Skip to main content

கோலியை அணித்தலைமையில் இருந்து நீக்கலாமா?



நேற்றை தகுதிச் சுற்று போட்டியை பெங்களூர் அணி இழந்த நிலையில் கோலியின் அணித்தலைமை மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கௌதம் கம்பீர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். “கோலியைப் போல எட்டு வருடங்களாக வேறெந்த தலைவராவது ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் அணித்தலைவராக இருந்துள்ளாரா?” எனக் கேட்டுள்ளார். மஞ்சிரேக்கரும் கோலி பதவி விலகுவதே நியாயம் எனக் கூறியுள்ளார். ஆம், நேற்றைய போட்டியில் கோலியின் முடிவுகள், மட்டையாட்ட வரிசை, பந்து வீச்சுத் தேர்வு, அவரது நிதானமற்ற போக்கு அவரது அணியை தடுமாறவும் முக்கியமான வேளையில் நிலையிழந்து மோசமாக ஆடவும் வைத்தது என்பதை ஏற்கிறேன். நானே இக்கருத்துக்களை உயிர்மை டிவியின் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் நிகழ்ச்சியின் போது விரிவாக பேசினேன். ஆனால் அதே நேரம் இந்த ஆண்டு பெங்களூர் அணியின் ஆட்டம் மேலானதாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதற்கான பாராட்டுக்கள் அவர்களின் பயிற்சியாளர்கள், ஓரளவுக்கு முழுமையான, வலுவான அணியை தேர்வு செய்த கோலி மற்றும் ஒன்றாக இணைந்து போராடிய வீரர்களுக்கும் செல்ல வேண்டும். பெங்களூரின் துவக்க மட்டையாட்டம் (குறிப்பாக படிக்கல்லின் ஆட்டம்), இறுதி ஓவர்களின் அதிரடி ஆட்டம் நன்றாக இருந்தது. மத்திய வரிசையில் கோலியும் ஏ.பி.டியும் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றினர். சுழல் பந்து வீச்சில் சஹலுடன் சுந்தர் நன்றாக வீசினார். களத்தடுப்பு மிக நன்றாக இருந்தது. வேகப் பந்து வீச்சாளர்கள் சில போட்டிகளில் திணறினாலும் ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் அவர்கள் புதுப்பந்தில் அதிரடியான ஆபத்தான ஒரு கூட்டணியை அமைத்தாடினார்கள். ஒரு கட்டத்தில் துபேவின் பந்து வீச்சு சிறப்பாக மாறியது. குர்குரீத் கூட நன்றாக மட்டையாடினார். ஒரே சிக்கல் கோலியின் நிலையற்ற மனம் தான் - அவர் “விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸியைப் போல. சொந்த மனைவியைத் தவிர வேறு யார் விசயத்திலும் நிலையாக இருக்க மாட்டார். இன்னொருவர் அவருக்கு அறிவுரைத்து கட்டுப்படுத்தவும் முடியாது. 

நான் பெங்களூர் அணி உரிமையாளராக இருந்தால் கோலியை தலைவராக தொடர வைப்பேன். ஆனால் ஒரு தியானப் பயிற்சியாளரை அணியில் நியமித்து கோலியை தினமும் தியானம் செய்ய வைப்பேன். தகுதிச் சுற்று, இறுதிச் சுற்றுப் போட்டிகள் வரை முறுக்கேறி இருந்து விட்டு முக்கியமான கட்டத்தில் அணி காற்றிறங்கிய பலூன் போல் ஆகாமல் இருக்க உளவியல் தகுதியில் கவனம் செலுத்துவேன். கோலிக்கு இணையான - அல்லாவிடில் அவரை விட அதிகமான - அதிகாரத்தை பயிற்சியாளர்களுக்கு கொடுப்பேன். கோலியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் விடுவது ஒரு குழந்தையை காரோட்ட அனுமதிப்பதற்கு சமம். இரண்டு ஆண்டுகளில் எப்படியும் தோனி ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுவார். அன்று அவரை பெங்களூரின் பயிற்சியாளராக நியமிப்பேன். கோலிக்கு தோனியைப் போன்ற ஒருவர் பயிற்சியாளராகத் தேவை. கோலியை அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்ட ஒரு பயிற்சியாளர் தேவை. அப்போதும் அவர் உருப்படவில்லை என்றால் புதிய தலைவரைக் கண்டடையலாம்.


காம்பிரின் பேட்டியில் நான் ரசித்த வரிகள் இவை:


“Gambhir also said he felt for the support staff of the franchise, which has changed over the years, while the captain has remained the same. Gambhir said it was "very difficult" for people like Simon Katich and Mike Hesson because if the coaches or directors of the team were "blunt" and asked for the captain to be removed, "they'll be the first ones to be removed”

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...