Skip to main content

ஆண்டவர் இலக்கியத்துக்கு செய்யும் கொடுமைகள்!



பிக்பாஸ் 4இன் இறுதி நாளில் சுப்பிரமணிய ராஜுவின் கவிதை எனச் சொல்லி ஆண்டவர் ஒரு ஆபாசமான “கவிதை” என ஒன்றை வாசித்தார். ரப்பர் வளையல்களை கண்டுப்பிடித்தவன் ஒரு ஒண்டுக்குடித்தன ‘குடும்பியாம்’, ஏனென்றால் அப்போது தான் உடலுறவின் போது ஒலி எழுப்பாதாம். அதுக்கு, வளையலை கழற்றி வைத்தால் போதாதா? இதெல்லாம் கவிதையா? அடக் கொடுமையே!  சுப்பிரமணிய ராஜூவுக்குத் தான் நவீன கவிதை தெரியவில்லை என்றால் கமலுக்கு கடந்த 60 ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதை குறித்த ஒன்றுமே தெரியவில்லை. அவர் இன்னமும் பாரதிதாசன் எழுதிய பாடல்கள், பாரதியின் வசன கவிதை, வாரமலர் டபுள் மீனிங் வரிகள் போன்றவற்றையே கவிதை என நம்பிக்கொண்டு இருக்கிறார். நவீன கவிதை கூட படிக்க வேண்டாம், கடந்த பத்து வருடங்களின் ஆனந்த விகடன் இதழ்களை கவனித்திருந்தால் கூட அவருக்கு இன்று தமிழ்க் கவிதை என்ன இடத்தில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். அதனாலே அவர் இன்னமும் பழைய சந்தத்துடன் உளறலாக எதையெதையோ கவிதை என முன்வைத்துக் கொண்டிருக்கிறார். அதை இன்று அவர் பாடிக்காட்டிட சோம் தாளம் போட்டார். அதை முன்பு ஆண்டவர் இதே பிக்பாஸில் அவர் சொல்லிக் காட்டியதைக் கேட்ட ஷங்கர் மகாதேவன் போன் செய்து “இது பாரதியார் எழுதினதா சார்?” எனக் கேட்டாராம். அதைக் கேட்டு ஆண்டவர் நெகிழ்ந்து போனாராம். பாரதியின் ஒரு பாடலைக் கூட படிக்காதவர் மட்டுமே அப்படிக் கேட்க முடியும். அதை ஒரு பாராட்டாக நினைக்க நீங்கள் அதை விட பெரிய தற்குறியாக இருக்க முடியும். இந்த கொடுமைக்கு சரியான செருப்படி எதிர்வினையை அளித்தது சோம் தான் - அவர் கமல் இந்த ‘கவிதை வாசிப்பை’ முடித்ததும் “சார் அண்ணாத்த ஆடுறார் பாட்டைப் பாடுங்களேன்” எனக் கேட்டார். கமலின் இடம் உண்மையிலே அதுதான். 


ஒரு வேண்டுகோள்: அரசியலில் இருந்தும் கமல் ஓய்வு பெறும் நாள் ஒன்று வரும். இதுவரை நவீன இலக்கியத்தில் (அல்லது வணிக இலக்கியம் தவிர) எதையுமே படிக்காமல் அப்புத்தகங்கள் பற்றி சொல்லப்படுவதைக் கேட்டோ வாசித்தோ தானே வாசித்ததாக ஒரு பாவனை பண்ணுவதில் கமல் புளகாங்கிதம் கொண்டு வந்துள்ள ஒய்வுக் காலத்தில் நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தையாவது படிக்க வேண்டும்! நீங்கள் ஒரு சிறந்த நடிகர். அதனாலே நீங்கள் ஒரு நல்ல வாசகர் ஆக முடியாது. உங்களுக்கு ஜால்ரா அடிக்க இலக்கியவாதி நண்பர்கள் இருக்கிறார்கள். அதனாலும் நீங்கள் ஒரு நல்ல வாசகர் ஆக முடியாது. எப்போது நீங்கள் நல்ல வாசகர் ஆவீர்கள் என்றால் சந்தத்துடன் படிப்பது பாடல் ஆகுமே ஒழிய கவிதை ஆகாது எனும் ஒரு அடிப்படைப் புரிதல் என்று வருமோ அப்போது தான். எனக்கு உள்ள ஒரே வருத்தமே பேஸ்புக்கில் பல்லாயிரம் பேருக்கு உள்ள அந்த புரிதல் கூட உங்களுக்கு இன்னும் வரவில்லை என்பது. இந்த லட்சணத்தில் நீங்கள் தமிழ்நாட்டுக்கே “எப்படி புத்தகம் வாசிக்கணும்?” என பாடமெடுக்கிறீர்கள் என்பது எப்படியான பாமரத்தனமான சமூகத்தில் வாழ்கிறோம் எனக் காட்டுகிறது. (இது நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்களின் தரத்தை குறைப்பதில்லை.) 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...