(1)
கடவுள் ஏன் ஒவ்வொரு மதத்திலும் ஒருவாறு இருக்கிறார்? ஏன் ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரின் கடவுளை ஏற்க மறுக்கிறார்கள்? கடவுள் முழுமுதலானவர் எனில், அவரே உலகைப் படைத்தார் எனில் அவரைப் பார்ப்பதில் எப்படி பேதங்கள் தோன்ற முடியும்? முடியாதே.
இதன் பொருள் மனிதனே கடவுளைப் படைத்தான்.
சுருக்கமாக, ஆத்திகர்கள் பலவிதமாக கடவுளைப் பற்றி பேசுகிறார்கள் என்பதே கடவுள் இல்லை என்பதற்கான முதன்மையான சான்று என்பது பெரியாரின் முக்கியமான வாதம்.
கடவுளைப் படைத்தது மனிதனே என பௌத்தமும், குறிப்பாக நாகார்ஜுனரின் மூதமத்யமகாகாரிகை நூலும் சொல்கிறது என்பது சுவாரஸ்யமானது.
உலகின் மிகபெரிய கடவுள் மறுப்பாளர்கள் மதவழிபாட்டாளர்களே.
"ஒரு மதக்காரனே தன் மதத்தைச் சேர்ந்த மற்றொருவனை அடிமைக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் மத நம்பிக்கையென்பது " மக்கள் யாவரும் கடவுளின் பிள்ளைகள்" "எல்லாரும் சமமானவர்கள்" என்று போதிப்பதாகத்தான் சொல்லுகிறான். ஆனால் ஏழை, பணக்காரன், கூலிக்காரன், எஜமான் என்கிற வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதை மாத்திரம் உணரும் போது "எல்லாம் வல்ல கடவுள் சக்தியையும், சமத்துவ மத போதனையையும்" மறந்து விடுகின்றான்."
- பெரியார், இலங்கை உபன்யாசம், பக். 139 குடியரசு 1932 ஜூலை டிசம்பர்.
Comments