Skip to main content

கல்வியில் ஏற்பட வேண்டிய சீர்திருக்கங்கள் (1)





நேற்று ஒரு நண்பரிடம் நமது பள்ளிக் கல்வி முறையில் கொண்டு வர வேண்டிய சில சீர்திருக்கங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இது குறித்த என் கருத்துக்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.


1. சந்தையில் இன்று உள்ள தவிர்க்க முடியாத பண்டம் கல்வி. கல்வி தனியார்மயமானது மக்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகமாக்கி, பெற்றோர்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து, ஜி.எஸ்.டி மூலம் வரி வசூலை அப்படியே மத்திய அரசே அபகரித்து விடுகிறது. மேலும் பல வரிகளையும் வருடாவருடம் அரசு இழந்து வருகிறது, இழக்கப் போகிறது. இந்த சூழலில் மாநில அரசு தனக்கான வருமானத்தை அதிகப்படுத்த ஒரு வழி கல்வியில் தனியாரிடம் இருந்து மூன்றில் ஒரு பங்கை தன் வசம் கொண்டு வருவது.

2.  முதற்கட்டமாக, ஒரு சட்டம் இயற்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை அங்கு வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அடுத்து அங்கு செயல்பட அனுமதிக்கப்படும் பள்ளிகளில் மூன்று இரண்டு மடங்கு அரசின் பள்ளிகளாக இருக்க வேண்டும். இந்த பள்ளிகளை இலவசம், கட்டணம் என இரண்டாக பிரிக்க வேண்டும். பெற்றோரின் வருமான சான்றிதழின் படி ஏழைப் பிள்ளைகளுக்கு மட்டுமே இலவசப் பள்ளிகளில் அனுமதி அளிக்க வேண்டும். மத்திய வர்க்க, மேல் மத்திய வர்க்க பிள்ளைகளுக்கு அவர்கள் ஏற்கனவே தனியாரில் செலுத்தும் கட்டணத்தில் பாதியை வசூலிக்கலாம். தனியாரில் உள்ள அதே கட்டமைப்பு, வசதிகள் இப்பள்ளிகளிலும் இருக்க வேண்டும். ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அரசிலே அதிகத் திறமையான தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சனையில்லை. இரண்டு விதமான பள்ளிகளில் ஒரே தரம், கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் - கட்டணத்தை தவிர எந்த வித்தியாசமும் தெரியக் கூடாது.

3.  பள்ளிகளின் எண்ணிக்கை குறைவதால் மக்கள் கணிசமாய் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கே அனுப்பும் நிலை ஏற்பட்டு, அரசின் வருமானம் பெருமளவில் கூடும். 

4. அடுத்து, 12ஆம் வகுப்பு வரை பிள்ளைகளின் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்; பிள்ளைகள் பாதியில் நிற்பதற்கான பிரதான காரணம் வறுமை அல்லது தேர்வில் தோற்பதாக உள்ளது. இதை சரி செய்யும் நோக்கில் இப்போதுள்ள வருட இறுதி தேர்வுமுறையை ரத்து செய்து, தொடர் மதிப்பீட்டு முறை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதில் மதிப்பெண்ணுக்குப் பதில் கிரேட் முறை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் பெறும் மதிப்பீட்டை அவர் மட்டுமே அறிந்திருக்க வேண்டும். பொதுவில் வெளியிடக் கூடாது - இது ஏற்கனவே சில மேற்கத்திய நாடுகளில் உள்ள முறை தான். இதன் மூலம் தேர்வின் போது மாணவர்கள் அனுபவிக்கும் நெருக்கடி இல்லாமல் ஆகும். மதிப்பெண் அன்றி கற்றலே இலக்காகும்.

