Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கோலியை அணித்தலைமையில் இருந்து நீக்கலாமா?



நேற்றை தகுதிச் சுற்று போட்டியை பெங்களூர் அணி இழந்த நிலையில் கோலியின் அணித்தலைமை மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கௌதம் கம்பீர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். “கோலியைப் போல எட்டு வருடங்களாக வேறெந்த தலைவராவது ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் அணித்தலைவராக இருந்துள்ளாரா?” எனக் கேட்டுள்ளார். மஞ்சிரேக்கரும் கோலி பதவி விலகுவதே நியாயம் எனக் கூறியுள்ளார். ஆம், நேற்றைய போட்டியில் கோலியின் முடிவுகள், மட்டையாட்ட வரிசை, பந்து வீச்சுத் தேர்வு, அவரது நிதானமற்ற போக்கு அவரது அணியை தடுமாறவும் முக்கியமான வேளையில் நிலையிழந்து மோசமாக ஆடவும் வைத்தது என்பதை ஏற்கிறேன். நானே இக்கருத்துக்களை உயிர்மை டிவியின் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் நிகழ்ச்சியின் போது விரிவாக பேசினேன். ஆனால் அதே நேரம் இந்த ஆண்டு பெங்களூர் அணியின் ஆட்டம் மேலானதாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதற்கான பாராட்டுக்கள் அவர்களின் பயிற்சியாளர்கள், ஓரளவுக்கு முழுமையான, வலுவான அணியை தேர்வு செய்த கோலி மற்றும் ஒன்றாக இணைந்து போராடிய வீரர்களுக்கும் செல்ல வேண்டும். பெங்களூரின் துவக்க மட்டையாட்டம் (குறிப்பாக படிக்கல்லின் ஆட்டம்), இறுதி ஓவர்களின் அதிரடி ஆட்டம் நன்றாக இருந்தது. மத்திய வரிசையில் கோலியும் ஏ.பி.டியும் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றினர். சுழல் பந்து வீச்சில் சஹலுடன் சுந்தர் நன்றாக வீசினார். களத்தடுப்பு மிக நன்றாக இருந்தது. வேகப் பந்து வீச்சாளர்கள் சில போட்டிகளில் திணறினாலும் ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் அவர்கள் புதுப்பந்தில் அதிரடியான ஆபத்தான ஒரு கூட்டணியை அமைத்தாடினார்கள். ஒரு கட்டத்தில் துபேவின் பந்து வீச்சு சிறப்பாக மாறியது. குர்குரீத் கூட நன்றாக மட்டையாடினார். ஒரே சிக்கல் கோலியின் நிலையற்ற மனம் தான் - அவர் “விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸியைப் போல. சொந்த மனைவியைத் தவிர வேறு யார் விசயத்திலும் நிலையாக இருக்க மாட்டார். இன்னொருவர் அவருக்கு அறிவுரைத்து கட்டுப்படுத்தவும் முடியாது. 

நான் பெங்களூர் அணி உரிமையாளராக இருந்தால் கோலியை தலைவராக தொடர வைப்பேன். ஆனால் ஒரு தியானப் பயிற்சியாளரை அணியில் நியமித்து கோலியை தினமும் தியானம் செய்ய வைப்பேன். தகுதிச் சுற்று, இறுதிச் சுற்றுப் போட்டிகள் வரை முறுக்கேறி இருந்து விட்டு முக்கியமான கட்டத்தில் அணி காற்றிறங்கிய பலூன் போல் ஆகாமல் இருக்க உளவியல் தகுதியில் கவனம் செலுத்துவேன். கோலிக்கு இணையான - அல்லாவிடில் அவரை விட அதிகமான - அதிகாரத்தை பயிற்சியாளர்களுக்கு கொடுப்பேன். கோலியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் விடுவது ஒரு குழந்தையை காரோட்ட அனுமதிப்பதற்கு சமம். இரண்டு ஆண்டுகளில் எப்படியும் தோனி ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுவார். அன்று அவரை பெங்களூரின் பயிற்சியாளராக நியமிப்பேன். கோலிக்கு தோனியைப் போன்ற ஒருவர் பயிற்சியாளராகத் தேவை. கோலியை அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்ட ஒரு பயிற்சியாளர் தேவை. அப்போதும் அவர் உருப்படவில்லை என்றால் புதிய தலைவரைக் கண்டடையலாம்.


காம்பிரின் பேட்டியில் நான் ரசித்த வரிகள் இவை:


“Gambhir also said he felt for the support staff of the franchise, which has changed over the years, while the captain has remained the same. Gambhir said it was "very difficult" for people like Simon Katich and Mike Hesson because if the coaches or directors of the team were "blunt" and asked for the captain to be removed, "they'll be the first ones to be removed”

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...