Skip to main content

நீட் ஒரு அரசியல் பிரச்சனை மட்டுமல்ல!


உதயநிதியின் இந்த அறிக்கை சற்று தாமதமாகவேனும் வந்துள்ளது பாராட்டத்தக்கது. திமுக தொண்டர்களும் இனி இதை கவனிக்க வெர்ண்டும்.

சூர்யா அரசியல் கட்சி சார்பற்றவர் என்பதாலே அவரது நீட் கண்டனம் கணிசமான மக்களை போய் சேர்கிறது, கவனம் பெறுகிறது, அவர் ஒரு பிரபலம் என்பதாலோ நடிகர் என்பதாலோ மட்டுமல்ல. இதுவே சூர்யா ஒரு கட்சியின் உறுப்பினராக அல்லது தலைவராக இருந்து இதைச் சொன்னால் அது தேர்தல் அரசியலாக மட்டுமே பார்க்கப்படும், எதிர்க்கட்சிகள் அவரைக் கண்டிப்பதையும் மக்கள் அப்படியே பார்ப்பார்கள். ஆனால் தேர்தல் அரசியலில் சம்மந்தப்படாத ஒருவர் இதைச் சொன்னால் ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. கூடவே அவர் அகரம் அறக்கட்டளை மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்பவர் என்பதும் சேர்ந்து கொள்கிறது.

 சூர்யாவுக்கு கிடைக்கும் கவனம் நீட்டுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கவனத்தை அநியாயமாகத் திருப்பும் எனும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அரசியலுக்கு வரேன் வரேன் எனச் சொல்லிக்கொண்டே எந்தப் பிரச்சனையிலும் எதிர்வினையாற்றாமல் சிலர் கமுக்கமாகப் போய் விட, இதனால் எந்த பலனும் இல்லாத, கட்சி ஆரம்பிக்கும் திட்டமே இல்லாத ஒரு நடிகர் வெளிப்படையாக நடுவண் அரசுக்கு எதிராகப் பேச அபாரமான துணிச்சல் வேண்டும். இதுவும் மக்கள் அவரைப் பரவலாகப் பாராட்ட மற்றொரு காரணம்.

ரஜினி போன்ற கன்னடர்கள் ஒவ்வொரு பிணம் விழும்போதும் கைதட்டிக் கொண்டாடுவார்கள். ஒரு மக்கள் சமூகம் மீதான அன்பானது தோன்ற அம்மண்ணில் பிறந்து அதன் மகனாக தன்னை உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். கன்னடர்கள் மட்டுமல்ல, வேறு மாநிலத்தில் பிறந்தவர்கள், அல்லது இம்மண்ணில் பிறந்தாலும் வேறு மாநிலத்தை தன் சொந்த மண்ணாய் இதயத்தில் வைத்து வழிபடுகிற, பிழைப்புக்காக மட்டும் இம்மண்ணில் வாழ்கிறவர்கள் மக்கள் பிரச்சனைகளில் அந்நியமாகவே உணர்வார்கள். உ.தா., அண்ணாமலை இங்கு பிறந்தவர் என்றாலும் அவர் மனதளவில் கன்னடர்களிடத்தே இணக்கமாக உணர்கிறார், சாகும் வரை நான் கன்னடன் எனப் பேசும் அவர் ஒருபோதும் தன்னை ஒரு தமிழன் எனக் கூறி பெருமை கொள்ள மாட்டார். மாணவர்கள் செத்தாலும் நீட்டை ஆதரிப்பேன் என அவர் பிடிவாதம் பிடிப்பது தமிழ் உயிர்கள் மாயும் போது அவருக்கு அது வலிப்பதில்லை என்பதாலே. கிஷோர் ஸ்வாமி போன்று தமிழ் சமூகத்தில் இருந்து தன்னை அந்நியமாய் உணர்வோருக்கும்,  விரைவில் பாஜகவில் சேரப் போகும் விஷாலுக்கும் இது பொருந்தும்.

நீட் என்பது ஒரு அரசியல் பிரச்சனையல்ல, மொழிப் பிரச்சனை. மொழியால் தம்மை ஒரு தனி இனமாக உணரும் மக்கள் மீது அந்நியர்கள் தொடுக்கும் தாக்குதல்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...