு புதிய வழிகளில் பணத்தை மக்களிடம் பிடுங்க முனைந்தது. அதில் ஒரு வழியாகத்தான் மோடி அரசு மாநிலங்களுக்குப் போக வேண்டிய ஜி.எஸ்.டி பங்கை பிடுங்கிக் கொள்கிறது. வரிப்பங்கை தராமல் இருப்பது சட்டவிரோதம் என்பதால் ஒரேயடியாக முடியாது என்றும் சொல்ல முடியாது. பற்றக்குறையை சரிசெய்ய அவர்கள் இப்போது தரும் பரிந்துரையும் கூடுதல் வரியை மக்கள் மீது விதியுங்கள் என்பதே.


இந்த கூடுதல் (cess) வரி மீதான வரி இருக்கிறதே இதை விதித்து சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசு வட்டியாக நடுவண் அரசுக்கே திரும்ப செலுத்த வேண்டி வரும். அதாவது ஜி.எஸ்.டி வரியை முழுங்கி ஏப்பம் விட்ட நடுவண் அரசு இப்போது கூடுதல் வரியை விதிக்கக் கேட்டு அதையும் பீடாவைப் போல வாயில் போட்டு ருசிக்க முடிவெடுத்துகிறது. இதன் விளைவு பொருளாதாரம் மீண்டும் சரிவடையும் என்பதே.


வரிக்கு மேல் வரியை விதித்து மக்களை வதைப்பது கொடுங்கோன் அரசுகளின் வழக்கமே. மோடி அரசின் மதவெறி, இந்துத்துவ கலாச்சார அரசியல், அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள் ஒரு பக்கம் சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச்செல்கிறது என்றால், இவ்வரசின் பொருளாதார சீர்கேடுகள் நம்மை அடுத்த இருபதாண்டுகளில் ஒரு சொமாலியாவாக மாற்றி விடும் போலத் தெரிகிறது

எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரதமர் மயில்களுக்கு உணவளித்துக் கொஞ்சிக்கொண்டே வீடியோ போடுகிறார்.

மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் பாரத தேசம் பாலைவனமாகும் நாள் தொலைவில் இல்லை!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...