செய்தி:
"சிரஞ்சீவி தெலுங்கு அரசியலில் தனக்கு நிகழ்ந்த சொந்த அனுபவத்தை ரஜினியிடம் முழுமையாக விவரித்தார். சிரஞ்சீவி, `பல அழுத்தங்களுக்கு மத்தியில் அரசியலில் வெற்றியை அடைவது மிகவும் கடினம். நீங்கள் வெற்றியை அடைந்து ஆட்சிக்கு வந்தால் பரவாயில்லை, ஆனால், தேர்தலில் வெற்றி பெறத் தவறினால், நீங்கள் இழிவாகப் பார்க்கப்படுவீர்கள். அரசியல் ஒரு நபருக்கு நிறைய உடல் மற்றும் மன அழுத்தங்களை ஏற்படுத்தும். பலவீனமான ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எனவே, இப்போது அரசியலில் நுழைவது நல்லதல்ல' என்று ரஜினியிடம் கூறினார்."
# எதிர்பார்த்தது தான். பத்து ரூ போட்டால் நூறு ரூ கிடைக்கும் எனச் சொன்னால் நான் எதுக்கு என் பத்து ரூபாவை இழக்கணமுன்னு யோசிப்பார் ரஜினி. தேர்தலில் வெற்றி பெறாமல் போனால் நம் படங்களுக்கு, சொத்துக்கு பிரச்சனை வருமோ என யோசித்து பயந்து போனார். தோல்வி உறுதி என அவரது நண்பர்களும் கருத்துக்கணிப்பும் சொல்லியிருக்கலாம்.எதிர்மறையாக சிந்திக்கும் போது நாம் பொதுவாக அந்த டிராக்கில் பேசி நியாயங்களைப் பேசுகிறவர்களுக்கு காதைத் திறந்து வைத்து காத்திருப்போம் என்பது அடிப்படையான மனித உளவியல். அப்படித்தான் சிரஞ்சீவி சீனில் நுழைகிறார். எச்சரிக்கிறார். ரஜினி அதைக் கேட்கத் தானே தயாராக இருந்திருப்பார்.
இதில் தமாஷே ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக நம் ஊடகங்கள் ஊதிப் பெருக்கியது தான். அவர்கள் தான் ரஜினி ரசிகர்களை விட அவமானப்பட வேண்டும்.
அடுத்தது, விஜய்க்காக அவர்கள் காத்திருப்பார்கள்!
Comments