Skip to main content

இந்தி என்பது ஒரு மொழி அல்ல, படையெடுப்பவனின் ஆயுதம்




இந்தி எதிர்ப்பை சிலர் இந்திய ஒன்றியத்துடன் மனதளவில் இணையத் தயங்குகிற, ‘தேசபக்தி குறைவான’ எல்லைப் பகுதி மாநிலங்களின் பிரச்சனையாகப் பார்க்கலாம். ஆனால் உண்மையில் இந்தி என்பது இத்தேசத்தை ஒன்றிணைப்பதற்கான, வித்தியாசங்களைக் கடந்து மக்கள் ஒருமைப்படுவதற்கான கருவி அல்ல. 


இந்த பிரச்சனை இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தற்கு பத்து வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது - முஸ்லீம் லீக் ஒரு எதிரணியாக காங்கிரஸுக்கு முன் திரள, தனி நாடு கோர, காங்கிரஸ் தன்னை ஒரு ‘இந்துக்களின்’ பிரதிநிதிக் கட்சியாக கருதத் தொடங்கியது. பாகிஸ்தானியரின் மொழி உருது என இந்துக்களின் மொழி இந்தி என காங்கிஸுக்குள் இருந்த ஸ்லீப்பர் செல் சங்கிகள் கூறத்தொடங்கினர். அப்படித்தான் இந்தியைக் கொண்ட இந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கியது - மொழியைக் கொண்டு மக்களை ஒன்றாக்குவது என பொதுப்படையாகத் தெரிந்தாலும், நிஜத்தில் இது மொழியைக் கொண்டு ஒரு பெரும்பான்மை இந்து அடையாளத்தை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சியாகவே இருந்தது.


உங்களுக்குத் தோன்றலாம் - ஏற்கனவே பெரும்பகுதி இந்துக்களாக இருக்கையில் எதற்கு இந்தி என:


பெரும்பகுதி ‘இந்துக்கள்’ பலர் சிறுதெய்வ வழிபாட்டைப் பின்பற்றினவர்கள், பல சாதிப்பின்னணியில் இருந்து வருகிறவர்கள். சமிஸ்கிருத பிராமணிய இந்து மதக் கட்டமைப்புக்குள் சுலபமாக தம்மை அடக்கிக் கொள்ளுகிறவர்கள் அல்ல இம்மக்கள். இந்தி என்பது சமஸ்கிருதச் சொற்களை அதிகமாய் கொண்டு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உப-பிராமணிய மொழி. (இந்து-முஸ்லீம் பிரிவினையைத் தூண்டும் நோக்கில் வெள்ளையர்களால் நிறைய செலவு செய்து கொண்டு வரப்பட்டது.) இந்தி திணிப்பானது ஒட்டுமத்த தேசத்தையும் பிராமணிய வைணவ சட்டகத்துக்குள் கொண்டு வர வேண்டும், பழைய வர்ணாசிரம அமைப்பை மீட்க வேண்டும் எனும் மறைமுக அஜெண்டாவைக் கொண்டது.


காங்கிரஸின் மென்-இந்துத்துவ முன்னெடுப்புக்கு தடையாக இருந்தது நேருவின் முற்போக்கு ஜனநாயக கருத்தியல். அவர் மிகவும் செல்வாக்கு படைத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் சங்கிகள் அடங்கிப் போக நேர்ந்தது. ஆரம்பத்தில் இந்தியே நாட்டை ஒருங்கிணைக்கும் என நேரு நம்பினார் என்பது உண்மைதான்; அதற்கு முக்கிய காரணம் அவருக்கு  மாநிலங்களின் பன்மைத்துவ கலாச்சாரப் பின்னணி, மொழி தேசியம் புரியவில்லை. உ.பி மட்டுமல்ல இந்தியா என அவருக்கு விளங்கியது தமிழகத்தில் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்த பின்னருமே. ஆட்சிமொழியாக (இந்தியுடன்) ஆங்கிலம் தொடரும், அனைத்து மாநிலங்களும் இந்தியை ஏற்கும் வரை என அவர் கூறினார். ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் காங்கிரஸுக்குள் இந்தியா முழுமையையும் பிராமண இந்து தலைமையின் கீழ்க் கொணர வேண்டும் எனும் நோக்கம் தலைதூக்கியது. இதற்கு இணையாக சமத்துவத்தை, பன்மைத்துவத்தை ஏற்கும் போக்கும் அக்கட்சியில் தொடர்ந்ததால் இந்தி ஒரு லோக்கல் ரவுடியாக மட்டுமே பீடி புகைத்தபடி வடக்கே ஆளுகை செய்து திரிந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் தன் ஒரிஜினல் அஜெண்டாவான “ஒற்றை இந்தியா, அது பிராமண இந்து இந்தியா” எனும் கொள்கையை வலுவாக முன்னெடுத்தது. இப்போது லோக்கல் ரௌடி இந்தி விமானத்தில் பறக்கும், எந்திரத்துப்பாக்கியால் சுடும் மலிடிமில்லியன் மாபியா தலைவரானது. 


