முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வியினால் பெற்றதென்ன?


அடிப்படை கல்வியறிவு இல்லாதவர்கள் தொழிமுனைவோராகி பெரும் வெற்றி பெறுவதை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். பள்ளிவாசலை மிதிக்காதவர்கள் பெரும் பேச்சாளர்களாகி தலைவர்களாக வளர்ந்து முதல்வர், பிரதமர் ஆவதைக் காண்கிறோம். மிகப்பெரும் நடிகர்களாக, சூப்பர் ஸ்டார்களாக மலர்வதைப் பார்த்து வியக்கிறோம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்துவதைப் பார்க்கிறோம். பத்தாம் வகுப்பைத் தாண்டாதவர்கள் ஊடகத் துறைக்கு வந்து, சீரான சுவாரஸ்யமான தமிழில் எழுதுவதை, பெரும் நிர்வாக பொறுப்பில்  அமர்வதைக் காண்கிறோம்.

இன்னொரு பக்கம், அத்தகையோரே இது போல காவல்துறை ஆணையரின் புரொபைல் படங்களை சுட்டு பேக் ஐடி தயாரித்து அதை வைத்து ஆணையரின் நண்பர்களை அணுகி ஏகப்பட்ட பணத்தை திருடியிருக்கிறார்கள். இக்குற்றத்தில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த டிரக் ஓட்டுநர் ரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஜாலியாக வேப்பமரத்துக்கு கீழே படுத்துக் கொண்டு ஆணையர் பெயரையே வைத்து ஆட்டையைப் போடுகிறார். இப்படித்தான் வடக்கில் இருந்து எத்தனையோ படிப்பறிவில்லாதோர் இன்று பரவலாக இணையத் திருட்டை ஒரு தொழிலாக பண்ணி வருகிறார்கள். யுடியூபில் எத்தனையோ காணொலிகள் கிடைக்கின்றன. படிப்பறிவு இல்லாவிடினும் இணையத்தை பயன்படுத்தி தொடர்புகளை வளர்த்து, தகவல்களை திரட்டி சாமர்த்தியமாக ஏமாற்றுத் தொழிலில் ஈடுபட்டு மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள். ஒழுங்காக பள்ளிக் கல்வி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களோ சொற்ப ஊதியத்துக்கு 9-5 வேலை செய்து கொக்கு போல வாழ்கிறார்கள். முறையான பள்ளி, கல்லூரிப் படிப்பு எவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...