Skip to main content

சிக்கன் மசாலா பிரெட் செய்முறை

முதலில் ஒரு விசயத்தை சொல்லி விடுகிறேன் - அடிப்படையில் பிரெட் என்பது மாவு, கொஞ்சம் வெண்ணெய் / எண்ணெய், உப்பு + சர்க்கரை, பேக்கிங் சோடா + பேக்கிங் பவுடர் (அல்லது) yeast சேர்த்து ovenஇல் வைத்து பேக் செய்து தயாரிப்பது. இதில் எதையும் கலந்து நீங்கள் விரும்புகிறபடியான பிரெட்டை தயாரிக்கலாம். அதாவது, எப்படி சாதத்துடன் சாம்பார் கலந்து சாம்பார் சாதம் பண்ணுவதைப் போல. எப்படி விதவிதமான சாதங்கள் உண்டோ அதே போல விதவிதமான பிரெட்டுகளும் பண்ணலாம். அப்படித்தான் நான் இந்த சிக்கன் மசாலா பிரெட்டையும் முயன்று பார்த்தேன் - பிரமாதமாக வந்திருக்கிறது. எப்படி செய்தேன் என சுருக்கமாய் சொல்கிறேன்.


1) முதலில் உலர் கலவை (dry ingredients): நான் ஒரு கோப்பை மைதா + ஒரு கோப்பை கோதுமை மாவு என எடுத்து கலந்து கொண்டேன். நீங்கள் விரும்பினால் இரண்டு கோப்பைகளுக்கும் மைதா மாவே எடுத்துக்கொள்ளலாம். இதில் தேவையான அளவுக்கு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், இரண்டு ஸ்பூன்கள் பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.


2) அடுத்து ஈரக் கலவை (wet ingredients):  தேவையான அளவுக்கு வெண்ணெய்யும் சன்பிளவர் எண்ணெய்யும் (அரை கப் வருமளவுக்கு) கலந்து அடித்து வைத்துக் கொண்டு அதனோடு இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து இம்மூன்றையும் நன்றாக அடித்து வைக்கவும். 


3) அடுத்து சிக்கன் மசாலா: எலும்பில்லாத சிக்கனாக 300 கிராம் வாங்கி அதை கழுவியபின் மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி கீமாவாக பண்ணி வைக்கவும். வாணலில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூன்று பச்சை மிளகாய்கள், கருவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்தபின், ஒரு நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி, அதில் இஞ்சி பூண்டு அரவை மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுத்து இதில் கால் ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு ஸ்பூன் மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து நான்கைந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின், சிக்கன் கீமாவை சேர்க்கவும். முக்கியமான விசயம் எந்த கட்டத்திலும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. எண்ணெய்யிலே முழுக்க சிக்கன் வேக வேண்டும். ஓரளவுக்கு வெந்த பிறகு அரை ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து கிளறி சில நிமிடங்கள் வேக வைக்கவும். இரு கை பிடி அளவுக்கு புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். சிக்கன் மசாலா ரெடி.


4) இறுதியாக உலர் கலவையில் ஈரக்கலவையுடன் சிக்கன் மசாலாவை படிப்படியாக கலந்து பிசையவும். இறுதி வடிவில் மாவு ஒட்டுபடியான ஈரத்தில் இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் சேர்க்கலாகாது. இறுக்கமாய் வந்தால் கூடுதலாக முட்டை சேர்த்துக் கொள்ளலாம். 


Ovenஐ 185 டிகிரி டெல்ஷிஸுக்கு 45 நிமிடங்கள் முன்-சூடு செய்யவும். 45 நிமிடங்கள் முடிந்ததும் இந்த மாவை mouldஇல் வைத்து உள்ளே வைக்கவும். 45-55 நிமிடங்களில் தயாராகி விடும். இருந்தாலும் அரை மணி போனதும் ஒருமுறை எடுத்து வெந்து விட்டதா சோதிக்கலாம் - ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வந்தால் தயார் என அர்த்தம்.


நான் இது தயாரான பின் சுவைத்த போது கிட்டத்தட்ட கொத்துப்பொரோட்டா சுவை கிடைத்திட மகிழ்ந்து போனேன் - நான் ஒரு அதிதீவிர கொத்துப் போரிட்ட ரசிகன் என்பதால்.


ஆர்வமுள்ளோர் முயன்று பாருங்கள். Oven இல்லாதவர்கள் குக்கரில் வைத்து கூட செய்யலாம். எப்படி என யுடியூபில் பாருங்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...