முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ன பண்ண வேண்டும்?





அணித்தேர்விலும் பந்து வீச்சுத்தேர்விலும் நடந்த குளறுபடியால் இன்றைய போட்டியை தில்லியிடம் சென்னை அணி தோற்றது.

அதனால் அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இரு மாற்றங்களை செய்தாக வேண்டும்:

1) வாட்ஸனின் இடத்தில் இம்ரான் தாஹிர்

2) கேதார் ஜாதவின் இடத்தில் ஜகதீசன்


1) வாட்ஸன் எப்போது வேண்டுமானாலும் ஆட்டநிலைக்கு மீண்டு பிரம்மாண்டமாக அடித்தாடலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவரது உடற்தகுதி, களத்தடுப்பு, ஓடும் வேகம் அவரது அணியை பெரிய அளவில் பாதிக்கிறது. களத்தடுப்பில் ஒரு 8-10 ரன்கள், ஒற்றை, இரட்டை ரன்கள் ஓடாமல் இன்னொரு 15-20 ரன்கள். குறைந்தது இவரால் 20 ஓட்டங்களாவது சென்னை ஆரம்பத்திலேயே இழக்கிறது. ஆக இப்போதைய புயலின் போது கப்பலில் இருந்து கடலில் வீசுவதற்கு ஏற்ற பீரோ வாட்ஸன் தான்.

தாஹிரால் மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இன்று ஏற்பட்ட நிலை வந்தால் அவரால் இறுதி ஓவரைக் கூட வீச முடியும். தோனிக்கு நிச்சயமாய் 7 வீச்சாளர்கள் தேவை. ஏனென்றால் ஜடேஜாவை நம்பி 2 ஓவர்களை ஒதுக்குவது ஆபத்தானது. அவரது மட்டையாட்டம் நல்ல ஆட்டநிலையில் இருக்க, பந்துவீச்சோ இத்தொடர் முழுக்கவே சொதப்பல் தான்.


2) ஜாதவ் ஒரு டம்மி போலீஸ். சென்னை அணிக்குள் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருக்க வந்த வீட்டோடு மாப்பிள்ளை அவர். களத்தடுப்பில்லை, மட்டையாட்டமில்லை, பந்து வீச்சுமில்லை. சுத்த வேஸ்ட். சாம் கரன் மற்றும் டூ பிளஸி துவக்க வீரர்கள், ராயுடு மூன்றாவது, ஜகதீஸன் நான்காவது என அடுத்த போட்டியில் நான் மட்டையாட்ட வரிசையை அமைக்க விரும்புவேன்.


இன்னொரு தேர்வு சாத்தியம் வாட்ஸனின் இடத்தில் மிச்சல் சாண்டினரைக் கொண்டு வருவது. அப்போது அணியில் 2 பிரதான வேக வீச்சாளர்கள், ரெண்டு மிதவேகவீச்சு ஆல்ரவுண்டர்கள், ஒரு கால் சுழலர் ஒரு இடதுகை சுழலர் இருப்பார்கள். (இன்று நடந்ததைப் போல) இவர்களில் ஒன்றிரண்டு பேர் சொதப்பினால் கூட அணியை அது பெரிதாய் பாதிக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...