Skip to main content

செப் 24 2020 - பெங்களூர் vs பஞ்சாப் ஐபிஎல் ஆட்டம்

செப் 24 2020 - பெங்களூர் vs பஞ்சாப் ஐபிஎல் ஆட்டம்


முதலில் மட்டையாடிய பஞ்சாப் 206 அடித்தது.


உமேஷ், ஸ்டெயின் போன்றோரின் மோசமான பந்து வீச்சு.


சாஹல் நன்றாக வீசினார் - அகர்வாலை பவுல்டாக்கியது அற்புதமான பந்து.


அதன் பிறகு சாஹலுடன் சுந்தர் மற்றும் துபே இணைந்து ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள்.


ஆனால் ராகுலின் 69 பந்து 132 பெங்களூரை நிலைகுலைய வைத்தது - வேகவீச்சாளர்கள் இறுதி ஐந்து ஓவர்களில் இன்னும் மோசமாக வீசி ரன்களை அள்ளிக் கொடுக்க பெங்களூர் குழம்பியது - எந்தளவுக்கு என்றால் கோலி பதற்றத்தில் இரண்டு கேட்சுகளை விட்டார், அதுவும் ராகுலின் கேட்சுகள். 


ராகுலின் 132 ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த சதங்களில் ஒன்று - அதுவும் அவர் தன் இன்னிங்ஸை கட்டமைக்க விதம், எந்த நேரத்தில் எப்படியான ஷாட்டுகளை அடிக்கலாம் எனும் முடிவு பாராட்டத்தக்கது.


அடுத்து மட்டையாட வந்த பெங்களூர் அணி 4 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது:

ஷாமிக்கு இந்த ஆடுதளம் கச்சிதமானது - குறைநீளத்தில் அவர் நேரான சீமில் வீச பந்து சீம் ஆகிறது, அப்படியே எகிறவும் செய்கிறது. இந்த ஆட்டத்தொடரில் ஷாமி மிக அதிகமாய் விக்கெட் எடுக்கப் போகிறார்.


அவரை ஆட ஒரே வழி இறங்கி சென்று அவரது குறை நீளத்தை முழுநீளமாக மாற்றி சற்றே தடுமாற வைப்பதுதான். இப்படியே வீச விட்டால் மட்டையாளர்களால் சமாளிக்க முடியாது.


கோட்டரலின் பந்து வீச்சில் அவரது ஸ்விங், வேகம், கட்டுப்பாடு ஆகியவை என அற்புதமாக அமைந்தது - கோலிக்கு தொடர்ச்சியாக இடதுகை வீச்சாளர்கள் தொல்லை அளிக்கிறார்கள், அவரது விக்கெட்டை சுலபத்தில் வீழ்த்துகிறார்கள். அதே போலத்தான் கால்சுழலர்களும். அதற்கு ஒரு காரணம் கோலியின் விரிந்த கால் அமைவு (open stance). இது அவர் இன்று பந்தை ஹூக் செய்ய முயன்று உள்-கள அமைப்பிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறக் காரணமாகியது.


இதே கால் அமைவு கொண்ட ஏ பி டிவில்லியர்ஸுக்கும் கால்சுழலர்கல் கூக்ளி பந்து வரும் போது இப்பிரச்சனை உள்ளது - அவரது ரெக்கார்ட் கால்சுழலர்களுக்கு எதிராக ஐபிஎல்லில் மோசமானது.


அடுத்து பந்து வீச வந்த கால்சுழலர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் முருகன் அஷ்வின் நன்றாக வீசினார்கள் - அதுவும் பிஷ்னாய் பந்தை அழகாக காற்றில் மிதக்க விட்டு பின்ஜை அது குறைநீளம் என நம்ப வைத்து வெட்ட செய்து பவுல்டாக்கினார். அற்புதமான பந்து.


முருகன் அஷ்வின் ஒரு திட்டத்துடன் டிவில்லியர்ஸுக்கு வீசினார் - ஆப் ஸ்டம்புக்கு வெளியே சற்றே குறைநீளத்தில் வீசின பந்து பவுண்டரி போனாலும் அடுத்த பந்தை அதே திசையில் ஆனால் முழுநீளத்தில் வீசி டிவில்லியர்ஸை எக்ஸ்டிரா கவருக்கு மேலாக அடிக்க வைத்து விக்கெட் எடுத்தார் - நீண்ட காலமாக டிவில்லியர்ஸின் பலவீனம் இது. (இதே கால் அமைவு கொண்ட தோனிக்கும் உள்ள பலவீனம் தான் இது.)


டிவில்லியர்ஸின் விக்கெட்டுடன் பெங்களூரின் முதுகெலும்பு உடைந்தது, நம்பிக்கையை இழந்து போய் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.


அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் என்ன செய்ய வேண்டும்?

கோலி உமேஷ் யாதவை கொஞ்சி சீராட்டாமல் அணியில் இருந்து நீக்க வேண்டும். அவரிடத்தில் வேகவீச்சாளர் சிராஜ் அல்லது இடதுகை சுழலர் ஷபாஸ் அஹ்மதைக் கொண்டு வரலாம்.


 ஸ்டெயினும் சரியான ஆட்டநிலையில் இல்லை என்றாலும் அவர் தன் அனுபவத்தைக் கொண்டு மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். அல்லது அவரையும் நீக்கி விட்டு ஆடம் ஸாம்பாவைக் கொண்டு வரலாம். 


பிலிப்பின் இடத்தில் பார்த்திவ் பட்டேலை கொண்டு வர வேண்டும் - இந்த ஆடுதளங்களில் அவர் மேலாக ஆட வாய்ப்புள்ளது. அல்லது டிவில்லியர்ஸை கீப்பிங் செய்ய வைக்கலாம்.


மட்டையாட்டத்தை மட்டும் வைத்து பெங்களூர் அணியால் இத்தொடரை வெல்ல முடியாது - அதே போல சொதப்பிக் கொண்டிருக்கும் உமேஷை ஊக்கப்படுத்துகிறேன் என அவரை முதல் ஓவர் வீசச் சொல்வது முட்டாள்தனமானது. 8-14 தான் உமேஷ் வீச சரியான நேரம்.


 கோலி இப்படியே காலங்காலமாய் தீவிர எதிர்முனைகளில் இருப்பவர் - ஒன்று ஒருவருக்கு விடாமல் ஆதரவு கொடுப்பார் (விஜய் சங்கர் - உலகக்கோப்பை; அம்பத்தி ராயுடு - அதற்கு முன்பு); ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே வீரரை கை விட்டு மறந்து விடுவார். இதன் விளைவை இன்று அவரது மனநிலை சரிவை, அதன் தாக்கத்தை பந்து வீச்சாளர்களின் இறுதி 8 ஓவர் பந்து வீச்சில் பார்த்தோம். 


பின்ஜ், படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ், பார்த்திவ், துபே, வாஷிங்டன் சுந்தர், ஸாம்பா, சாஹல், செயினி, மற்றும் சிராஜ் என என்னுடைய பெங்களுர் அணித்தேர்வு இருக்கும்.


கோலி நிதானமாக வேண்டும், நிதானமான அணித்தேர்வில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் இம்முறையும் பெங்களூருக்கு சங்கு தான்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...