Skip to main content

கமலின் தில்லுமுல்லு: சூரப்பாவை போற்றுதல்

 







கமல் தன் முகத்தில் போலி உணர்ச்சிகள் வெடிக்க மய்யம் சேனலில் சூரப்பாவை ஊழலுக்கு எதிரானசூரராகப் போற்றிபேசியிருந்த காணொளியைக் கண்டால் ஒருவிசயம் சட்டெனப் புலனாகும்: இது குருமூர்த்தி போன்றவர்களின் தூண்டுதலால் நடக்கும் கவனம் திருப்பும் செயல்.

 சூரப்பா மீதான குற்றச்சாட்டு அவர் தன்னிச்சையாக, மாநில அரசிடம் போதுமான ஆலோசனை செய்யாமல், அண்ணா பல்கலையை மத்திய அரசின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வர முயல்கிறார், எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் இடம்பெற முடியாமல் வடக்கத்திய மாணவர்கள் அதிகம் இங்கு வந்து படிக்கிற அநீதியான சூழலுக்கு வழிவகை செய்கிறார் என்பது. நமது பல்கலைக்கழகங்களை சூறையாடுவது என்பது மத்திய அரசின் நீண்ட காலத் திட்டம். அதுவும் அண்ணா பல்கலைக்கழகம் எனும் உயர்தர கல்வி நிறுவனத்தை தனியாருக்கு ஒரு பக்கம் தாரை வார்த்து விட்டு, இன்னொரு பக்கம் எந்த சமூகநீதிக் கொள்கையையும் பின்பற்றாமல் வர்ணாசிரம அடிப்படையிலும், இந்தி-சார்பு மாநில மக்களுக்கு பயன்படும் வகையிலும் அங்கு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதுமே அவர்களின்தொலைநோக்குத்திட்டம். இதை செயல்படுத்தும் முகவராகவே பாஜக ஆதரவாளரான சூரப்பா இங்கு கொண்டு வரப்படுகிறார்.

 சூரப்பா மீது எப்போதெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் பாஜகவின் பெருந்தலைகள் கொதிப்பதைப் பார்க்கலாம். அதாவது நீங்கள் பிரதமரை விமர்சித்தால் கூட அவர்கள் பதற மாட்டார்கள், ஆனால் சூரப்பா மீது தூசு விழுவதை பொறுக்க மாட்டேன் என்கிறார்கள். ஏனென்றால் அவர் அஸ்திரம் மட்டுமே, அவரை ஏவி விட்டவர்கள் கல்வியை ஒற்றைமயப்படுத்தும் பாஜகவின் சித்தாந்தத் தலைமையும் அரசு நிதியால் உருவாக்கப்பட்ட பல்கலைகளை தம் வயப்படுத்த துடிக்கும் சங்கி பணமுதலைகளுமே. எப்படி தூதுவர் மீது கைவைத்தால் எதிரி நாடு துடிக்குமே அப்படியே சூரப்பா மீது விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கும் அவர்கள் துடிக்கிறார்கள்.

 இவ்விசயத்தில், சூரப்பாவை அவரது தமிழக விரோத கொள்கையை நியாயப்படுத்தி பேச முடியாது என பாஜக அறியும். ஆக, திசைதிருப்ப ஒரு சக்தி தேவை. அதற்காக களமிறக்கப்பட்டவரே கமல். தன் பேச்சில்சூரப்பாவின் அரசியலை நாம் அறிவோம்என சேம் சைட் கோல் அடிக்கும் கமல் ஆனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம், ஊழலைப் பற்றி பேசுவோம் என்கிறார். 60 லட்சம் வாங்கிக் கொண்டு பேராசிரியர் நியமனம் நடப்பது நீண்ட காலமாய் உள்ள ஒரு பிரச்சனை, ஆனால் அதற்கும் சூரப்பா விவகாரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை சென்றால் அதைவிட அதிகமான பணத்தை ஆர்.எஸ்.எஸ்-பாஜக தலைமை பெற்றுக் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஆட்களை நியமனம் செய்வார்களே தவிர ஊழல் ஒழியப் போவதில்லை. ஊழல் என்பது ரேஷன் பொருள் கொள்முதல் துவங்கி கொரோனா முகமூடி கொள்முதல் வரை இருக்கலாம், ஆனால் அதற்காக அத்தனையையும் நீங்கள் மத்திய அரசிடம் ஒப்படைப்பீர்களா? அதுதான் தீர்வா? இல்லை.

 அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்குக் காரணம் பொருளாதார வலிமையே அரசியல் அதிகாரமாக மாறுகிறது, கடந்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட்-அரசியல் தலைவர் கூட்டணி என்பது (மோடி-அதானி) ஒரு தவிர்க்க முடியாத கூட்டமைப்பாக தோன்றி விட்டது என்பது. ஊழல் என்பது நவதாராளவாத பொருளாதாரத்தின் ஒரு நோய்க்குறி. இந்த பொருளாதார அமைப்பில் - சமூகநீதி சார்ந்து - சீர்திருத்தங்கள் செய்யாமல் ஊழலை ஒழிக்க முடியாது. அன்னா ஹசாரே துவங்கி அவ்வப்போது தோன்றி ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் வரை இதை ஒரு ஒழுக்கப் பிரச்சனையாக எளிமைப்படுத்தி முன்வைப்பதை கவனியுங்கள். இவர்கள் யாருமே ஊழலில் பெருமுதலாளிகளுக்கு உள்ள பெரும்பங்கைப் பற்றி, ஊழலின் அச்சாணியாக உள்ள அம்பானி, அதானிகளைப் பற்றி பேச மாட்டார்கள். இவர்கள் எப்போதுமே பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக பினாமியாக நின்று உழைப்பவர்கள். ஊழலுக்கு எதிராக பெரிய இரைச்சலைக் கிளப்பி, ஊடகங்களில் மாதக்கணக்கில் இடம்பெற்று, அதைக் கொண்டு மோடி அரசை அரியணை ஏற்றி விட்டு ஏன் அன்னா ஹசாரே ஒரேயடியாக அரசியலே பேசாமல் ஒதுங்கி விட்டார் என யோசியுங்கள். அவர் தனக்கு அளிக்கப்பட்ட அசைன்மெண்டை நிறைவேற்றி விட்டார். கமலும் இப்போது அப்படியே. மாநில நலன்கள் பாசிச-கார்ப்பரேட் சக்திகளுக்கு இரையாக்கப்படுவதை நாம் எதிர்க்கும் போது அவர் குறுக்கே வந்துவாங்க ஊழலைப் பற்றி பேசுவோம்என்கிறார். சூரப்பா இங்குள்ள ஊழலை எதிர்த்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க முயன்றார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? மத்திய அரசின் கீழுள்ள பல்கலைகள், நிறுவனங்களில் ஊழல் இல்லையா? ரபேல் ஊழல் என்றால் என்ன? இது மிக எளிமையான ஒரு கவனம் திருப்பும் உத்தி.

 இனிமேல் சூரப்பா என்றால் ஊழல் எதிர்ப்பு போராளி, அன்னா ஹசாரே 2.0 எனும் பிம்பம் உருவாக வேண்டும், இதைக் கொண்டு அண்ணா பல்கலையை ஆர்.எஸ்.எஸ் கைகாட்டும் பெருமுதலாளிகளுக்கு நாம் தாரை வார்க்க வேண்டும். தனியார்மயம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என சில பத்தாம்பசலிகள் பேசிக் கொண்டிருப்பார்கள், ஆனால் தனியார் வந்த பின் தான் இங்கு ஊழல் பெருத்து விட்டது என்பது அவர்கள் கவனிக்க மாட்டார்கள். கமலும் அப்படியான ஒருவரே.

 கமலின் மய்யம் யுடியூப் சேனலைப் பாருங்கள்: உப்புசப்பில்லாத பிரச்சனைகளைப் பற்றி அவ்வப்போது சில காணொளிகளை பதிவேற்றுவதைத் தவிர அதில் வேறெந்த அன்றாட அரசியல் பிரச்சனைகளைப் பற்றிய பதிவும் இல்லை. திடீரென இந்த சூரப்பா விவகாரத்தில் கமல் வெண்தாடியுடன் கண்களை உருட்டி உருட்டி வந்து பேசுவது நிகழ்கிறது. ஏன் இந்த திடீர் அரசியல் அறிக்கை இப்போது வருகிறது? குருமூர்த்தி அழைத்து பேச சொன்னாரா? இல்லை, எல்.முருகனா?


தேர்தலுக்கு ஆறு மாதங்கள் வரை கமல், ரஜினி போன்றோர் யாரிடமெல்லாம் போனிலும் நேரடியாகவும் பேசுகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு அம்பலபடுத்த வேண்டும். இது போன்ற மூன்றாம் அணிகள் பி-டீம்களாக மாறி மக்களை ஏமாற்றாமல் இருக்க இது அவசியம். இதை ஒரு தனி சட்டமாகவே ஆக்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...