Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வேளாண் சட்டங்களுக்கு முட்டுக்கொடுப்போரின் தயக்கம்



வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இச்சட்டங்களின் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிற கட்டுரைகளை, விளக்கங்களை பாஜக பக்கமிருந்து, நவதாராளத்துவ சிந்தனையாளர்கள் தரப்பில் இருந்தும் காணோம். இதுவே எனக்கு ஆச்சரியமளிக்கிறது - மாறாக, இது ஒரு நவதாராளாதவாத திட்டமல்ல, இது மக்கள் நலத்தை நோக்கமாக கொண்ட சட்டம் என முட்டுக் கொடுக்கிறார்கள். என்னதான் அதானியின் விமானத்தில் பறப்பவர் என்றாலும் தன்னை ஒரு ஏழைப்பின்புலத்தை சேர்ந்தவர் என காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்னதான் மத்திய வர்க்கத்தின் செண்டிமெண்டுகளை வெளிப்படுத்தினாலும் விளிம்புநிலையினருக்கான நலத்திட்டங்களை வடக்கே அதிகமும் கொண்டு வந்தே அவர் இரண்டாம் முறையும் பிரதமராக முடிந்தது.


பாஜக ஏன் பம்முகிறது என்றால், மக்கள் எதிர்ப்பு, விவசாயம், சிறுதொழில் வியாபாரம் எனும் பல கூர்முனைகள் கொண்ட ஒரு பெரும் ஆயுதத்தை பாஜக எதிர்கொண்டு “சத்தியமா வலிக்கல” என நடிக்கவும், நான் ஒரு சாத்வீகமான அன்பான ஆள் என வேடமணியவும் நேர்கிறது. இதனாலேயே பிரதமரும் அமைச்சர்களும் திரும்பத் திரும்ப சொன்னாலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. “இது உன் டயலாக் இல்லியே தம்பி” என பஞ்சாப், ஹரியானா வேளாண் மக்கள் சந்தேகிக்கிறார்கள்.


 சுவாரஸ்யம் இங்கு என்னதான் நமது கார்ப்பரேட் சார்பு அரசுகள் மொத்த நாட்டையும் சில பணக்காரர்களுக்கு விற்க விழைந்தாலும் இந்நாட்டின் பன்மையமான, பன்முகங்கள் கொண்ட நிலப்பரப்புகளும் ஜனங்களும் இன்னும் உயிருடன் இருக்கிற ஜனநாயகமும் இதை சுலபமாக்குவதில்லை. இந்த பின்னணியில் தான் “இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை சுலபத்தில் கொண்டு வர முடியாதபடிக்கு இங்கு ஜனநாயகம் ரொம்ப அதிகமாக உள்ளது” என நிதி ஆயோக்கின் அமிதாப் காண்ட் சொல்வதைப் பார்க்க வேண்டும்.


 யோசித்துப் பாருங்கள், இதுவே அமெரிக்கா என்றால் வேளாண் சட்டங்களை நவதாராளதாவ நவமணிகள் என அரசும் அரசின் ஆதரவாளர்களும் வெளிப்படையாக கொண்டாடி இருப்பார்கள்; அங்கு ஒரு சிறுபான்மை பெரும்பணக்காரர்கள் ஆவதே லட்சியம், இங்கோ பெரும்பகுதி மக்களின் இலக்கு நிம்மதியான, நிலையான வாழ்க்கை, பணத்துக்குப் பதிலாக விழுமியங்களை, பாரம்பரியத்தின் வேர்களை தழைக்க வைப்பது, குடும்பம், பிள்ளை, பேரப்பிள்ளைகள் பசியின்றி இருக்க ஒன்றாக சொந்த மண்ணில் வாழ்வது. நமக்கும் அமெரிக்கர்களுக்குமான முக்கிய வித்தியாசம் இது.


   அதனாலே இம்மண்னில் கார்ப்பரேட்டுகள் மீது ஒரு அவநம்பிக்கையும் அச்சமும் இன்னும் மக்களிடம் உள்ளது. அதனாலே கொரோனா காலத்தில் அமெரிக்காவில் மக்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அஞ்சி வீட்டிலேயே பதுங்கிக் கொள்ளும் அவலம் நிகழ்ந்த போது இந்தியாவால் மக்களுக்கு தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் அளிக்க முடிந்தது; வேலையில்லாத மக்களுக்கு சில மாநிலங்களில் இலவசமாக அத்தியாவசிய தானியங்களை கொடுத்து சமாளிக்க உதவினார்கள்; ஆனால் அமெரிக்க நவதாராளாவாத அரசுக்கு இத்தகைய மக்கள் நல அணுகுமுறை இருக்கவில்லை. அங்கு டிரம்பைப் போன்ற ஒருவர் தன் பெரும்பணத்தை, கார்ப்பரேட் செல்வாக்கை விளம்பரப்படுத்தி அதிபர் ஆகும் போது இங்கு செல்வத்தில் திளைக்கும் மோடி கூட தன்னை ஏழைத்தாயின் மகன் என்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அழைப்பதும், சில வருடங்களிலேயே பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராகி விட்ட எடப்பாடி தன்னை விவசாயி என முன்வைப்பதும் மட்டுமே தலைவராக நீடிக்க ஒரே வழியாக இருக்கிறது - இங்கு வெளிப்படையாக ஒருவர் தன்னை செல்வந்தர்களின் பிரதிநிதி என கோரிக்கொள்ள முடியாது; அதனாலே வெளிப்படையாக நீங்கள் மக்களின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்க, கீழ்த்தட்டு, கீழ்மத்திய வர்க்க மக்களின் வாழ்வுரிமைகளை பறித்தெடுத்து மத்திய மேற்தட்டு வர்க்கங்களை மட்டும் காப்பாற்றுகிற ஒரு அரசாக நீங்கள் இங்கு இருக்க முடியாது. அரசியலில் ஊழல் செய்து பெரும் சொத்துக்களை சம்பாதித்தாலும் அவற்றை பினாமிகளைக் கொண்டே கைக்கொள்ள முடியும். இந்த சின்ன தயக்கம் இருக்கும் வரை இந்தியா தப்பித்துக் கொள்ளும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...