முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினியின் நகல் கலைஞர்களும் ரஜினியின் நகல் எளிமையும்


 

பிறந்த நாளன்று தன்னை வாழ்த்த வந்த நகல் கலைஞர்கள் விசயத்தில் ரஜினி பண்ணியிருக்க வேண்டியதெல்லாம் கேட்டுக்கு வெளியே வந்து “நன்றி” என கைகூப்பி, ‘உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா?’ எனக் கேட்டிருக்க வேண்டியது தான். ஏன் குருமூர்த்தி வந்திருந்தா இப்படி வீட்டுக்குள்ள பதுங்கி இருந்திருப்பீங்களா? மாட்டீங்க தானே? ஒரு புரோக்கருக்கு கொடுக்கிற மரியாதை ஏன் எளிய மக்களுக்கு தர மாட்டேங்குறீங்க மிஸ்டர் ரஜினி?


அவரா இவர்களை வேடம் போட்டு தன் வீட்டு வாயிலுக்கு வரச் சொன்னார் என நீங்கள் கேட்கலாம் - இல்லை தான், ஆனால் வாழ்த்துப்பவர்கள் என்ன வேடமிட்டு வந்தாலும் நன்றி சொல்வதே நாகரீகம். ஒரு கட்சித் தலைவருக்கு இதுகூடத் தெரியவில்லை என்றால் எப்படித்தான் அரசியல் நடத்துவீர்களோ? மக்களை இந்தளவுக்கு வெறுக்கிற, மக்களோடு உரையாடுவதில் அசூயை கொண்ட ஒரு unfriendlyஆன மனிதர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?


இன்னொரு பக்கம், இந்த கலைஞர்களை கூத்தாடிகள், பைத்தியங்கள் என பழிப்பதை, பகடி செய்வதை ஏற்க மாட்டேன். என்னதான் ரஜினி, குருமூர்த்தி, பாஜக கும்பல் மீதுள்ள கோபம் அப்படி மடைமாறி இந்த எளிய மக்கள் மீது பாய்ந்தாலும் அது நியாயமல்ல. இதுவே அவர்களின் இருப்பு, அவர்களின் பிழைப்பு. எல்லா காலத்திலும் இத்தகைய மக்கள் இருப்பார்கள்! நம்மிடையில்லும் பல்வேறு சொரூபங்களில் நகல் மனிதர்கள் இருக்கிறார்கள். பிரச்சனை இவர்களை இந்த மாபெரும் ஆளுமைகள் ஏதோ சொறி நாயைப் போல நடத்தும் விதம் தான்.


 ரஜினி என்னதான் தான் எளிமை, கருமை, கடமை என வேடம் போட்டாலும் நுண்ணுணர்வற்ற மனிதர் என்பதை பல இடங்களில் காட்டியிருக்கிறார். இது மற்றொரு சான்று. பல சிறந்த நடிகர்கள், எழுத்தாளர்கள் மோசமான மனிதர்களாக இருப்பதுண்டு. ரஜினியும் அப்படியே. ஒரே வித்தியாசம் அவர் பொது வாழ்க்கையிலும் அவ்வப்போது ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட, பாபாவின் அருள் பாலித்த, பணத்தில் புகழில் ஆசையற்ற வெள்ளாந்தி மனிதர் என வேடம் போடுவார். எல்லா வேடங்களைப் போன்றும் அவ்வப்போது அந்த அரிதாரமும் கலைந்து போகும்.


மிஸ்டர் ரஜினி, நீங்கள் நல்லவராக, பாபாவாக, உயர்ந்த மனிதனாக இருக்க வேண்டாம். நாகரிகத்துடன் இருங்கள். பிடிக்குதோ இல்லையோ, உங்களை அண்டியிருக்கும் மனிதநேயத்துடன் கலைஞர்களை அங்கீகரியுங்கள். குண்டடிபட்டு சாகும் மக்களை நுண்ணுணர்வின்றி சமூகவிரோதிகள் என இனிமேல் காறித் துப்பாதீர்கள். அடிப்படையான நாகரிகத்துடன் இருங்கள். அதற்கு பாபாவெல்லாம் தேவையில்லை. போலி பவ்யத்தை, போலி ஆன்மீகத்தை கழற்றி வைத்தால் போதும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...