அண்மையில் காங்கிரஸ் கட்சி தனது தலைமை பற்றின கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய போது முதலில் ஆங்கிலத்தில் பேசி விட்டு, அடுத்து இந்தியில் மொழியாக்கத்தை வாசித்துக் காட்டினர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரோ அனைத்து அமைச்சர்கள், தலைவர்களும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். பிரதமர் பேசும் போது கூட அதற்கு மொழிபெயர்ப்பு தருவதில்லை. இந்தி தெரியாதவனுக்கு மோடி பிரதமர் இல்லை என ஒரு சேதி அதில் வருகிறது. இதன் நுண்ணரசிய பார்ப்பனிய இந்து மதத்தை ஏற்காதவனுக்கு மோடி பிரதமர் இல்லை என்பதே.


இந்தி தெரியாதவர்கள் அடிப்படையில் தமது இந்துமதக் கதையாடலை ஏற்காதவர்கள், அவர்கள் தம் விரோதிகள் என மோடி அரசு நினைக்கிறது. இதனாலே சப்பைக்காரணங்கள் சொல்லி தேசியக் கல்வி கொள்கையை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய அது மறுப்பு தெரிவித்தது. பார்ப்பன இந்து மதத்தை சேராதவர்கள் தம் கொள்கையை படித்தால் தம்மை விமர்சிப்பார்கள் என அது அஞ்சுகிறது. 


காஷ்மீரில் இந்தி பேசும் மக்களே அநேகமாய் இல்லை. இருந்தும் அங்கே ஏன் இந்தி ஆட்சி மொழியாக்கப்படுகிறது என்றால் உருதுவை ஒழிக்க வேண்டும் என்பதே. இதன் காரணம் பிரிவினைக்காலத்தில் இருந்தே உ.பி, தில்லிக்காரர்கள் உருதுவை பாகிஸ்தானியர்களின் (அதாவது இஸ்லாமியரை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள்) மொழி என இவர்கள் நம்பி வருவதே. உருதுவை ஒழித்தால் இஸ்லாமிய சார்பு ஒழியும், அப்போது காஷ்மீரை ஒரு இந்து மாநிலமாக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்க்ள். அதெப்படி நடக்கும்? நடைமுறையில் சாத்தியமா?


ஆமா, காஷ்மீரத்து மக்கள் தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்றியபடியே பார்ப்பனியத்தை வழிபடலாம் - இது சாத்தியமே. உருதுவுக்குப் பதில் சமஸ்கிருதக் கலப்பு கொண்ட இந்தியை அவர்கள் பேசினால் அது மறைமுகமாக அரங்கேறி விடும்.


மொழி என்பது ஒரு ஆபத்தான கருவி. அது நம் மூளையமைப்பை மாற்றக் கூடியது என அறிவியல் கூறுகிறது. இந்தியை அதிகமாய் பேசப் பேச உங்கள் மூளை பிராமணியப்பட்டு விடும். அதற்காகவே இந்தியை பாஜக இவ்வளவு மும்முரமாக பரப்புகிறது. காங்கிரஸை விட பாஜகவுக்கே இந்தியினால் அதிக பலன் கிடைக்கும். அவர்கள் அராஜகமாய் திணிக்கிற இந்துத்துவத்தை, வாழைப்பழத்தில் ஊசிபோல மக்கள் மனதுக்குள் திணிக்க இந்தி உதவும். 


//The inclusion of Hindi among the official languages of Jammu and Kashmir has left many puzzled. The Jammu and Kashmir Constitution did not recognise it as a regional language. Many point out it is not native to any major community in the union territory.


“You don’t find any Hindi-speaking people in Kashmir valley,” said Chowdhary Zulfkar Ali, the former PDP minister who is now a member of the newly formed Jammu and Kashmir Apni Party. “Same is the case with Rajouri and Poonch districts in Pir Panjal and Chenab valley districts in Jammu region.”//


இச்செய்தியைப் படிக்க பின்னூட்டத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


 https://scroll.in/article/973087/modi-government-sparks-language-anxieties-in-jammu-and-kashmir-and-fears-of-hindi-imposition

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...