Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பெண்கள் பலாத்கார செய்யப்படுவதற்கு அப்பெண்களின் பெற்றோரே காரணம் என ஏன் சொல்லுகிறார்கள்?




//"I am a teacher along with being an MLA. Such incidents (like rape) can be stopped only with sanskar (culture), not with shasan (good governance) or talwar (referring to sword or might)," the BJP's Surendra Singh said on Saturday.


"It's my dharma, government's dhrama but family's dharma too... While government is committed to protect, the family should be committed too to imbibe good values in their children. Sanskar and sarkaar can make India beautiful, there is no other alternative," he is heard saying in a video. // - செய்தி


ஏன் பாஜக அரசியல்வாதிகள் இப்படி பைத்தியங்களாக இருக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம். ஆனால் இதன் பின்னால் உள்ள ஒரு தந்திரமான அரசியலை கவனிக்க வேண்டும்:

எல்லா மாநிலங்களிலும், மத்தியிலும் பாஜக நிர்வாகத்தில் நிறைய கோளாறுகள் உண்டு. சொல்லப் போனால், பரபரப்பான முடிவுகள், பேட்டிகள், விழா எடுப்பதை விட்டால் அங்கு நிர்வாகமே இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பெற்றோர்கள் தம் பெண்களுக்கு பண்பாட்டை புகட்ட வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பாஜக தலைவர்கள் சொல்லும் போது அது சர்ச்சைக்குள்ளாகும் எனத் தெரியாதா என்ன? தெரியும். இருந்தும் ஏன் சொல்கிறார்கள்? தம் நிர்வாகத் தவறுகளை, மோசமான ஆட்சிக்கான பொறுப்பை ஏற்காமல் இருக்க. ஆம் அதுவே அவர்களின் நோக்கம். இங்கே கவனியுங்கள்: சுரேந்திர சிங் பொறுப்பை மக்கள் மற்றும் பண்பாட்டின் மீது சுமத்துகிறார். அப்படியே  இந்துப் பண்பாட்டின் பின்னால் போய் ஒளிந்து கொள்ளும் திட்டமாகும் இது. இப்போது பாஜக நிர்வாகத்தை யாரும் குற்றம் சொன்னால் அது நம் பண்பாட்டை அவமதிப்பதாகி விடும்.


மேலும் யாராலும் ஏற்க முடியாத, அதிர்ச்சிக்குரிய கருத்துக்களை ஒருவர் சொல்லும் போது அவரை நாம் பகுத்தறிவின் தளத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டே உரையாட முடியும். உணர்ச்சிகளாலும் புனைவுகளாலும் ஆன ஒரு கலாச்சார கதையாடலுக்கு நடைமுறை அரசியலை நகர்த்தியாக வேண்டும். தமிழகத்திலும் பாஜகவின் ஊடக விவாதங்கள் இப்படி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். டிவியில் அவர்கள் எந்த பகுத்தறிவுக்கும் இடமளிக்காமல் கத்துவார்கள். எதிர்த்தரப்பை பேச விட மாட்டார்கள். கேள்விகளால் கிடுக்கிப் பிடி போட்டால் சம்மந்தமில்லாமல் ‘காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த தவறால் தான் இப்போது சீனா நம்மை ஆக்கிரமிக்கிறது, அதனால் தான் ஜிடிபி தரைமட்டத்தில் இருக்கிறது’ என உளறுவார்கள். இது அபத்தம் என எதிர்த்தரப்பினர் சொன்னால் பைத்தியம் போல ஆடையைக் கிழித்துக் கொண்டு கூப்பாடு போடுவார்கள். இதை ஒரு நெறியாளர் விமர்சித்தாலோ கேள்வி கேட்டாலோ அவரைப் பற்றி நிர்வாகத்துக்கு புகார் செய்வார்கள். பேஸ்புக்கில் ஹரன் பிரசன்னா போன்றவர்கள் இந்த நெறியாளர்களை கண்டிக்கிறோம் எனும் பொருளில் அவர்கள் இந்து (பாஜக) விரோதிகள் எனப் பழிசுமத்தி ஊடக நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். ஒரு பாஜக ஆதரவு நீதிபதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்களை அதைத் தடுக்க முயன்றார்கள் என புனைவாக ஒரு தீர்ப்பை அளிப்பார். இது அபத்தம் என மக்கள் கண்டித்தால் உள்ளுக்குள் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால் அப்பட்டமாய் அரசியல் கதையாடல்களை புனைவை நோக்கி, அதர்க்கத்தை நோக்கி நகர்த்துவது அவர்களின் தந்திரம்.


 கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முழுக்க முழுக்க பொய்ச்செய்திகளை புனைந்து வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள்; அவை பொய்யென தெரிந்தாலும் உற்சாகமாய் அவற்றைப் பரப்புகிறவர்களே பாஜகவின் ஆதரவாளர்கள். ராமர் நிஜமாகவே அணிலின் துணையுடன் கடலில் கற்களால் பாலம் அமைத்திருக்க முடியாது என இவர்களுக்குத் தெரியாதா? அப்படி ஒரு பாலம் அமைப்போம் என கடலுக்கு அழைத்து சென்றால் இவர்கள் வருவார்களா? மாட்டார்கள். நடைமுறை வாழ்க்கையில் தெளிவாக பகுத்தறிவுடன் இயங்கும் இவர்கள் மற்றொரு பக்கம் அரசியலை புனைவு மொழியில் எதிர்கொள்ள விரும்புகிறார்கள். இது ஒரு விசித்திரமான மனநிலை. இதைப் புரிந்து கொள்ள உளவியலால் கூட முடியாது.

“நகரம்” படத்தில் வடிவேலு “ஏரியாக்கு வாடா ஏரியாக்கு வாடா” என சவால் விட்டுச் சொல்வாரே, அப்படியான ஒன்று இது; அவர்களுக்கு என ஒரு “ஏரியாவே” கிடையாது. உங்களை அலைகழிக்க விட்டு விட்டு சிரித்துக் கொண்டு இருப்பார்கள். 

ஏனென்றால் தர்க்கத்துப் புறம்பான அரசியல் கதையாடல்கள் அவர்களுடைய ஏரியா - அங்கே அவர்கள் தான் பெரிய ரவுடிகள். அந்த ஏரியாவுக்கு நாம் இவர்களுடன் சென்றால் நாம் பைத்தியம் பிடித்து திகைத்து நிற்போம் என இவர்களுக்குத் தெரியும். 

இப்படி கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுக்க அரசியல் மொழியை பகுத்தறிவுக்குப் புறம்பான மொழியாக்கி தம்மை எதிர்ப்போரையும் பைத்தியமாக்கியதே இவர்களின் தந்திரத்தின் வெற்றி.

ஒரு பெண் பலாத்கார செய்யப்படுவதற்கு அவளது பெற்றோர் அவளுக்கு பண்பாட்டை சரியாக பயிற்றுவிக்காதத்தே காரணம் என ஒரு பாஜக எம்.எல்.ஏ சொல்லும் போது நாம் பிளாட்பாரத்தில் அமர்ந்து மலத்தை தின்னும் பைத்தியத்தை பார்த்ததை போல திகைத்து நிற்போம். அதுதான் இவர்களுக்கு வேண்டும். மலத்தைத் தின்பது உங்களை முறியடிப்பதற்கான ஒரு தந்திரம்.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்