Skip to main content

இந்திய அரசு எனும் அடகுக்கடை - மோடி ஆண்ட் சன்ஸ், சௌகார்பேட்டை



வானதி சீனிவாசன் சுய-உதவிக் குழுக்களுடன் பேசுவதை நேரலையில் பார்த்தேன். மோடி அரசு மகளிர் சுய-உதவி செய்வதற்காக வழங்குகிற கடன்களைப் பற்றி பேசிய அவர் நேர்மையான நோக்கத்துடன் வருகிறவர்களுக்கே உதவி கிடைக்கும், தொழிலுக்கு அவசியமான தொகையை மட்டுமே கோர வேண்டுமென்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். தேவைப்படும் பெண்களுக்கு சராசரியாக பத்தாயிரம் ரூ வாங்கித் தருகிறோம் என்றவர் கடைசியாய் சொன்னதுதான் முத்தாய்ப்பு - அவர் இதைப் போல முன்பு வாழ வழியில்லாத ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூ வாங்கிக் கொடுத்த போது அவர்கள் தனக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டினார்கள் என்றார். சுவரொட்டி அச்சிட்டு நன்றி தெரிவிக்க பணமுள்ளவர்கள் தாம் வாழ வழியில்லாதவர்களா? இந்த சுய-உதவி குழுவினரிடம் இதைச் சொல்வதன் நோக்கம் என்ன? நாங்கள் உதவி செய்கிறோம், நீங்கள் சுவரொட்டி ஒட்டுங்கள் என்றா? உதவி கிடைக்குதோ இல்லையோ விளம்பரத்தை மறந்திடாதீங்க என்றா? இல்லை, இந்த வங்கிக் கடன் உதவியெல்லாம் விளம்பரத்துக்காக இவர்களே வாங்கி இவர்களே அடித்து ஒட்டிக்கொள்வதற்கான ஏற்பாடா?


அதே போல ‘பிரதம மந்திரி’ செல்வமகள் என ஒரு திட்டத்தைப் பற்றியும் பேசினார் - இதன்படி 8 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகள் ஏழையாகவும், அப்பா இறந்து போன கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறவர்களாகவும் துன்புறும் நிலையில் - இனிமேல் தான் மேட்டரே வருகிறது - இத்திட்டத்தில் இணைந்து வருடத்திற்கு குறைந்தது 1000 ரூ கட்ட வேண்டும். பதினெட்டு வயது நிறைவுற்றதும் இப்படி வருடாவருடம் கட்டின தொகையுடன் அரசு ஒரு தொகையையும் சேர்த்து ‘மொத்தமாய்’ ஒரு தொகையை அளிக்கும் என்றார். அரசு போடுகிற உபரித் தொகை எவ்வளவு என சொல்ல மாட்டேன் என்கிறார். அதாவது வருடாவருடம் ஏழை மக்கள் உழைத்து சம்பாதிக்கிற பணத்தை வங்கியில் செலுத்தினால் அதை சேர்த்து (வருங்கால வைப்பு நிதியைப் போல) அரசே 10 வருடம் கழித்து அவர்களுக்கு திரும்பத் தருமாம். இதன் பெயர் உதவித் தொகையா? அப்பணத்தை வங்கியில் சும்மா போட்டால் வட்டி வருமே? இதே போன்ற திட்டம் எல்.ஐ.சியில் உண்டே? சிறுசிறுக இதைப் போல பணத்தை வாங்கி தங்க நகையாகத் தரும் திட்டம் தனியாரிடம் உண்டே? இதை செய்ய எதற்கு ஒரு அரசு?


அண்மையில் இன்னொரு திட்டத்தை நமது பிரதமர் படோடோபமாக அறிவித்தார் - இதன்படி சொந்தமாய் நிலம் உள்ளவர்களுக்கு ஒரு அட்டையை ‘இலவசமாய்’ அளிக்கிறார்கள். இந்த அட்டையைக் காட்டி வங்கியில் இருந்து ‘ஏழைகள்’ தங்கள் விவசாயத்துக்கு கடன் வாங்கிக் கொள்ளலாமாம். இப்படி கடன் வங்கிக் கொடுக்க எதற்கு அரசு? அதற்கு எதற்கு ஒரு அட்டை? மாநிலங்கள் தமக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைக் தொகையை கேட்டாலும் கடன் வங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள், ஏழைகள் உதவி வேண்டினால் உங்க பணத்தை எங்களிடம் கொடுங்கள், பின்னர் மொத்தமாய் திருப்பித் தருகிறோம் அல்லது உங்கள் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிட நில ‘அட்டை’ தருகிறோம் என்கிறார்கள். 

ஆயுதம் வாங்கவும், பிரதமருக்கு 500 இருக்கை கொண்ட தனியார் விமானம் வாங்க மட்டும் இந்த அரசிடம் பணம் உண்டா? 

ஒரு அரசு என்பது சௌகார் பேட்டை சேட்டைப் போலவா செயல்படுவது? குஜராத்திகளிடம் ஆட்சியைக் கொடுத்ததன் விளைவு தானா இது?  அடக்கொடுமையே!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...