Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்தி என்பது ஒரு மொழி அல்ல, படையெடுப்பவனின் ஆயுதம்




இந்தி எதிர்ப்பை சிலர் இந்திய ஒன்றியத்துடன் மனதளவில் இணையத் தயங்குகிற, ‘தேசபக்தி குறைவான’ எல்லைப் பகுதி மாநிலங்களின் பிரச்சனையாகப் பார்க்கலாம். ஆனால் உண்மையில் இந்தி என்பது இத்தேசத்தை ஒன்றிணைப்பதற்கான, வித்தியாசங்களைக் கடந்து மக்கள் ஒருமைப்படுவதற்கான கருவி அல்ல. 


இந்த பிரச்சனை இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தற்கு பத்து வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது - முஸ்லீம் லீக் ஒரு எதிரணியாக காங்கிரஸுக்கு முன் திரள, தனி நாடு கோர, காங்கிரஸ் தன்னை ஒரு ‘இந்துக்களின்’ பிரதிநிதிக் கட்சியாக கருதத் தொடங்கியது. பாகிஸ்தானியரின் மொழி உருது என இந்துக்களின் மொழி இந்தி என காங்கிஸுக்குள் இருந்த ஸ்லீப்பர் செல் சங்கிகள் கூறத்தொடங்கினர். அப்படித்தான் இந்தியைக் கொண்ட இந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கியது - மொழியைக் கொண்டு மக்களை ஒன்றாக்குவது என பொதுப்படையாகத் தெரிந்தாலும், நிஜத்தில் இது மொழியைக் கொண்டு ஒரு பெரும்பான்மை இந்து அடையாளத்தை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சியாகவே இருந்தது.


உங்களுக்குத் தோன்றலாம் - ஏற்கனவே பெரும்பகுதி இந்துக்களாக இருக்கையில் எதற்கு இந்தி என:


பெரும்பகுதி ‘இந்துக்கள்’ பலர் சிறுதெய்வ வழிபாட்டைப் பின்பற்றினவர்கள், பல சாதிப்பின்னணியில் இருந்து வருகிறவர்கள். சமிஸ்கிருத பிராமணிய இந்து மதக் கட்டமைப்புக்குள் சுலபமாக தம்மை அடக்கிக் கொள்ளுகிறவர்கள் அல்ல இம்மக்கள். இந்தி என்பது சமஸ்கிருதச் சொற்களை அதிகமாய் கொண்டு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உப-பிராமணிய மொழி. (இந்து-முஸ்லீம் பிரிவினையைத் தூண்டும் நோக்கில் வெள்ளையர்களால் நிறைய செலவு செய்து கொண்டு வரப்பட்டது.) இந்தி திணிப்பானது ஒட்டுமத்த தேசத்தையும் பிராமணிய வைணவ சட்டகத்துக்குள் கொண்டு வர வேண்டும், பழைய வர்ணாசிரம அமைப்பை மீட்க வேண்டும் எனும் மறைமுக அஜெண்டாவைக் கொண்டது.


காங்கிரஸின் மென்-இந்துத்துவ முன்னெடுப்புக்கு தடையாக இருந்தது நேருவின் முற்போக்கு ஜனநாயக கருத்தியல். அவர் மிகவும் செல்வாக்கு படைத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் சங்கிகள் அடங்கிப் போக நேர்ந்தது. ஆரம்பத்தில் இந்தியே நாட்டை ஒருங்கிணைக்கும் என நேரு நம்பினார் என்பது உண்மைதான்; அதற்கு முக்கிய காரணம் அவருக்கு  மாநிலங்களின் பன்மைத்துவ கலாச்சாரப் பின்னணி, மொழி தேசியம் புரியவில்லை. உ.பி மட்டுமல்ல இந்தியா என அவருக்கு விளங்கியது தமிழகத்தில் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்த பின்னருமே. ஆட்சிமொழியாக (இந்தியுடன்) ஆங்கிலம் தொடரும், அனைத்து மாநிலங்களும் இந்தியை ஏற்கும் வரை என அவர் கூறினார். ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் காங்கிரஸுக்குள் இந்தியா முழுமையையும் பிராமண இந்து தலைமையின் கீழ்க் கொணர வேண்டும் எனும் நோக்கம் தலைதூக்கியது. இதற்கு இணையாக சமத்துவத்தை, பன்மைத்துவத்தை ஏற்கும் போக்கும் அக்கட்சியில் தொடர்ந்ததால் இந்தி ஒரு லோக்கல் ரவுடியாக மட்டுமே பீடி புகைத்தபடி வடக்கே ஆளுகை செய்து திரிந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் தன் ஒரிஜினல் அஜெண்டாவான “ஒற்றை இந்தியா, அது பிராமண இந்து இந்தியா” எனும் கொள்கையை வலுவாக முன்னெடுத்தது. இப்போது லோக்கல் ரௌடி இந்தி விமானத்தில் பறக்கும், எந்திரத்துப்பாக்கியால் சுடும் மலிடிமில்லியன் மாபியா தலைவரானது. 


