Skip to main content

ஒண்ணு எம்.ஜி.ஆர் இல்லைன்னா நம்பியார்

 






Hi Sir,

உங்கள் அரசியல் மற்றும் விளையாட்டு சம்பந்தமான பதிவுகளை கடந்த மூன்று வருடங்களாக கவனித்து கொண்டு வருகின்றேன்

அரசியல் தற்போது வேண்டாம் விளையாட்டு சம்பந்தமாக மூன்று கேள்விகள் உங்களிடம்.


1. ரோகித் பற்றிய கட்டுரையில் அவர் டெஸ்ட் போட்டியில் ஜொளிக்க மாட்டார் என்றீர்கள் (தெ.. உள்ளூர்.தொ விட்டுவிடுவோம்) ஆஸி தொடரில் கலக்கினால் மீண்டும் ஒரு அலசல் கட்டுரை எழுத வேண்டுகிறேன்.


2. Betting fixing கிரிக்கெடின் அனைத்து மட்டத்திலும் உண்டு அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் செல்வந்தர்கள் தான், உயிர்மைகான அலசலில் மும்பை ஆரம்ப கட்டத்தில் தோற்றால் அவர்கள் betting செய்து வருவது தான் வழி என்றீர்கள் இது ஒருதலை பட்சமாக இல்லையா? 2010 ஆண்டு csk playoff வந்ததும் மற்றும் தற்போது csk playoff க்கு தகுதி பெற்றால் அதை betting என்று உயிர்மை அலசலில் கூறுவிற்களா?

(En thanipatta ennam betting fixing nu pothuthalathil sollavendam apdi parthal International to league varai ellam betting fixing than)


3. தமிழ் நாட்டில் அணைத்து அணிகளுகும் ரசிகர்கள் இருக்கும் போது star sports தமிழ் commentry மாதிரி நீங்களும் csk வுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருகின்றீர்கள் கொஞ்சம் பரிசீலனை பன்னலாமே?


மற்றபடி உங்கள் கட்டுரைகள் பதிவுகள் எழுத்துகள் உயிரோட்டம் மிக்கவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.


- Puvi King


வணக்கம்

1) ரோஹித்தால் வெளிநாட்டு மண்னில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து) அவரால் சோபிக்க முடியாது என இப்போதும் நம்புகிறேன். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பந்து ஸ்விங் ஆகும் போது முன்னங்காலுக்கு வந்து ஆப் ஸ்டம்புக்கு வந்து பந்தை விடுவது, உள்ளே வரும் பந்தை சரியாக தடுத்தாடுவது அவரால் முடியுமா? ஐந்தாவது நாள் மட்டையாடும் போது ஒரு நல்ல சுழலர் roughஇல் பந்தில் போட்டு அதிகமாய் திருப்பினால் ரோஹித்தால் சமாளித்தாட முடியுமா? இந்த புதுத்திறன்களை அவர் வளர்த்து ஒரு மேலான டெஸ்ட் மட்டையாளராக வரும் சில ஆண்டுகளில் மலர்வாரா? இப்போதே 33 வயதாகிறது ... அப்படி நடந்தால் அது உலக கிரிக்கெட்டில் ஒரு அதிசயமாக இருக்கும். எனக்குத் தெரிந்து ஒரு வயதான வீரர் திடீரென அபாரமான டெஸ்ட் மட்டையாளர் ஆனதில்லை. அதனாலே ரோஹித்தை டெஸ்ட் துவக்க வீரராக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ராகுல்-மயங்க் நல்ல துவக்க வீரர்களாக இருக்கலாம். வெளிநாடுகளில் ஆடும் போது ரஹானேவை / பிரித்வி ஷாவை ஒரு மாற்று துவக்க வீரராக எடுக்கலாம்.


2) .பி.எல்லில் மும்பை அணி வெல்வதற்கு சில ஆட்டங்களில் எதிரணிகள் ஒரு புரிந்துணர்வுடன் செயல்பட்டு உதவியதாய் ஒரு பேச்சுண்டு. நான் அதைத்தான் சொன்னேன். ஓரளவுக்கு அணிகள் பரஸ்பரம் சிலநேரம் விட்டுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன். (இதற்கு ஆதாரம் எல்லாம் இல்லை.) ஆனால் அதே நேரம் இறுதிப்போட்டி வரை முன்னேறும் அளவுக்கு எல்லாம் அணிகள் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் என நான் நம்பவில்லை.


3) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நான் உணர்வுரீதியாக ஆதரிக்கிறேன் என்பது உண்மைதான். அதைத் திட்டமிட்டெல்லாம் செய்வதில்லை. அப்படி நடந்து விடுகிறது. சில நேரங்களில் கொல்கொத்தா மற்றும் மும்பை அணிகள் மீதுதான் நான் இப்படி பாசம் வைப்பதுண்டு. இதையெல்லாம் மறைத்து புறநிலையாக விமர்சிக்க என்னால் முடியாது. ஒன்று எம்.ஜி.ஆர் இல்லைன்னா நம்பியார் என்பதே என் மனப்போக்கு.  


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...