5.  மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளிலும் எழுத்து பொதுத்தேர்வு இருக்கக் கூடாது - மாறாக மாணவர்கள் செய்யும் ஆய்வு புரோஜெக்டுகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இதன் மூலம் டியூஷன், பயிற்சி மையங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டலாம். CBSE, மாநில பாடத்திட்டம் என உள்ள வேறுபாடுகளும் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளலாம் (மாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து பெயர்ந்து வரும் மாணவர்களுக்கு.)

அ) இதனால் அரசின் வருமானம் பெருகும் - இது டாஸ்மாக் விசயத்தில் ஏற்கனவே தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்குகிற பாணி தான். அப்படியே கல்வி நிலையங்களுக்கும் கொண்டு விடலாம். 

ஆ) இதை தனியார் பள்ளிக்கூடங்களின் கூட்டமைப்புகள் எதிர்க்கும் - ஆனால் அங்கு பணி செய்யும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஏனென்றால் அவர்களின் பணி நிரந்தர அரசுப் பணியாக உறுதி செய்யப்படும்; அதே வேலை, ஆனால் அதிக சம்பளம், நிலையான பணி என அவர்கள் நிம்மதி அடைவார்கள். இப்பள்ளிகளில் படிப்பதால் தனியாரில் உள்ள அதே தரம், ஆனால் பாதி கட்டணம் என்பதால், அங்கு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வரிக் குறைப்பு, அம்மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனும் அனுகூலங்கள் இருப்பதால் மக்களும் ஆதரிப்பார்கள். 

ஈ) அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த கவலைகள், அவை மக்களின் வரிப்பணத்தில் நடக்கின்றன எனும் புலம்பல்கள் மறையும் - இப்போது அரசு தான் ஈட்டும் பணத்தைக் கொண்டே இலவச கல்வி உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்.

உ) உள்கட்டமைப்புகளுக்கு எங்கே போவது? எப்படி ஒரு சாலை வரும் போது அரசு மக்கள் நிலங்களை எடுத்துக் கொள்கிறதோ அப்படியே தான். இச்சட்டம் வந்த பின் எப்படியும் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடங்களை விற்கவோ இடிக்கவோ வேறு விசயங்களுக்கு பயன்படுத்தவோ பூட்டி வைக்கவோ கூடாது என ஒரு சட்டம் போட்டு விட்டால் (இதற்கு எதிராக நீதிமன்றங்களுக்கு போகக் கூடாது, இதில் அரசுக்கு மட்டுமே விதிவிலக்கு எனவும் சட்டம் போட்டால்) அவர்களில் பாதி பேர் அரசுக்கே குறைந்த விலையில் கொடுத்து விடுவார்கள். ஒரு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியாக செயல்பட போகும் தனியார் பள்ளிகளுக்கான உரிமம் அளிப்பதில் இப்படி விட்டுத் தரும் நிர்வாகங்களுக்கு முன்னுரிமையும், வரிசலுகையும் கொடுக்கலாம் - இது நியாயமா என்றால் பெரும்பகுதி மக்களுக்கு பயன்படும் எதுவுமே - அது சிறுபான்மையை வருத்தினாலும் - நியாயம் தான்.   


(இப்படியான திட்டங்களைக் குறித்து சிந்திக்கிற துணிச்சலும் முன்யோசனையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்தது - அவருக்கு கருத்தியல் தெளிவு இல்லையென்றாலும். அவ்விதத்தில், அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு தான்.)

Comments

மாநில அரசில் 1 முதல் 8 வகுப்பு வரை CCE எனப்படும் Continuous and comprehensive Evaluation என்ற முறைதான் கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. 40 மதிப்பெண்கள் Formative Assessment முறையிலும் ( இதில் இரண்டு வகை FA 1, FA 2) 60 மதிப்பெண்கள் Summative Assesment (வழக்கமான தேர்வு) முறையிலும் கணக்கிடப்படுகிறது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே காணமுடியும்.சிபிஎஸ்ஸி பள்ளிகளை விட தமிழக அரசு பள்ளிகளில் சிறப்பாக பின்பற்றப் படுகிறது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...