அண்மையில் காங்கிரஸ் கட்சி தனது தலைமை பற்றின கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய போது முதலில் ஆங்கிலத்தில் பேசி விட்டு, அடுத்து இந்தியில் மொழியாக்கத்தை வாசித்துக் காட்டினர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரோ அனைத்து அமைச்சர்கள், தலைவர்களும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். பிரதமர் பேசும் போது கூட அதற்கு மொழிபெயர்ப்பு தருவதில்லை. இந்தி தெரியாதவனுக்கு மோடி பிரதமர் இல்லை என ஒரு சேதி அதில் வருகிறது. இதன் நுண்ணரசிய பார்ப்பனிய இந்து மதத்தை ஏற்காதவனுக்கு மோடி பிரதமர் இல்லை என்பதே.


இந்தி தெரியாதவர்கள் அடிப்படையில் தமது இந்துமதக் கதையாடலை ஏற்காதவர்கள், அவர்கள் தம் விரோதிகள் என மோடி அரசு நினைக்கிறது. இதனாலே சப்பைக்காரணங்கள் சொல்லி தேசியக் கல்வி கொள்கையை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய அது மறுப்பு தெரிவித்தது. பார்ப்பன இந்து மதத்தை சேராதவர்கள் தம் கொள்கையை படித்தால் தம்மை விமர்சிப்பார்கள் என அது அஞ்சுகிறது. 


காஷ்மீரில் இந்தி பேசும் மக்களே அநேகமாய் இல்லை. இருந்தும் அங்கே ஏன் இந்தி ஆட்சி மொழியாக்கப்படுகிறது என்றால் உருதுவை ஒழிக்க வேண்டும் என்பதே. இதன் காரணம் பிரிவினைக்காலத்தில் இருந்தே உ.பி, தில்லிக்காரர்கள் உருதுவை பாகிஸ்தானியர்களின் (அதாவது இஸ்லாமியரை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள்) மொழி என இவர்கள் நம்பி வருவதே. உருதுவை ஒழித்தால் இஸ்லாமிய சார்பு ஒழியும், அப்போது காஷ்மீரை ஒரு இந்து மாநிலமாக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்க்ள். அதெப்படி நடக்கும்? நடைமுறையில் சாத்தியமா?


ஆமா, காஷ்மீரத்து மக்கள் தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்றியபடியே பார்ப்பனியத்தை வழிபடலாம் - இது சாத்தியமே. உருதுவுக்குப் பதில் சமஸ்கிருதக் கலப்பு கொண்ட இந்தியை அவர்கள் பேசினால் அது மறைமுகமாக அரங்கேறி விடும்.


மொழி என்பது ஒரு ஆபத்தான கருவி. அது நம் மூளையமைப்பை மாற்றக் கூடியது என அறிவியல் கூறுகிறது. இந்தியை அதிகமாய் பேசப் பேச உங்கள் மூளை பிராமணியப்பட்டு விடும். அதற்காகவே இந்தியை பாஜக இவ்வளவு மும்முரமாக பரப்புகிறது. காங்கிரஸை விட பாஜகவுக்கே இந்தியினால் அதிக பலன் கிடைக்கும். அவர்கள் அராஜகமாய் திணிக்கிற இந்துத்துவத்தை, வாழைப்பழத்தில் ஊசிபோல மக்கள் மனதுக்குள் திணிக்க இந்தி உதவும். 


//The inclusion of Hindi among the official languages of Jammu and Kashmir has left many puzzled. The Jammu and Kashmir Constitution did not recognise it as a regional language. Many point out it is not native to any major community in the union territory.


“You don’t find any Hindi-speaking people in Kashmir valley,” said Chowdhary Zulfkar Ali, the former PDP minister who is now a member of the newly formed Jammu and Kashmir Apni Party. “Same is the case with Rajouri and Poonch districts in Pir Panjal and Chenab valley districts in Jammu region.”//


இச்செய்தியைப் படிக்க பின்னூட்டத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


 https://scroll.in/article/973087/modi-government-sparks-language-anxieties-in-jammu-and-kashmir-and-fears-of-hindi-imposition

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...